இ-ஸ்போர்ட்ஸ்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 77வது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கினார். போட்டி விளையாட்டுகளில் இ-ஸ்போர்ட்சை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசின் விளையாட்டு துறை மற்றும் மின்னணு, தொழில்நுட்ப துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ஆன்லைன் விளையாட்டாகவே இ ஸ்போர்ட்ஸ் கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீரர்கள் … Read more

57வது பிறந்தநாளை கொண்டாடிய இந்தி நடிகர் சல்மான் கான்.. அவரை காண ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி..!

இந்தி நடிகர் சல்மான் கானை காண அவரது வீட்டு முன்பு திரண்ட ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். சல்மான் கான் தனது 57வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி மும்பையிலுள்ள அவரது வீட்டு முன்பு அதிகாலை முதலே ஆயிரகணக்கான ரசிகர்கள் திரண்டனர். சல்மான் கான் படம் போட்ட டிசர்ட்டுகள் அணிந்தும் இனிப்புகளைப் பரிமாறியும் ரசிகர்கள் உற்சாகமாக சல்மான்கானின் பிறந்தநாளைக் கொண்டாடினர். பால்கனியில் இருந்து சல்மான் கான் ரசிகர்களை பார்த்தபோது, அவரை காண ரசிகர்கள் முன்டியடித்தனர். அப்போது … Read more

குடும்பத்துடன் மைசூரு சுற்றுலா வந்த மோடியின் சகோதரர் கார் விபத்தில் காயம்

மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர் தாஸ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோடியின் சகோதரர் உள்பட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மைசூரு வழியாக பண்டிபுராவுக்கு  மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் மோடியின் … Read more

இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க..!!

உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-அப். பிரபல மெட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது. டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. . டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு … Read more

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா ஒத்திகை: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். சீனாவில் பி.எப்.7 என்ற பெயரில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் உலக நாடுகளுக்கும் பரவி விட்டது. தினமும் லட்சக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பி.எப்.7 ரக கொரோனா இந்தியாவிலும் ஏற்கனவே தலைகாட்டி விட்டது. குஜராத், மேற்குவங்கம், ஒடிசாவில் இந்த தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் … Read more

இப்படியும் நடக்குமா..? கணவனை கொடுமைப்படுத்திய ‘குடிமகள்’; விரக்தி அடைந்த கணவன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல்!

சத்திஸ்கர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் கட்கோராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த நிலையில், திருமணமாகி 7 நாட்களுக்குப் பிறகு, 26 மே 2015 அன்று காலை, அவரது மனைவி படுக்கையில் மயங்கிக் கிடந்ததை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் மது அருந்தியதோடு அசைவம், குட்காவுக்கும் அடிமையாகி இருப்பது தெரிய வந்தது. இந்த விஷயம் பெண்ணின் மாமியார்களுக்கு தெரிய வந்ததும், அவர்களும் பலவாறு அவலை திருத்த முயன்றனர். ஆனால் அவர் … Read more

பேச மறுத்ததால் ஆத்திரம் விமானத்தில் வந்து காதலியை 51 முறை குத்திக்கொன்ற கண்டக்டர்

கார்பா: பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து ஸ்க்ரூ டிரைவரால் 51 முறை பஸ் டிரைவர் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் கார்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷ் (வயது 20) என்ற மகளும் உள்ளனர். நீல்குஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மதன்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்ல ஜாஷ்பூர் – கார்பா இடையே … Read more

மூக்குவழியாக செலுத்தப்படும் கரோனா மருந்தின் சந்தை விலை ரூ.800 ஆக இருக்கும் – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

ஹைதராபாத்: மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து, தனியார் சந்தையில் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படும் என்று பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மூக்குவழியாக செலுத்திக் கொள்ளும் பாரத் பயோடெக்கின் ‘இன்கோவாக்’ கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) இம்மாத தொடக்கத்தில் அனுமதி வழங்கியது. மூக்குவழியாக பயன்படுத்தக்கூடிய, உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்து இன்கோவாக் ஆகும். அட்டவணைப்படி, இந்த மருந்தை … Read more

கர்நாடகாவில் மீண்டும் தீவிரவாதிகள் நாசவேலை? பார்சலில் வந்த மிக்சி வெடித்து சிதறியது: கூரியர் நிறுவன உரிமையாளர் படுகாயம்

ஹாசன்: மங்களூருவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பு அடங்குதற்குள் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் அலுவலகம் ஒன்றில் பார்சலில் வந்த மிக்சி வெடித்து சிதறியது. இதில் கூரியர் அலுவலக உரிமையாளர் படுகாயம் அடைந்தார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முகமது ஷாரிக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவன் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவன் என்பது தெரியவந்தது. இந்நிலையில், ஹாசன் மாவட்டம் … Read more

ஒடிசா ஓட்டலில் அடுத்தடுத்து மர்மம் புடினை விமர்சித்த ரஷ்ய எம்பி மரணம்: 3வது மாடியிலிருந்து தவறி விழுந்தார்

ராயகாடா: ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ். பெரிய கோடீஸ்வரர். இவர் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 4 பேருடன் ஒடிசாவுக்கு கடந்த 21ம் தேதி சுற்றுலா வந்தார். ராயகடா பகுதியில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தார்கள். கடந்த 22ம் தேதி பாவெலுடன் வந்த விளாதிமிர் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் டிசம்பர் 25ம் தேதி ஓட்டல் 3வது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்து பாவெலும் மர்மமாக மரணம் அடைந்தார். … Read more