ரயில்வே திட்டத்தில் முறைகேடு லாலுவின் பழைய வழக்கை மீண்டும் விசாரிக்கிறது சிபிஐ

புதுடெல்லி: லாலு பிரசாத் மீது பழைய வழக்கு ஒன்றை சிபிஐ மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளது. ஐமு கூட்டணி ஆட்சியின் போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், ரயில்வே நிலங்களை ஒதுக்கீடு செய்வதில் ஊழல் செய்ததாகக் கூறி கடந்த 2018 ம் ஆண்டு சிபிஐ வழக்கு தொடர்ந்தது. மும்பை, பாந்த்ராவில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதில் டிஎல்எப் குழுமத்துக்கு லாலு சாதகமாக இருந்ததாகவும் அதற்காக அவருக்கு டெல்லியில் ஒரு பங்களா லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. … Read more

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா தயார்நிலை குறித்து இன்று ஒத்திகை: அமைச்சர் மாண்டவியா டெல்லியில் ஆய்வு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கான தயார்நிலை குறித்து நாடு முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று ஒத்திகை பயிற்சி நடக்க உள்ளது. கொரோனா பிஎப்.7 வைரஸ் பரவலை தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா தயார் நிலை ஒத்திகை பயிற்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதார வசதிகள், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன், ஐசியு, வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் போதிய அளவில் … Read more

காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், வாஜ்பாய் தலைவர்கள் நினைவிடங்களில் ராகுல் காந்தி அஞ்சலி

புதுடெல்லி:  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர்கள் நினைவிடங்களில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் நுழைந்தது. பண்டிகை காலம் என்பதால் ஒரு வார ஒய்வுக்கு பின் இந்த யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் ராகுல்காந்தி நேற்று தலைவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். முதலில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். அதன் … Read more

திரிபுராவில் பாஜ ரத யாத்திரை

அகர்தலா: 60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஆளும் பாஜ சார்பில் அங்கு ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாஜ தலைமை செய்தி தொடர்பாளர் சுபர்தா சக்ரவர்த்தி கூறுகையில், ‘‘தேர்தலையொட்டி பொதுமக்களின் ஆசிர்வாதத்தை பெறுவதே ரத … Read more

கயாவில் 5 வெளிநாட்டவருக்கு கொரோனா தொற்று

கயா: பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவிற்கு புனித யாத்திரை வந்த மியான்மர் நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் 4 தாய்லாந்து நாட்டினர் உள்ளிட்ட 5 வெளிநாட்டினருக்கு புதிய வகை உருமாறிய பிஎப்.7 கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.   இந்த 5 பேரில் 4 பேர் பெண்களாவர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 33 வெளிநாட்டினரிடம் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. விமான நிலையத்தை தொடர்ந்து, கயா ரயில் நிலையத்திலும் பயணிகளிடம் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது.

கேரளாவில் உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய இளம்பெண் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் கோழிக்கோடு விமான  நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில்  துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  இந்த விமானத்தில் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஷஹலா (19) என்ற இளம்பெண்  பயணம் செய்தார். இவர் விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனை முடிந்து  வெளியே வந்தார். வெளியே காத்துக் கொண்டிருந்த கோழிக்கோடு கரிப்பூர்  போலீசாருக்கு ஷஹலா தங்கம் கடத்தி வருவது குறித்து ஏற்கனவே ரகசிய தகவல்  கிடைத்திருந்தது. அவரை உடனடியாக போலீசார் பிடித்து விசாரணை … Read more

''ராகுல் காந்தி ஒரு சூப்பர் ஹியூமன்'' – காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. தலைவர் ராகுல் காந்தி நேற்று (டிச.26) காலை மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் அவர் இந்த நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனங்கள், … Read more

வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் ‘அட்மிட்’

புதுடெல்லி:  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனால், நேற்று மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிஎப்.7 வகை கொரோனா வைரசால் அவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, நிர்மலா சீதாராமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்தவர்.

ஜிஎஸ்டியில் உரிய இழப்பீடு கோரியும் செஸ் வரியைக் காரணம் காட்டி மறுக்கப்படும் மாநில பங்களிப்பு: சிஏஜி அறிக்கையால் அம்பலமான பகீர் தகவல், மாநில சுயாட்சி உரிமை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

ஜிஎஸ்டியுடன் சேர்த்து செஸ் வரி வசூலிக்கப்பட்டாலும், மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி பங்களிப்பை ஒன்றிய அரசு குறைத்து வழங்கியுள்ளது, சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.  தங்களுக்கு உரிமை உடைய வரி பகிர்வை வழங்குமாறு மாநிலங்கள் கோரும் நிலையில், ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டும் செஸ் வரியில் பங்களிப்பு தர ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. நிகர வரி வசூல் உயர்ந்தபோதும், மாநில வரி பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த 2017 ஜூலையில், … Read more

கத்தியால் குத்தி இளைஞர் கொலை: மங்களூருவில் 144 தடை உத்தரவு

மங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூரு பகுதியில் சனிக்கிழமை இரவு ஜலீல் என்ற இளைஞர், மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜலீல் இறந்தார். அதனால் மங்களூரு மாநகரத்திற்கு உட்பட சில இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மங்களூரு நகர காவல் ஆணையர் என்.சஷி குமார் கூறுகையில், ‘மர்ம நபர்களால் ஜலீல் என்பவர் கொலை செய்யப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜ்பே, சூரத்கல், … Read more