தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்ட இண்டிகோ விமானம்!

ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்ததை அடுத்து விமானம் உடனடியாக கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. அதற்கு பதிலாக மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்படுவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு முறை இந்திய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது.  Source link

கேரளாவில் யானைகளுக்கான புத்துணர்வு சிகிச்சை முகாம் பூஜையுடன் தொடக்கம்:பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் வருகை

திருச்சூர்: கேரளாவில் கோவில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு சிகிச்சை முகாம் பூஜையுடன் துவங்கியுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நாதன் சிவன் கோவிலில் 40- வதுஆண்டாக கோவில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இங்கு வரக்கூடிய யானைகள் அனைத்தும் பல்வேறு கோவில்களில் உள்ள வளர்ப்பு யானைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான யானைகளும் இங்கு வருகின்றன.இந்த ஆண்டின் சிறப்பானது ஆசியாவிலேயே மிக பெரிய யானையான செத்திக்கோட்டு ராமச்சந்திரன் கலந்து கொண்டுள்ளது. தற்போது வடக்கு நாதன் … Read more

பெண் குழந்தைக்காக பெண்ணுக்கு ஆசிட் கொடுத்த பெண்.. கணவருக்கு காப்பு.. அசாமில் பயங்கரம்!

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் இந்தியாவின் அனைத்து மூளைகளிலும் நடந்தேறி வருகிறது. அதுவும் பெண் குழந்தை வேண்டி பெண்களையே கொடுமைப்படுத்தும் கோர சம்பவங்கள் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையிலேயே இருக்கும். அவ்வகையில், அசாம் மாநிலத்தில் பெண் ஒருவரை அவரது கணவரும், கணவரின் பெற்றோரும் பெண் குழந்தைக்காக அமிலம் கொடுத்திருக்கிறார்கள். கரிம்காஞ்ச் மாவட்டத்தின் ரதாபரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஹிரப்நகர் அருகேதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி கணவர் மற்றும் அவரது பெற்றோரால் அமிலம் கொடுக்கப்பட்ட சும்னா பேகம் … Read more

வருமான வரி தாக்கல்: பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் யார்?

2021-22-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31-ம் தேதியோடு முடிகிறது. சமீபத்தில், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் மத்திய அரசு சில மாற்றங்கள் செய்தது. அதன்படி, சென்ற நிதி ஆண்டில் மொத்த டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் ரூ.25,000-க்கு மேல் கொண்டிருப்பவர்கள் இனி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவரெனில் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் ரூ.50,000 க்கு மேல் இருந்தால் வருமான வரி தாக்கல் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,528 பேருக்கு கொரோனா… 49 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 20,528 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,37,50,599ஆக உயர்ந்தது.* புதிதாக 49 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

"மக்கள் நலத்திட்டங்கள் இலவசங்கள் அல்ல; ஆனால்.. " – மோடிக்கு பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்

இலவசங்களை காட்டி சில அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ர்வால் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தலில் இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இது, நமது நாட்டு மக்களின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிவிடும். ஒருவருக்கு இனிப்பு கொடுத்து ஏமாற்றுவது போன்ற இந்த … Read more

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் | பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பா.ஜ.க அறிவித்துள்ளது. பா.ஜ.க ஆட்சிமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின்கட்ரி, ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக, மேற்குவங்க … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி (நாளை) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, தலைநகர் … Read more

அமர்நாத் யாத்திரையில் 17 நாளில் 50 பக்தர்கள் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. இதுவரையில் 1.6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கரடுமுரடான மலைப் பாதையில் அமர்நாத் குகைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், உடல்நிலை பாதிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நடுவழியில் இறந்து வருகின்றனர். கடந்த 17 நாட்களில் இதுபோல் 35 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 8ம் தேதி அமர்நாத் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு 15 பக்தர்கள் அடித்து செல்லப்பட்டு … Read more

எல்லை பிரச்சினையை தீர்க்க அசாம்-அருணாச்சல் ஒப்பந்தம்

இடாநகர்: அசாம் – அருணாச்சல் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவுகிறது. இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 24-ம் தேதியும் ஏப்ரல் 20-ம் தேதியும் சந்தித்துப் பேசினர். இந்நிலையில் இரு மாநில முதல்வர்களும் அருணாச்சலில் உள்ள நாம்சாய் நகரில் நேற்று முன்தினம் சந்தித்தனர். அப்போது இரு மாநிலங்களுக்கு இடையிலான பல ஆண்டு கால எல்லைப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான உடன்பாட்டில் … Read more