மைசூருவில் கார் விபத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் காயம்: இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனத் தகவல்

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் மைசூருவில் விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த பிரஹலாத் மோடி உள்ளிட்ட 6 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி (66). தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அரண்மனையை பார்த்துவிட்டு பந்திப்பூர் தேசிய உயிரியல் பூங்காவுக்கு மெர்சடிஸ் பென்ஸ் எஸ்யூவி காரில் சென்றார். கட்கலா … Read more

கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீது சரிதா நாயர் கூறிய பாலியல் புகாரில் உண்மையில்லை: நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை

திருவனந்தபுரம் : கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீது சேலார் பேனல் மோசடியில் சிக்கிய சரிதா நாயர் கூறிய பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என நீதிமன்றத்தில்  சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகம், கேரளாவில சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக தொழிலதிபர் சரிதா நாயர் மீது புகார் எழுந்தது. உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இந்த முறைகேடு நடந்தது. இந்த சம்பவம் ெதாடர்பாக … Read more

ஆந்திரா | சந்திரபாபு நாயுடுவின் பேரணியில் கூட்ட நெரிசல் – கால்வாயில் விழுந்து 8 பேர் உயிரிழப்பு

நெல்லூர்: ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சாலைப் பேரணியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். சந்திரபாபு நாயுடு, “இதேமி கர்மா மன ராஷ்டிரனிகி (நம் மாநிலம் ஏன் இந்த விதியை எதிர்கொள்கிறது?)” என்ற பிரச்சாரத்தை ஆந்திர மாநிலத்தில் யாத்திரை சென்றுவருகிறார். பேரணியின் ஒருபகுதியாக கந்துகூர் நகரில் ஒரு கூட்டத்தில் உரையாற்ற இருந்தார். அதன்படி, நாயுடுவின் கான்வாய் மாலையில் அப்பகுதியை அடைய தொடங்கியதும் … Read more

சபரிமலைக்கு வருபவர்களிடம் வசூல் வேட்டை ஐயப்ப பக்தர் வேடத்தில் கேரள போலீஸ் ரெய்டு: பணம், மிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல்

செங்கோட்டை : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஆரியங்காவு போக்குவரத்து சோதனை சாவடியில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து கேரள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் படையினர் ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து ஆரியங்காவிலுள்ள கேரள மாநில போக்குவரத்து சோதனை சாவடி நேற்று முன்தினம் சென்றனர். ஐயப்ப பக்தர்களுக்கு பின்னால் இவர்களும் வரிசையில் நின்றனர். அப்போது அலுவலகம் முன், ஏஜென்ட் ஒருவர் நின்று ஆட்டோ டிரைவர்களிடமும் ஐயப்ப பக்தர்களிடமும் பணம் வசூலித்து சீல் … Read more

ஓபிசி இடஒதுக்கீடு இல்லாமலேயே உ.பி. உள்ளாட்சி தேர்தலை நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு(ஓபிசி) இடஒதுக்கீடு இல்லாமலேயே உள்ளாட்சித் தேர்தலை உத்தரபிரதேச அரசு நடத்த வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. உபாத்யாய், சவுரவ் லாவனியா ஆகியோர்அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் நேற்று … Read more

தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து எடப்பாடியை பொதுச்செயலாளராக இந்திய சட்ட ஆணையம் அங்கீகாரம்

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்துள்ள கட்சியின் வரவு செலவு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவித்து அவரை இடைக்கால பொது செயலாளராக அங்கீகரித்திருந்தது. இந்நிலையில், ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறையின் கீழ் செயல்படும் சட்ட விவகாரங்களுக்கான இந்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக.வின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து கடிதம் அனுப்பி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கடந்த மாதம் … Read more

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்க: மத்திய உள்துறை அமைச்சருக்கு காங்கிரஸ் அவசர கடிதம்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எழுதியுள்ள கடித விவரம் வருமாறு: ”ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த 24ம் தேதி டெல்லி வந்தபோது அதிக அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ராகுல் காந்தி Z+ பாதுகாப்பைப் பெற்றவர். ஆனால், அவருக்கு உரிய பாதுகாப்பை டெல்லி … Read more

ராகுல் காந்தியை ராமராக நான் உருவகப்படுத்தவில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் திடீர் மறுப்பு..!!

டெல்லி: ராகுல் காந்தியை ராமராக உருவகப்படுத்தி பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தாம் அவ்வாறு பேசவில்லை என்று தீடிரென மறுத்துள்ளார். ராமர் பாதையில் ராகுல் காந்தி செல்வதாகவே தாம் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தில் உள்ள ராகுல் காந்தி டெல்லி கடும் குளிரில் டீஷிர்ட் மட்டுமே அணிந்துகொண்டு செல்வது குறித்து சல்மான்  குர்ஷிதிடம் கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் யோகிபோல் உள்ள  ராகுல்காந்தி தனது தபசிதியானத்தில் நோக்கமாக … Read more

மருத்துவமனைக்கு வந்து தாயாரைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு விரைந்து வந்து தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென் கடந்த ஜூன் மாதம் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிக்கே வந்து அவர் வாக்களித்தார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அகமதாபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தாயார் ஹீராபென்னை சந்தித்தார். … Read more

முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஸ்முக்கிற்கு ஜாமின்; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.!

மும்பையில் உள்ள பீர் பார்களில் ஒவ்வொரு மாதமும் நூறு கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வசூலித்து கொடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் உத்தரவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அனில் தேஷ்முக் மீது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. … Read more