தேசிய சின்னம் சர்ச்சை: பின்னணி என்ன?

இந்திய தேசிய சின்னம் சாரநாத்தில் பேரரசர் அசோகர் எழுப்பிய அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் சாரநாத்தில் அமைந்துள்ள அசல் தூணில் (தற்போது இது சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது) நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நின்றவாறு உள்ளன. இவை அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற நான்கு பண்புகளைக் குறிக்கின்றன. இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பீடத்தில் (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது, (வடக்கே) சிங்கம் ஆகிய விலங்குருக்கள் … Read more

டெல்லி விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 46 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் – தம்பதியர் கைது..!

வியட்நாமில் இருந்து டெல்லிக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 கைத்துப்பாக்கிகளை கடத்தி வந்த தம்பதியர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் மீண்டும் பிடிபட்டனர். டெல்லி இந்திரகாந்தி விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும்போது, ஜக்ஜித் சிங் மற்றும் ஜஸ்விந்தர் கவுர் ஆகியோரின் பைக்குள் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கிகள் சிக்கின.   Source link

கனமழை காரணமாக வட இந்தியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு: சுற்றுலா நகரமான மணாலியில் போக்குவரத்து பாதிப்பு

சிம்லா: கனமழை காரணமாக சுற்றுலா நகரமான மணாலியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டள்ளது. இமாச்சல பிரதேசம், குஜராத்,மகாராஸ்டிரா,அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பல்வேறு நகரங்கள் தத்தளிக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தில் மணாலி நகரில் நடுவில் ஓடும் பஜோகி நீர் வழித்தடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவின சொகுசு பேருந்துகள் சேதமடைந்துள்ளன. மணாலி நகரின் மிக முக்கியமான சாலைகள் மழை வெள்ளத்தில் … Read more

national emblem controversy: சிங்கம் போன்றவர் மோடி… எதிர்க்கட்சிகளை கடுப்பேத்தும் பாஜக!

தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள 9,500 கிலோ எடை கொண்ட வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் திறந்து வைத்தார். இந்த தேசிய சின்னம் குறித்த சர்ச்சை தற்போது அரசியல் கருத்து மோதலாக உருவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, எழுத்தாளரும், இடதுசாரி சிந்தனையாளும், திராவிட இயக்க ஆதரவாளருமான சூர்யா சேவியர் ட்விட்டரில் விமர்சித்து கருத்துகளை வெளியிட்டுள்ளார். ‘இது சிங்கமல்ல;அசிங்கம்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், … Read more

சுப்ரீம்கோர்ட்டில் தகுதிநீக்க வழக்கு நிலுவையில் உள்ளதால் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை அமைச்சர்களாக நியமிக்க கூடாது: ஆளுநருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

மும்பை: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது என்று ஆளுநருக்கு உத்தவ் தாக்கரே சார்பில் கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். இந்நிலையில் ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியும், ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராகவும் சிவசேனா … Read more

குஜராத்தில் கனமழை – 7 பேர் பலியான சோகம்!

கடந்த இரண்டு நாட்களாக குஜராத் முழுவதிலும் பெரும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் நகரங்கள் முழுதும் பெரும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. கடந்த ஞாயிற்று கிழமை குஜராத்தின் தலைநகரான அகமதாபாத்தில் 219 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் பல்வேறு குடியிறுப்புகளும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் ஏற்ப்பட்ட இடிபாடுகளால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 1ஆம் தேதி முதல் … Read more

ஓப்போ நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் திடீர்ச் சோதனை

ஓப்போ நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் அந்த நிறுவனம் நாலாயிரத்து 389 கோடி ரூபாய் அளவுக்குச் சுங்கவரி ஏய்த்துள்ளதாக வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. ஓப்போ நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் திடீர்ச் சோதனை நடத்தினர். இதில் ஓப்போ நிறுவனம் தவறான அறிக்கை அளித்து 2981 கோடி ரூபாய் சுங்கவரி விலக்குப் பயன் அடைந்துள்ளதும், 1408 கோடி ரூபாய் வரி ஏய்த்துள்ளதும் தெரியவந்துள்ளதாக வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. … Read more

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படும்.: ஒன்றிய அரசு

டெல்லி: 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் 75 நாட்களுக்கு நாடு முழுவதும் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

சத்தீஸ்கரிலும் வெளுத்து வாங்கும் கனமழை: வெளியேற வழி தெரியாமல் மக்கள் அச்சம்

ராய்பூா்: வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குஜராத், சத்தீஸ்காில் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குஜராத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ராஜ்கூட்டில் பெய்த அடமழையில் சாலைகளில் குளம் போல தண்ணீா் தேங்கியிருக்கிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினா்.கனமழையால் குஜராத்தில் இதுவரை 7போ் உயிாிழந்து இருக்கிறாா்கள். 9,000 போ் வீடுகளை விட்டு … Read more

பணிநிரந்தரம், சம்பள உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

* சித்தூர் மாநகரமே குப்பை கழிவு தேக்கத்தால் துர்நாற்றம்* உடனே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைசித்தூர் : சித்தூரில் நேற்று, காந்தி சிலை அருகே தூய்மை பணியாளர்களுக்கு ஏஐடியுசி ஊழியர்கள் சங்க சார்பில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏஐடியுசி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் பேசியதாவது:-  ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலின்போது தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி … Read more