“இண்டியா கூட்டணிக்கு தொலைநோக்குப் பார்வையோ, நம்பிக்கையோ இல்லை” – பிரதமர் மோடி தாக்கு

கயா(பிஹார்): இண்டியா கூட்டணிக்கு தொலைநோக்குப் பார்வையும் இல்லை; நம்பிக்கையும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிஹாரின் கயா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “பாஜவின் உறுதிமொழிப் பத்திரம் (தேர்தல் அறிக்கை) இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. சில கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை ‘கேரண்டி கார்டு’ என அழைப்பது இதுவே முதல் முறை. நமது அரசியலமைப்புச் சட்டம் தூய்மையானது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் … Read more

ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி; பலர் மாயம்

புதுடெல்லி: ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆற்றில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ள சூழலில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்ன? ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரின் ஜீலம் ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உட்பட பல பயணிகளை ஏற்றிச் சென்ற படகு இன்று (செவ்வாய்க்கிழமை) கவிழ்ந்தது. படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். … Read more

சிபிஐ விசாரணை முடிந்தது; கவிதாவுக்கு 9 நாட்கள் நீதிமன்ற காவல்

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கே.கவிதாவின் சிபிஐ காவல் முடிவடைந்ததை தொடர்ந்து,அவரை ஏப்ரல் 23-ம் தேதிவரை 9 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினரும், முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத் துறையினர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். கவிதாவை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய … Read more

பாஜக தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களை சோதனை செய்வார்களா? – மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா: மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான போட்டி வாய்ப்பை வழங்க மத்தியஅரசு மறுக்கிறது. குறிப்பாக, எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தும் ஹெலிகாப்டரில் பணம், தங்கம் இருப்பதாக … Read more

‘விஐபி’ கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி: சுங்கச் சாவடிகளில் கட்டண சலுகை விரைவில் ரத்து

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ மூலம் கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. குறிப்பாக ஆம்புலன்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சகம், தீயணைப்பு, போலீஸ் மற்றும் உயரதிகாரிகளின் வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி யார் யார் கட்டண சலுகை பெறக்கூடியவர்கள் என்ற விவரங்கள் அடங்கிய பெரும் அறிவிப்பு பலகைகள் சுங்கச் சாவடி வருவதற்கு முன்பே சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சுங்கச் சாவடிகளில் இந்த விஐபி … Read more

நாடு முழுவதும் தீவிர சோதனையில் ரூ.4,658 கோடி பணம், பொருள் பறிமுதல்: தமிழகத்தில் ரூ.460 கோடி பிடிபட்டதாக தகவல்

சென்னை: மக்களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் ரூ.4,658 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிக அளவிலான பணம், தங்கம் போன்ற பொருட்கள் … Read more

கியூஆர் கோடு செயின் மூலம் குடும்பத்துடன் சேர்ந்த சிறுவன்

மும்பை: மும்பையில் காணாமல் போன, மனவளர்ச்சி குன்றிய 12 வயது சிறுவன், கியூஆர் கோடு டாலர் செயின் உதவியால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தான். மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையின் வொர்லி பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 12 வயது சிறுவன் கடந்த வியாழக் கிழமை மாலை தங்கள் வீட்டுக்கு அருகில் பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவனை திடீரென காணவில்லை. பெற்றோர் அக்கம்பக்கத்தில் சிறுவனை தேடி வந்தனர். எனினும் சிறுவனைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் … Read more

வேலைக்கு அனுமதி கிடைத்த நிலையில் கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

புதுடெல்லி: ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிராக் அன்டில், வயது 24. கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவுக்கு சென்று அங்குள்ள தெற்கு வான்கூவரில் எம்பிஏ படித்து முடித்துள்ளார். அங்கேயே வேலை செய்வதற்கான அனுமதியும் சமீபத்தில் கிடைத்துள்ளது. கடந்த 12-ம் தேதி இரவு காரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து வான்கூவர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், சிராக் அன்டில் உடலை … Read more

காங்கிரஸ் சார்பில் வடகிழக்கு டெல்லியில் போட்டியிடும் கன்னையா குமார்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை வடகிழக்கு டெல்லி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த 2017-ல் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் வென்றதன் மூலம் பிரபலம் அடைந்தவர் கன்னையா குமார். புரட்சிப் பேச்சாளரான இந்த இளைஞர் பிஹாரைசேர்ந்தவர். தனது முனைவர் பட்டத்திற்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான பேகுசராயில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில் … Read more

ம.பி. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ரேவா: மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள மணிகா கிராமத்தில், 70 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, பயன்படுத்தப் படாமல் கைவிடப்பட்டது. இந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை, 6 வயது சிறுவன் தவறி விழுந்து, 40 அடி ஆழத்தில் சிக்கி கொண்டான். உடனடியாக மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 40 மணி நேர போராட்டத்துக்கு பின் நேற்று காலை 8 மணியளவில் சிறுவன் இருக்கும் … Read more