சீனா உடனான உறவு இயல்பாக இல்லை!: சைப்ரஸில் வெளியுறவு அமைச்சர் பேச்சு

புதுடெல்லி: சீனாவுடனான இந்திய உறவுகள் இயல்பானதாக இல்லை என்று சைப்ரஸ் நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது முதல் அதிகாரபூர்வ பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் முன்னாள் சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் நிக்கோஸ் கிறிஸ்டோடோலிட்ஸை சந்தித்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசானது, … Read more

யார் பெற்றது ஆண் குழந்தை..?: குழப்பத்தில் மருத்துவமனை..!

தெலுங்கானா மாநிலம் மாஞ்செரி அரசு மருத்துவமனையில் பவானி மற்றும் மம்தா என 2 கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 27-ம் தேதி இரவு இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு ஒருவருக்கு ஆண் குழந்தையும், மற்றொருவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது.அவசர கதியில் குழந்தைகளை எடுத்துச் சென்று மருத்துவமனை ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது, யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை அவர்கள் பதிவு செய்ய மறந்து விட்டனர். சிகிச்சை முடிந்ததும், எந்த குழந்தையை யாரிடம் … Read more

அமித்ஷா ஒரு அரசியல் வியாபாரி…! சித்தராமையா காட்டம்…

அமித்ஷா ஒரு அரசியல் வியாபாரி என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடாகவின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் பா.ஜ.க. குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் முதலமைச்சர் பதவியை 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வைத்த அமித்ஷா, காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது வேடிக்கையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் பா.ஜ.க. உருவானதில் இருந்தே ஊழல் குடியிருப்பாக மாறிவிட்டது என்றும், இதில் அமித்ஷாவின் … Read more

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம்

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணைப்படி ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் மார்ச் 27-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5-ம் தேதி தேர்வு முடிவடைகிறது. இதற்கான அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. அதில், தற்போது ஒரு திருத்தம் … Read more

மலிவு விலையில் ஜெனரிக் மருந்துகள் – மத்திய அரசு நடவடிக்கை!

நாடு முழுவதும் 766 மாவட்டங்களில் 743ஐ உள்ளடக்கிய 9,000க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிரதமர் மலிவு விலை மருந்துகள் திட்டம் நவம்பர், 2008ஆம் ஆண்டில், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துத் துறையால் தொடங்கப்பட்டது. 3,000 மருந்தகங்களைத் திறக்க வேண்டும் என்ற இலக்கு 2017ஆம் … Read more

புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரில் போலி மருந்து தயாரித்து விநியோகம்: கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு கடிதம்

புதுடெல்லி: புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகளை தயாரிக்கும்  கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகள்  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் காம்பியா  மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சப்ளை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்டு  50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.   … Read more

வழிபாட்டு தலங்களுக்கு நள்ளிரவு 2 மணி வரை அனுமதி..!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களுக்கு நள்ளிரவு 2 மணி வரை அனுமதி அளித்து கலெக்டர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுமக்கள் முககவசம் அணியவேண்டும், சமூக இடை வெளியை கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து புத்தாண்டு கொண்டாட புதுச்சேரிக்கு இப்போதே ஏராளமானோர் வந்து குவிந்துள்ளனர். இன்னும் அதிக பேர் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி … Read more

நக்ஸல் பிரச்சினை குறித்து பிரதமரிடம் பேசினேன்: சத்தீஸ்கர் முதல்வர்

புதுடெல்லி: சத்தீஸ்கரில் நக்ஸல் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக எடுத்துக்கூறியதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசினார். பிரதமரின் இல்லத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின்போது, சத்தீஸ்கர் மாநில பழங்குடி வகுப்பைச் சேர்ந்த கணவன் – மனைவி சிலையை பிரதமர் நரேந்திர மோடிக்கு பூபேஷ் பெகல் பரிசாக வழங்கினார். … Read more

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்; மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உறுதி.!

2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருப்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,‘‘காங்கிரஸின் நாடு தழுவிய பாரத் ஜோடோ யாத்திரையை வழிநடத்தியதற்காக ராகுல் காந்தியைப் பாராட்டிகிறேன். அவர் அதிகாரத்திற்காக அல்ல, ஆனால் நாட்டின் சாமானியர்களுக்காக அரசியல் செய்கிறார். 2024 லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை, ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளின் முகமாக மட்டும் இருக்காமல், அதன் பிரதமர் வேட்பாளராகவும் இருப்பார். உலக … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் வாக்குப்பதிவு: இந்திய தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு திமுக கடும் எதிர்ப்பு..!!

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துவதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சொந்த ஊர்களை விட்டு இந்தியாவிற்குள்  வேறு மாநிலங்களில் பணியாற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் வாக்குப்பதிவு முறையை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதற்காக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஜனவரி 16ம் தேதி ஆணையம் செயல் விளக்கம் தருகிறது. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் அரசியல் காட்சிகள் கருத்துக்களை அனுப்பவும் தேர்தல் … Read more