ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வர் பதவி யாருக்கு? போட்டி போடும் ஜனசேனா மற்றும் பாஜக

Andhra Pradesh Deputy Chief Minister: ஜன சேனா தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும், ஆந்திர அமைச்சரவையில் அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

மோடி 3.0 அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம்: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பதவி பெற்றுள்ள வாரிசுகளின் பெயர்களை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கட்சியில் தலைமுறைகளை கடந்து போராட்டம், சேவை, தியாகம் செய்தவர்களை வாரிசு அரசியல் என சொல்பவர்கள், அதிகாரத்தை வாரிசுகளுக்கு பகிர்ந்தளித்துள்ளனர். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு நரேந்திர மோடி … Read more

யார் இவர்? ஒடிசாவின் புதிய முதல்வராக பதவியேற்கும் மோகன் சரண் மாஜி..!

Odisha New CM Mohan Charan Majhi: பழங்குடியின தலைவர் மற்றும் 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர், பாஜகவின் முதல் ஒடிசா முதல்வராக 52 வயதான மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்வு

புவனேஸ்வர்: ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதன்மூலம், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பாஜக பெற்றது. அந்தக் கட்சி முதல்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான … Read more

ஆந்திராவின் தலைநகரம் இனி இதுதான்… அடித்துச் சொன்ன சந்திரபாபு நாயுடு

Chandrababu Naidu: அமராவதி தான் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக இருக்கும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயடு உறுதி அளித்துள்ளார். 

“மக்கள் இண்டியாவின் பக்கம்” – பிரதமர் மோடியை விமர்சித்த சரத் பவார்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவின் அஹல்யா நகரில் நடைபெற்ற பேரணியில் அவர் கூறியதாவது: “நம் நாட்டின் மக்கள் பிரதமர் மோடிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை வழங்கவில்லை. மத்தியில் ஆட்சி அமைக்க சாமானிய மக்களின் சம்மதத்தை அவர் பெறவில்லை. அவர் அதற்கு கூட்டணி கட்சியினரின் உதவியை நாடினார். தேர்தலின் போது எங்குமே இந்திய அரசு என்று அவர் சொல்லவில்லை. மாறாக ‘மோடி அரசு’, ‘மோடியின் உத்தரவாதம்’ என்று … Read more

Kerala Lottery Result: ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-419 லாட்டரி முடிவு வெளியானது.. முழு பட்டியல் இதோ

Kerala Lottery Result Declared: இன்று (ஜூன் 11, செவ்வாய்கிழமை) 3 மணிக்கு ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-419 குலுக்கல் மூலம் வெற்றி பெற்ற எண்கள் அறிவிக்கப்பட்டது. 

18+ பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது எப்போது? – டெல்லியில் போராட்டம்

புதுடெல்லி: டெல்லி அரசு தான் அளித்த வாக்குறுதிக்கு இணங்க பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பெண்களுக்கு மாதம்தோறும் நிதி உதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்ற திட்டம் டெல்லியிலும் அமல்படுத்தப்படும் என்றும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த 2024-25 பட்ஜெட்டின்போது வாக்குறுதி அளித்தது. இத்திட்டத்தின்படி, வரி செலுத்துவோர், அரசு … Read more

சூடுபிடிக்கும் மணிப்பூர் விவகாரம்! பிரதமர் மோடி செல்வது எப்போது? ப. சிதம்பரம் கேள்வி

P Chidambaram, Manipur: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா மீண்டும் பொறுப்பேற்பு

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றதை அடுத்து, நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 9-ம் தேதி பதவியேற்றது. இதனையடுத்து, யார் யாருக்கு எந்தெந்த இலாகா என்ற விவரம் நேற்று (ஜூன் 10) அறிவிக்கப்பட்டது. இதன்படி, மத்திய உள்துறை அமித் ஷாவுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. அதேபோல், கூட்டுறவுத் துறையும் மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை … Read more