லடாக்கில் ஆற்றைக் கடக்கும்போது 5 ராணுவ வீரர்கள் நீரில் மூழ்கியதால் பரபரப்பு

லே: லடாக்கில் பயிற்சியின் ஒரு பகுதியாக ஆற்றைக் கடக்கும்போது 5 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணி அளவில் பயிற்சியின்போது, டேங்கர் லாரியில் ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட … Read more

லடாக் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 ராணுவ வீரர்கள் பலி – ராஜ்நாத் இரங்கல்

புதுடெல்லி: லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும்போது நேரிட்ட விபத்தில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரிய வருத்தத்தை அளித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணி அளவில் டேங்கர் மூலம் ஆற்றைக் … Read more

‘பிஹார் அரசுக்கு பாஜக தலைமை ஏற்க வேண்டும்’ – அஸ்வின் குமார் சவுபே கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: பிஹார் அரசுக்கு பாஜக தலைமை ஏற்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் அஸ்வின் குமார் சவுபே தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்தால், பிஹார் மாநில அரசியலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவால் மீண்டும் ஆட்சி மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜகவை விடக் குறைந்த தொகுதிகள் பெற்ற இண்டியா கூட்டணியும் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. … Read more

“நீதித்துறையை அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தா: நீதித்துறையை அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்ற நீதித்துறை தொடர்பான மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். நீதித்துறையின் தற்கால வளர்ச்சிகள் குறித்த மாநாடு கொல்கத்தாவில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய மம்தா பானர்ஜி, “நீதித்துறை எங்களுக்கு … Read more

“லடாக்கில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு நினைவில் கொள்ளும்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “பயிற்சியின் போது ஆற்றில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாடு அவர்களின் தியாகத்தை, அர்ப்பணிப்பை எப்போதும் நினைவில் கொள்ளும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ராணுவப் பயிற்சியில் டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. … Read more

“எமர்ஜென்சியில் எங்களை சிறையில் தள்ளினர்… ஆனால், துன்புறுத்தவில்லை” – பாஜகவுக்கு லாலு பதிலடி

பாட்னா: ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் எமர்ஜென்சி நாட்களை நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எங்களை எமர்ஜென்சி காலத்தில் சிறையில் போட்டிருந்தாலும் கூட எங்களை இந்திரா காந்தி துன்புறுத்தவில்லை” என்று அவர் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் அவர் “The Sangh Silence in 1975” என்ற தலைப்பில் தானும் … Read more

“பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்டில் பாஜக துடைத்தெறியப்படும்” – ஹேமந்த் சோரன்

ராஞ்சி: சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்ட்டில் இருந்து பாஜக துடைத்தெறியப்படும் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் தனது இல்லத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஹேமந்த் சோரன், “எனக்கு எதிராக பாஜக சதித்திட்டம் தீட்டியது. அதன் காரணமாகவே நான் சிறை செல்ல நேர்ந்தது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்ட்டில் இருந்து காவிக் கட்சி துடைத்தெறியப்படும். வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு எதிரான கிளர்ச்சி … Read more

லோகோ பைலட்டுகளின் குறைகளை சரிசெய்ய ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்பிக்கள் நேரில் வலியுறுத்தல்

புதுடெல்லி: ரயில்வே துறையின் லோகோ பைலட்டுகளின் குறைகளை சுட்டிக் காட்ட இன்று (சனிக்கிழமை) ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, தமிழக எம்பிக்கள் சந்தித்தனர். இதில், மதுரையின் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லின் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் இடம் பெற்றனர். இந்தச் சந்திப்பில் அமைச்சர் அஸ்வினியிடம் பேசியதாக எம்பிக்களான சு.வெங்கடேசன், ஆர்.சச்சினாந்தம் கூறியது: இந்திய ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன. இதன் மீது தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்களின் போராட்டத்தையும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு … Read more

சிபிஐ தொடர்ந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கடந்த 26ம் தேதி கைது செய்தது. அன்றைய தினமே அவர் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட … Read more

நீட் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை காங்கிரஸ் விரும்பவில்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

சண்டிகர்: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், குழப்பத்தையும் தடையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அக்கட்சியின் நோக்கம் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். உண்மையில் காங்கிரஸ் விவாதத்தை விரும்பவில்லை. விவாதத்தில் இருந்து … Read more