நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை தொடங்கியது: மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது

புதுடெல்லி: நீட் நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விசாரணையை சிபிஐ தொடங்கியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே 5-ம் தேதிநடைபெற்றது. இதற்கான ஆன்லைன்விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9-ம்தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதிநடந்தது. பின்னர், விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டது. இதன்பிறகு, திடீரென ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில்ஆன்லைனில் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு … Read more

அயோத்தி ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்த ஆச்சார்யா லஷ்மிகாந்த் மறைவு: மோடி இரங்கல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆச்சர்யா லஷ்மிகாந்த் தீட்சித் (82) காலமானார். அயோத்தி கோயிலில் புதிய ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்த அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வாரணாசியின் நூறு வருட பழமையான வல்லப்ராம் சாலிகிராம் சாங்கவேத வித்யாலயா எனும் வேத பாடசலையில் வேதங்கள் கற்றுத் தரும் பணி செய்தவர், டாக்டர்.லஷ்மிகாந்த் தீட்சித். இவர், தென்னிந்தியா தவிர நாடு முழுவதிலும் பல முக்கிய பெரிய … Read more

இண்டியா கூட்டணி மவுனம் காப்பது ஏன்? – பாஜக கண்டனம் @ கள்ளக்குறிச்சி விவகாரம்

புதுடெல்லி: தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச் சாராய மரண விவகாரத்தில் இண்டியா கூட்டணி அமைதி காப்பது குறித்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்பி சம்பித் பத்ரா, “தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் பருகி 56 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் … Read more

நெட் தேர்வு முறைகேடு: பிஹாரில் விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல்; 4 பேர் கைது

பாட்னா: பிஹார் மாநிலத்தில் நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான 4 பேரை போலீஸார் கைது செய்தனர். யுஜிசி-நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ. அந்த வகையில், பிஹார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு … Read more

நீட் மறுதேர்வு: 1,563 மாணவர்களில் 750 பேர் ஆப்சென்ட்!

புதுடெல்லி: கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 750 பேர் கலந்து கொள்ளவில்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து, நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வினாத்தாள் கசிவு, … Read more

அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

புதுடெல்லி: அயோத்தி ஹனுமன் கோயில் மடத்தலைவர் ராஜு தாஸின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இங்கு பாஜக தோல்வியால் தொடரும் சர்ச்சை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடந்து மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு உத்தரப்பிரதேசத்தில் பின்னடைவு ஏற்பட்டது. அயோத்தியில் அக்கட்சி அடைந்த தோல்வி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இதையடுத்து எழுந்த சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்த பட்டியலில், புதிதாக அயோத்தியின் ஹனுமன் கோயில் மடத்தலைவர் ராஜு தாஸின் பாதுகாப்பு வாபஸ் விவகாரமும் இணைந்துள்ளது. பாஜக … Read more

மருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் தனது அரசியல் வாரிசாக அறிவித்தார் மாயாவதி

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மீண்டும் அறிவித்தார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியும் ஆகாஷ் ஆனந்துக்கு மீண்டும் அளிக்கப்பட்டது. லக்னோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாயாவதியின் அண்ணன் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். லண்டனில் எம்பிஏ படித்தவர். கடந்த 2017-ல் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதியுடன் … Read more

“கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் 56 பேர் இறந்துள்ளனர். பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பட்டியலின மக்கள். இந்த சம்பவத்தை கண்டிக்கிறேன். இதற்கு எதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசால் நடத்தப்படும் ‘டாஸ்மாக்’ … Read more

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் | சிபிஐ வழக்குப் பதிவு; விசாரணை தொடக்கம்

புதுடெல்லி: கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் அளித்த புகாரின் பேரில், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதே முறைகேட்டில் பதியப்பட்டுள்ள மற்ற வழக்குகளையும் தம்வசம் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கைகளையும் சிபிஐ மேற்கொண்டுள்ளது. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை … Read more

மேற்கு வங்கத்தில் நில அபகரிப்பை தடுக்க புதிய செயற்குழு

கொல்கத்தா: அரசுக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்படுவதைத் தடுக்க மேற்கு வங்க மாநில அரசு மூத்த அரசு அதிகாரிகள் அடங்கிய செயற்குழு ஒன்றை அமைத்துள்ளது. இது தொடர்பாக அரசு வட்டாரங்கள் வட்டம் கூறியதாவது: அரசாங்கத்துக்கு சொந்தமான நிலங்களை சட்ட விரோதமாக அபகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்த செயற்குழு ஒன்றை முதல்வர் மம்தா பானர்ஜி நிறுவ முடிவெடுத்துக் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். மேற்கு வங்க அரசின் நிதித்துறை செயலாளர் மனோஜ் பந்த், மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரபாத் மிஸ்ரா, … Read more