“உங்கள் வாக்குகள் பாதுகாப்பாக இருக்கும்” – தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஆகவே, மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் செயல்முறைகள் சார்ந்து பல்வேறு நடைமுறைகள் இணைந்து இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவிஎம் மீதான சந்தேகங்கள் குறித்த கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் வெள்ளிக்கிழமை பதில் அளித்தார். … Read more

‘வாக்களித்த அனைவருக்கும் நன்றி’ – முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்து பிரதமர் மோடி ட்வீட்

சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது குறித்து விரிவாக பார்ப்போம். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தி இருந்தனர். ஏழு கட்டங்களாக நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் தொடக்கம் … Read more

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இரவு 7 மணி வரை 60.03% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைக்கான முதற்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 60.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடந்தது. 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது. தொகுதி பிரேக் அப்: தமிழகம் (39), … Read more

“சிறையில் நான் சாப்பிட்டதை அரசியல் ஆக்குகிறது அமலாக்கத் துறை” – கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: “சிறையில் நான் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது” என்று குற்றம்சாட்டியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “நான் உட்கொண்ட உணவு, எனது மருத்துவர் தயாரித்து கொடுத்த டயட் அட்டவணையுடன் ஒத்துப்போகிறது” என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அரவிந்த் கேஜ்ரிவால் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மான் நீதிமன்றத்தில் கூறுகையில், “நான் (அரவிந்த் கேஜ்ரிவால்) ஜாமீன் பெறுவதற்காக எனது ரத்தத்தின் சர்க்கரை அளவினை கூட்ட முயற்சிப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது. ஜாமீன் பெறுவதற்காக … Read more

இண்டியா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-ஐ தாண்டும்: சச்சின் பைலட்

புதுடெல்லி: இண்டியா கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சச்சின் பைலட், “இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி அணி பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ராஜஸ்தானில் பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் … Read more

“ம.பி.யில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?” – மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் (NCRB) தொகுக்கப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி, “மத்தியப் பிரதேசத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன” என்று பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்சேர்ப்பு ஊழல்களில் பிரதமர் மோடி யாரைப் பாதுகாக்கிறார்? பாஜக வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில், ஆதிவாசிகளை ஏன் கைவிட்டது? … Read more

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் 8 மணி நேரத்தில் 49.78% வாக்குப்பதிவு

டெல்லி: நாடு முழுவதும் நடைபெறும் மக்களவை முதற்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும் மாலை 3 மணி நிலவரப்படி 49.78 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது. தொகுதி பிரேக் அப்: தமிழகம் … Read more

“பாஜக கூட்டணிக்கு 400+ வெற்றி உறுதி” – வேட்புமனு தாக்கல் செய்த அமித் ஷா நம்பிக்கை

காந்திநகர்: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400+ இடங்களில் உறுதியாக வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு குஜராத்தின் காந்தி நகரில் போட்டியிடும் அமித் ஷா, இன்று அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரோடு, மாநில முதல்வர் பூபேந்திர படேல் உடன் இருந்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “காந்திநகர் தொகுதியில் இன்று நான் வேட்புமனு தாக்கல் … Read more

10ம்வகுப்பு தேர்வில் ஆறு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாணவி அதிதி சாதனை

Punjab Board (PSEB) Class 10 Results 2024: பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் (பிஎஸ்இபி) இன்று 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.2%. அதிதி என்ற மாணவி 650க்கு 650 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி சதவீதமாக 100% பெற்றுள்ளார். 

ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் இந்துக்களின் நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்துவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அம்ரோஹா (உத்தரப்பிரதேசம்): ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் இந்துக்களின் நம்பிக்கைகள் மீது தாக்குதல்களை தொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அம்ரோஹா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் குடும்ப அரசியல், ஊழல், (சிறுபான்மை மக்களை) தாஜா செய்யும் அரசியல் ஆகியவற்றை மேற்கொள்பவை. அதேநேரத்தில், இந்துக்களின் மத நம்பிக்கைகள் மீது தாக்குதல் தொடுக்கக் கூடியவர்கள் இவர்கள். இந்து மதத்துக்கு எதிராக தாக்குதல் … Read more