"97 சதவீத மதிப்பெண் பெற்றும் இடமில்லை" – எக்ஸ் வலைதளத்தில் மாணவி வேதனை

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்டில் (ஐஐஎம்) படிக்கும் இளம் மாணவி ராஷி பாண்டே. இவர் அண்மையில் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவி. எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. நான் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன். அண்மையில் நான் எழுதிய கல்லூரி நுழைவுத் தேர்வில் (கல்லூரியின் பெயரை குறிப்பிடவில்லை) 97 சதவீத மதிப்பெண்களைப் பெற்றேன். … Read more

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது: முதல் நாளில் 280 எம்.பி.க்கள் பதவியேற்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற 18-வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்ட புதிய எம்.பி.க்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜனநாயகத்துக்கு கரும்புள்ளியாக அமைந்த அவசரநிலை மீண்டும் நிகழக் கூடாது என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். 18-வது மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை … Read more

நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது: பிஜு ஜனதா தளம் அறிவிப்பு

புவனேஸ்வர்: "நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. என்டிஏவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே" என நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்துவந்த நவீன் பட்நாயக், தன் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் மக்களவை தேர்தலிலும் பிஜேடி படுதோல்வியை சந்தித்தது. … Read more

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில், “மலையாளத்தில் நம் மாநிலத்தின் பெயர் கேரளம். 1956, நவம்பர் 1ம் தேதி மொழிவாரி … Read more

சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அசாமில் ஆம் ஆத்மி கட்சி கலைக்கப்படுவதாக அறிவிப்பு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஆம் ஆத்மி கட்சி கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: “அசாம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மி கட்சி அசாம் மாநிலத்தில் உடனடியாக கலைக்கப்படுகிறது. கட்சியை மறுகட்டமைப்பு செய்து வலிமைப்படுத்தும் பணிகளை மேற்பார்வையிட ஒரு செயற்குழு உருவாக்கப்படுகிறது” இவ்வாறு அக்கட்சி தெரிவித்துள்ளது,. அசாம் மாநிலத்துக்கு வரும் … Read more

நீட் எதிர்ப்பு முதல் ‘ஜெய் ஸ்ரீராம்’ வரை – புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்வில் கவனம் ஈர்த்தவை!

புதுடெல்லி: 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, பர்த்ருஹரி பஹதாப் மக்களவைக்கு வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும், புதிய உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிராமணம் செய்து வைத்தார். முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், … Read more

மாநிலங்களவையின் அவை முன்னவராக ஜெ.பி.நட்டா நியமனம்

புதுடெல்லி: மாநிலங்களவையின் அவை முன்னவராக இருந்த பியூஷ் கோயலுக்குப் பதில் அந்தப் பொறுப்புக்கு ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான ஜெ.பி. நட்டா, கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, நரேந்திர மோடியின் 3.0 அரசில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அவர் பதவியேற்றார். இந்நிலையில், மாநிலங்களவையின் அவை முன்னவராக இருந்த பியூஷ் கோயலுக்குப் பதில் அந்த பதவிக்கு ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வடக்கு மும்பை … Read more

“எமர்ஜென்சி, கோஷங்கள்…” – பிரதமர் மோடியின் அறிவுரையும், காங்கிரஸின் பதிலடியும்!

புதுடெல்லி: அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, “மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களை அல்ல” என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, “50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள். நாங்கள் மக்களுக்காக, மக்களவையிலும், தெருக்களிலும் அனைவருக்கும் முன்பாக குரல் (கோஷம்) எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்” என்று பதிலடி தந்துள்ளார். 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குவதற்கு … Read more

7 ஆண்டு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு: பிரதமர் மோடி

புதுடெல்லி: ஏழு வருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தரவுகளின்படி, ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு, மாவு, அழகுசாதனப் பொருட்கள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி போன்ற பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்திருப்பதாக பத்திரிகை ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டிருந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017, ஜூலை 1-ம் தேதி … Read more

அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய திமுகவுக்கு அழுத்தம்: கார்கேவுக்கு நட்டா கடிதம்

புதுடெல்லி: கள்ளக்குறிச்சி துயர சம்பவத்தை அடுத்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிழுதியுள்ள கடிதத்தில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் … Read more