ஒன்றிய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் RTI சட்டம் வலுவிழந்துவிடும்: சமூக ஆர்வலர்கள் அச்சம்

டெல்லி: ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரவுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் தகவல் அறியும் உரிமை சட்டம் வலுவிழந்துவிடும் என RTI ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உலகின் அதிக அளவிலான இணையதள பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. பிற நாடுகளை போல, இணையதள பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்தியாவில் அனைவரும் அணுகும் வகையில் இருப்பதால் ஆபத்துக்கும் அளவில்லை. பொது தளத்தில் அதிகரித்திருக்கும் தரவுகளை முறையாக கையாளும் நோக்கில், டிஜிட்டல் தனி நபர் தரவு … Read more

கொரோனா பணியில் ஆசிரியர்கள்? – முக்கிய முடிவு!!

கொரோனா பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் முடிவை டெல்லி அரசு திரும்பப்பெற்றது. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களை டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 15 … Read more

பரபரப்பு.. அதிமுக மாநில செயலாளர், முன்னாள் எம்எல்ஏ உட்பட 17 பேர் கைது..!

புதுச்சேரியில் பந்த் அறிவித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரன் உள்ளிட்ட 17 அதிமுக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். முதல்வரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று … Read more

ஜம்முவில் என்கவுன்ட்டர் | 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: மேலும் ஒருவரை தேடுகிறது பாதுகாப்புப் படை

ஜம்மு: ஜம்முவில் இன்று காலை வாகன சோதனையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய ஓட்டுநரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து ஜம்முவின் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், “இன்று காலை வழக்கம் போல் ஜம்முவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். … Read more

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே மோதல்: 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சோதனையின் போது லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டனர். தொடர்ந்து நடந்த மோதலில் 2 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்முவில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் … Read more

முக்கிய 7 நகரங்களில் 3.65 லட்சம் வீடு விற்பனை: அனராக் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: சென்னை, கொல்கத்தா, டெல்லி-என்சிஆர், மும்பை மெட்ரோபாலிட்டன் மண்டலம் (எம்எம்ஆர்), பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய 7 நகரங்களில் நடப்பாண்டில் 3.65 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச விற்பனை அளவாகும். இதற்கு முன்பாக, கடந்த 2014-ம் ஆண்டில்தான் இந்த முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனையானது 3.43 லட்சம் என்ற சாதனை அளவை தொட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அந்த சாதனை விற்பனை அளவு முறியடிக்கப்பட்டுள்ளது. கடன் வட்டி … Read more

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் கால தாமதம்..!

டெல்லியில் அடந்த பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் நிலவிய அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரவு 11.45 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானமும், அதிகாலை 2.15 மணிக்கு இண்டிகோ விமானமும் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன. இதுபோல நடப்பு சீசனில் பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டது இதுவே முதல் முறை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

வங்கி மோசடி வழக்கில் கைதான விடியோகான் தலைவருக்கு சிபிஐ காவலில் சிறப்பு வசதி

மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பணியாற்றியபோது விதிமுறைகளை மீறி விடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்களை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிய விடியோகான் குழும நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத்தை நேற்றுமுன்தினம் போலீசார் கைது … Read more

இனி கடற்கரை, பூங்காக்கள், திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்… எங்கு தெரியுமா ?

 உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட்- 19 ஓமிக்கிரான் BF.7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகைக் கடைபிடிக்க வேண்டும். எதிர்வரும் புது வருட கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 … Read more

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை – டெல்லி மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அந்த நாட்டில் தற்போது தினசரி பல லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. அடுத்த சில வாரங்களில் சீனாவில் நாள்தோறும் 3 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் என்றும் அடுத்த 3 … Read more