நொய்டாவில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கட்டிடம் மதியம் 2.30 மணிக்கு தகர்ப்பு: மக்கள் வெளியேற்றம்: விமானங்களுக்கு தடை

புதுடெல்லி: நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள், இன்று மதியம் 2.30க்கு வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் எம்ரால்ட் கோர்ட் என்ற வளாகத்துக்குள் கட்டப்பட்டுள்ள 40 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இவற்றை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ‘எடிபைஸ்’ என்ற நிறுவனம், 3,700 கிலோ வெடிமருந்தை … Read more

அயோத்தியின் ‘கல்வி குரு’ – சீருடையில் பாடம் கற்பிக்கும் காவல் உதவி ஆய்வாளர்

புதுடெல்லி: உத்தரபிரதேசம் அயோத்தியில் பணிபுரியும் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் ஏழை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவரை ‘வர்திகே குருஜி (கல்வித் துறவி)’ என்றழைக்கின்றனர். உ.பி. காவல் துறையில் கடந்த 2015-ம் ஆண்டில் உதவி ஆய்வாளராக இணைந்தவர் ரஞ்சீத் யாதவ். அயோத்தியின் நயாகாட் காவல் நிலையத்தில் பணியாற்றிய அவர் ரோந்து செல்லும்போது, கண்களில்பட்ட காட்சி ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்போது, கோயில்களில், மடங்களில் பிச்சை எடுப்பவர்களில் பலர் சிறுவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் … Read more

ரயில் நிலையத்தில் தாயின் அருகே தூங்கிய 7 மாத குழந்தை கடத்தல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

உத்தர பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இருந்து 7 மாத குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். மதுரா ரயில் நிலைய மேடையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவன் அக்கம் பக்கம் நோட்டமிட்டு, அந்த குழந்தையை அங்கிருந்து தூக்கி சென்றான். இதுகுறித்த புகாரின்பேரில் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் … Read more

10 ஆயிரத்துக்கு பதில் 19,500 பேர் டெல்லி சிறைகளில் 2 மடங்கு கைதிகள்: கண்காணிப்பில் சிக்கல்

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் அதி பயங்கர குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அவர்களை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  டெல்லியில் திகார், ரோகினி மற்றும் மண்டோலி ஆகிய மூன்று மத்திய சிறைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக கருதப்படும் திகார் சிறையில் 5,200 கைதிகள் வரை அடைக்கப்படலாம். ஆனால், தற்போது இதில் 13,183 கைதிகள் உள்ளனர். 1,050 பேர் அடைக்கக்கூடிய மண்டோலி சிறையில் 2,037 கைதிகள் உள்ளனர். ரோகினியில் 3,776 பேருக்கு … Read more

கர்நாடக அரசு மீது ஊழல் புகார் தெரிவித்து பிரதமர் மோடிக்கு 13 ஆயிரம் பள்ளிகள் கடிதம்

பெங்களூரு: கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், ”கர்நாடகாவில் அரசின் திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள். இதுபற்றி முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் கெம்பண்ணா அண்மையில், தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனி ரத்னா தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். … Read more

எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்க்க ரூ.6,300 கோடி செலவிட்டதால்தான் அரிசிக்கு ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது: பாஜ மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க, ரூ.6,300 கோடியை பாஜ செலவு செய்ததால்தான், அதை ஈடுகட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், பாஜவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. தனது ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜ.வை, ‘மாநில அரசுகளை கவிழ்க்கும் சீரியல் கொலைகாரன்’ என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.இந்நிலையில், நேற்று தனது டிவிட்டரில் கெஜ்ரிவால், ‘தயிர், … Read more

​ஜே.பி. நட்டாவை சந்தித்தார் மிதாலி ராஜ் – நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு வலைவீசும் பாஜக

ஹைதராபாத்: ஹைதராபாத் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் நேற்று சந்தித்து பேசினார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வாரங்கல் பொதுக்கூட்டத் தில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் தனது துணைவியாருடன் ஹைதராபாத் விமான நிலையம் வந்தார். அவரை மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜே.பி.நட்டா சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது … Read more

காஷ்மீரில் 15 நாளில் ஆசாத் புதிய கட்சி: பாஜ உத்தரவுப்படி நடக்கிறாரா?

ஜம்மு: காங்கிரசில் இருந்து விலகிய நிலையில், குலாம் நபி ஆசாத் இன்னும் 15 நாட்களில் காஷ்மீரில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தவல்கள் வெளியாகி உள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், நேற்று முன்தினம் திடீரென கட்சியிலிருந்து விலகினார். கட்சியில் ராகுல் காந்தி செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து, சோனியா காந்திக்கு 5 பக்க விலகல் கடிதத்தை அவர் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு, … Read more

தூக்கமின்றி மக்கள் பீதி: ஜம்முவில் 5 நாளில் 13 முறை நிலநடுக்கம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 நாட்களில் 13 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நேற்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தோடா மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் ஏற்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோளில் 2.9 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து, நான்கரை மணி நேரம் கழித்து மீண்டும் மக்கள் நிலஅதிர்வை உணர்ந்தனர். இது 3.4 புள்ளிகளாக பதிவானது. ஜம்முவின் தோடா, … Read more

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு மீண்டும் சலுகை: வாழ்நாள் முழுவதும் வேலைக்காரர், டிரைவர்

புதுடெல்லி: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மட்டுமின்றி மற்ற நீதிபதிகளும் இனி தங்கள் வாழ்நாள் முழுக்க இலவசமாக வீட்டு வேலைக்கு பணியாளர், டிரைவர், உதவியாளரை நியமித்துக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு மீண்டும் ஓய்வு கால சலுகையை மாற்றி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஓய்வு கால சலுகைகளை ஒன்றிய அரசு கடந்த 23ம் தேதி திருத்தியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஓய்வுகால … Read more