ஜம்மு – காஷ்மீரில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் கட்டாயம்: புதிய உத்தரவு அமல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்துடன் காலை வகுப்புகளை தொடங்குமாறு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் அலோக் குமார் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், சரியான வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளில் காலை அசெம்பிளி தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “காலை அசெம்பிளி என்பது ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஆகியவற்றை வளர்ப்பதற்கான தளங்களாக செயல்படுகின்றன. … Read more

போக்சோ வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய உத்தரவு – கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உதவி கோரி தனது தாயுடன் வந்த 17 வயது சிறுமியை எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மார்ச் 14ம் தேதி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றம் … Read more

முதல் பயணமாக இத்தாலி செல்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

புதுடெல்லி: உலகளாவிய தெற்கின் முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க G7 அவுட்ரீச் உச்சி மாநாடு ஒரு வாய்ப்பு என்று உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில், 2024 ஜூன் 14 அன்று நடைபெறும் ஜி7 அவுட்ரீச் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியில் உள்ள அபுலியா பகுதிக்கு பயணம் மேற்கொள்கிறேன். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் … Read more

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூன் 10 முதலே இந்த நியமனங்கள் அமலுக்கு வந்ததாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிக்கையில், மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மைச் செயலராக பிகே மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பிரதமரின் பதவிக்காலம் வரை அல்லது மறு உத்தரவு வரும்வரை அப்பதவியில் நீடிப்பார்கள் எனத் … Read more

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: மத்திய அரசின் மறுப்பும், காங்கிரஸ் விமர்சனமும்

புதுடெல்லி: இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை என்றும், அவ்வாறு கசிந்ததாகக் கூறப்படுவதில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வினாத்தாள் கசியவில்லை. வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை இந்த ஆண்டு 24 லட்சம் … Read more

உபரி நீர் இல்லை என உச்ச நீதிமன்றத்திடம் இமாச்சல் கைவிரிப்பு @ டெல்லி தண்ணீர் பிரச்சினை

புதுடெல்லி: தேசிய தலைநகரில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைகளுக்கு மத்தியில், தனது முந்தைய அறிக்கையை திரும்பப் பெற்றுள்ள இமாச்சலப் பிரதேச அரசு, தங்களிடம் 136 கன அடி உபரி நீர் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் பெறுவதற்காக மேல் யமுனை நதிநீர் வாரியத்திடம் (Upper Yamuna River Board) முறையிடுமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இமாச்சலப் பிரதேச அரசு வழங்கிய உபரி நீரை டெல்லி திறந்து … Read more

ஐஏஎஸ் பணியில் மீண்டும் இணைகிறாரா வி.கே.பாண்டியன்?

புதுடெல்லி: ஒடிசா தமிழரான வி.கார்த்திகேய பாண்டியன் மீண்டும் ஐஏஎஸ் பணியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் ஐஏஎஸ் பணியில் இருந்து விலகியபின் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பிஜேடியில் இணைந்தார். எனினும், தேர்தல் தோல்வியால் அரசியலிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 வருடங்களாக, ஐந்து முறை தொடர்ந்து ஒடிசா முதல்வராக இருந்தவர் நவீன் பட்நாயக். இவரது பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆட்சி, இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிடம் பறிபோனது. இதற்கு முதல்வர் நவீனுக்கு … Read more

‘குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 42 இந்தியர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்’ – அரசின் நடவடிக்கை என்ன?

திருவனந்தபுரம்: குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். கேரளாவைச் சேர்ந்தவர்கள்: உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என … Read more

அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக இன்று (வியாழக்கிழமை) பெமா காண்டு பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதல்வராகி உள்ளார். அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா மற்றும் பாஜக கட்சியினர் பங்கேற்றனர். மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதில் … Read more

தோடா தாக்குதல்: 4 தீவிரவாதிகளின் படங்களை வெளியிட்ட ஜம்மு போலீஸார்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் நடந்த இரண்டு பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை தோடா போலீஸார் புதன்கிழமை வெளியிட்டனர். மேலும், அவர்கள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று பதேர்வாவின் சட்டர்கல்லாவில் உள்ள 4 ராஷ்ட்ரிய ரைஃபில் மற்றும் போலீஸ் கூட்டுச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையிருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தது. இந்தத் … Read more