பிரதமர் மோடி பேட்டி: 'சனாதனம் குறித்து கேவலமான கருத்து…' திமுக மீது சராமாரி குற்றச்சாட்டு

PM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார். 

சிபிஐ காவல் நிறைவு: ஏப்.23 வரை கவிதாவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவின் 3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் அவரை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத் துறை மார்ச் 15-ம் தேதி கைது செய்தது. அவரை முதலில் 7 … Read more

“இந்தியாவில் தொடங்கிவிட்ட ராம ராஜ்ஜியத்தை யாராலும் தடுக்க முடியாது” – ராஜ்நாத் சிங்

கதுவா: “இந்தியாவில் ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது, அதை யாராலும் தடுக்க முடியாது. ராம ராஜ்ஜியம் என்பது மக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து, விழிப்புணர்வைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது” என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள பாசோலியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் ராமராஜ்ஜியம் தொடங்கிவிட்டது. அதை யாராலும் தடுக்க முடியாது. … Read more

இந்தியாவில் நடப்பு ஆண்டு சராசரிக்கு அதிகமாக பருவமழை பெய்யும்: ஐஎம்டி கணிப்பு

புதுடெல்லி: நடப்பு ஆண்டில் இந்தியாவில் சராசரிக்கு அதிகமாக பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒட்டுமொத்த மழைப்பொழிவு 106 சதவீதமாகவும், நீண்ட கால சராசரி 87 செ.மீ என்றளவிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மட்டும் இயல்பைவிட குறைந்த அளவு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை காலத்தின் ஆரம்பப் பகுதியில் எல் நினோ காலநிலை நிகழ்வு வலுவிழக்கும், அதேவேளையில் ஏற்கெனவே பலமிழந்திருந்த லா நினா காலநிலை நிலவரம் … Read more

“சிறையில் கேஜ்ரிவாலை பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள்” – பகவந்த் மான் ஆதங்கம்

புதுடெல்லி: “சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதியை பிடித்தது வைத்திருப்பது போல் அவரை நடத்துகிறார்கள்” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பகவந்த் மான் திஹார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை திங்கள்கிழமை சந்தித்தார். இரு தலைவர்களும் இன்டர்காம் மூலம் பேசியதாக … Read more

மக்களவை தேர்தல் 2024 | ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்; அசாமில் ஆச்சரியம்

புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 350 பேர் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. 1997 ஆம் ஆண்டு ரான் பகதூர் காலமானார். சோனித்பூர் மாவட்டம் என்பது ரங்கப்பாரா சட்டப்பேரவை தொகுதி மற்றும் சோனித்பூர் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இவருடைய குடும்பத்தில் … Read more

நீதித்துறை மீது திட்டமிட்ட அவதூறு… ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என ஓய்வு பெற்ற 21 நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதம் எழுதியுள்ளது.

“இந்தியர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முதன்மையானது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: ஈரான் – இஸ்ரேல் மோதலால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், “இந்தியர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முதன்மையானது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள பாஜகவின் தேசிய தலைமையகத்தில் நேற்று (ஞாயிறு) தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “பாஜக அரசு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இது உலகளாவிய சவால்களை வழிநடத்தவும், போரில் … Read more

பாஜக 350, காங்கிரஸ் 43 – ‘சாட்டா பஜார்’ தேர்தல் கருத்து கணிப்பில் தகவல்

தேர்தல் கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானின் பலோடி நகரம் முதலிடம் வகிக்கிறது. இங்கு சொல்லப்படும் கணிப்புகள் பெரும்பாலும் நிஜமாகின்றன. உப்பு, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உற்பத்திக்கு மிகவும் பெயர் பெற்ற நகரம் பலோடி. ஜோத்பூரிலிருந்து 142 கி.மீ. தொலைவில் உள்ள தார் பாலைவனத்தின் இடையில் அமைந்துள்ள இந்த நகரத்தில் ஏராளமான ஆலைகள் அமைந்துள்ளன. அதேபோன்று, அரசியல், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் கருத்து கணிப்புகளை நடத்தும் சாட்டா பஜாரும் இங்குதான் அமைந்துள்ளது. பலோடி மிகப்பெரிய அதேநேரம் மிக நுணுக்கமாக … Read more

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு: கேரள நபர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்தவர் நபீல்நாசர். இவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பதிவிட்டு வந்துள்ளார். இதைப் பார்த்த உள்ளூர் பாஜக ஆதரவாளர் ஒருவர், நபீல் நசீர் மீது காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து பலோடு காவல் துறை நபீல் நசீர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. கலவரத்தைத் தூண்டுதல், தேர்தலை நோக்கமாகக் கொண்டு பொய் தகவலைப் பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக நபீல் நாசர் மீது பல்வேறு பிரிவுகளின் … Read more