டெல்லியில் கட்டுமானப் பணியிடத்தில் விபத்து: சிக்கிய தொழிலாளிகளில் ஒருவர் சடலமாக மீட்பு
புதுடெல்லி: டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப் பணியிடத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்ட நிலையில், சிக்கிய தொழிலாளர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிகழ்விடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், காவல் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய தொழிலாளிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இருவர் இன்னும் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர் சந்தோஷ் குமார் யாதவ் (19) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காலை 6.10 மணியளவில் சந்தோஷ் குமார் யாதவ் மீட்கப்பட்டார். … Read more