நாடாளுமன்ற குழுவிடம் அக்னிபாதை குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்: திரும்ப பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழு எம்பிக்களுக்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிபாதை திட்டம் கடந்த 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அக்னிபாதை திட்டம் குறித்து பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தலைமை தளபதிகள், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் … Read more

‘ஏஐ’ தொழில்நுட்பத்தை எதிர்கொள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) எழுச்சியை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். டெல்லியில் நேற்று `பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்` என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்தை நம்மால் தடுக்க முடியாது. அதன் முன்னேற்றத்தை தடுக்க நாம் முயற்சி செய்யக்கூடாது. ஆனால் நாம் அதில் கவனமாக இருக்க … Read more

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை வருகிற 16ந்தேதி திறப்பு.. அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..!

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகிற 16ந்தேதி அன்று திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். மறுநாள் அதிகாலை நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். 5 நாட்கள் பூஜைக்குப் பின்னர் வருகிற 21ந்தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது  Source link

உபி போலீசார் அதிர்ச்சி ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணித்ததைக் கண்டு போக்குவரத்து போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், பதேப்பூரில் உள்ள பிந்த்கி கோட்வாலி என்ற பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடுமாற்றத்துடன் வேகமாக சென்ற ஆட்டோவை மடக்கி நிறுத்தினர். பின்னர் ஆட்டோவில் இருந்த அனைவரையும் கீழே இறங்கச் சொல்லியுள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் இருந்து மொத்தம் 27 பேர் இறங்கியதைக் கண்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த … Read more

ஒரே நாளில் 73 லட்சம் பேருக்கு பிஎப் ஓய்வூதியம் வழங்க முடிவு

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப். அமைப்பு தனது சந்தாதாரர்களில் ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பி.எப் ஓய்வூதியத்தை மத்திய தொகுப்பு மூலம் ஒரே நேரத்தில் அனைத்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் விதமான நடவடிக்கை எடுக்க 29 மற்றும் 30-ம் தேதிகளில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. தற்போது 138 மண்டல பிஎப் அலுவலகங்கள் மூலம் … Read more

அமர்நாத்தில் யாத்ரீகர்கள் செல்ல ஏதுவாக புதிய சாலை அமைக்கும் ராணுவ வீரர்கள்.!

ஜம்மு காஷ்மீர் அமர்நாத்தில் யாத்ரீகர்கள் செல்ல ஏதுவாக புதிய சாலை அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பனி லிங்க தரிசனம் செய்ய யாத்தீரிகர்கள் செல்ல, புதிய சாலையை அமைக்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு சாலை அமைக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது. Source link

பேரறிவாளனை போல விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் மனுதாக்கல்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு கடந்த மே 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட சட்டப்பிரிவு 142வது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது.இந்த வழக்கில் சிறையில் இருக்கும் மீதமுள்ள 6 குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் தரப்பில் வழக்கறிஞர் ஆனந்த செல்வன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ரவிச்சந்திரன் சிறை நன்னடத்தையுடன் இருக்கிறார். மேலும் அவர் சிறையில் உழைத்து சம்பத்தித்த ஊதியம் அனைத்தையும் … Read more

மக்கள் தொகை பெருக்கம் 2023-ம் ஆண்டு சீனாவை மிஞ்சிவிடும் இந்தியா – ஐ.நா. அறிக்கை தகவல்

நியூயார்க்: உலக மக்கள் தொகை பெருக்கம் 2022 அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 12, 2022-ல் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. இந்த எண்ணிக்கையை இந்தியா அடுத்த ஆண்டு மிஞ்சிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கணக்கீட்டின்படி 2030-ம் … Read more

கள்ளக்காதல் விவகாரம் பாஜ மகளிர் அணி தலைவி தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே சிஎன்புரம் நடுவாக்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி சரண்யா ரமேஷ் (27). பாலக்காடு மாவட்ட பாஜ மகளிரணி பொருளாளர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கி சடலமாக கிடந்தார். போலீசார் விசாரணையில், அவர் தற்கொலைக்கு முன் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் பாலக்காட்டை சேர்ந்த பாஜ பிரமுகரான பிரஜீவ் என்பருடன் தொடர்பு இருந்தது குறித்து குறிப்பிட்டு இருந்தார். ‘எனக்கும் பிரஜீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.பலமுறை … Read more

உ.பி ‘பஸ்மந்தா’ முஸ்லிம்கள் மீது பாஜக கவனம் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க திட்டம்

புதுடெல்லி: நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவை தொகுதிகள் உத்தர பிரதேசத்தில்தான் உள்ளன. அவற்றில், கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக தனி பெரும்பான்மையுடன் 2-வது முறை ஆட்சி அமைத்து சாதனை படைத்தது. எனினும், மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு முஸ்லிம் கூட பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. இதே பாணியை உத்தராகண்ட், ம.பி., பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாஜக பின்பற்றியது. இத்தனைக்கும் உ.பி.யில் முஸ்லிம்கள் … Read more