கியூஆர் கோடு செயின் மூலம் குடும்பத்துடன் சேர்ந்த சிறுவன்

மும்பை: மும்பையில் காணாமல் போன, மனவளர்ச்சி குன்றிய 12 வயது சிறுவன், கியூஆர் கோடு டாலர் செயின் உதவியால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தான். மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையின் வொர்லி பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 12 வயது சிறுவன் கடந்த வியாழக் கிழமை மாலை தங்கள் வீட்டுக்கு அருகில் பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவனை திடீரென காணவில்லை. பெற்றோர் அக்கம்பக்கத்தில் சிறுவனை தேடி வந்தனர். எனினும் சிறுவனைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் … Read more

வேலைக்கு அனுமதி கிடைத்த நிலையில் கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

புதுடெல்லி: ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிராக் அன்டில், வயது 24. கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவுக்கு சென்று அங்குள்ள தெற்கு வான்கூவரில் எம்பிஏ படித்து முடித்துள்ளார். அங்கேயே வேலை செய்வதற்கான அனுமதியும் சமீபத்தில் கிடைத்துள்ளது. கடந்த 12-ம் தேதி இரவு காரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து வான்கூவர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், சிராக் அன்டில் உடலை … Read more

காங்கிரஸ் சார்பில் வடகிழக்கு டெல்லியில் போட்டியிடும் கன்னையா குமார்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை வடகிழக்கு டெல்லி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த 2017-ல் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் வென்றதன் மூலம் பிரபலம் அடைந்தவர் கன்னையா குமார். புரட்சிப் பேச்சாளரான இந்த இளைஞர் பிஹாரைசேர்ந்தவர். தனது முனைவர் பட்டத்திற்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான பேகுசராயில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில் … Read more

ம.பி. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ரேவா: மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள மணிகா கிராமத்தில், 70 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, பயன்படுத்தப் படாமல் கைவிடப்பட்டது. இந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை, 6 வயது சிறுவன் தவறி விழுந்து, 40 அடி ஆழத்தில் சிக்கி கொண்டான். உடனடியாக மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 40 மணி நேர போராட்டத்துக்கு பின் நேற்று காலை 8 மணியளவில் சிறுவன் இருக்கும் … Read more

கங்கனா ரணாவத்தை எதிர்க்கும் காங்கிரஸின் விக்ரமாதித்ய சிங்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், இமாச்சல பிரதேச அமைச்சருமான விக்ரமாதித்ய சிங் மண்டி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டி தொகுதியில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மண்டி தொகுதியில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனினும், மண்டி தொகுதி காங்கிரஸ் கட்சியைச் … Read more

பிரதமர் மோடி பேட்டி: 'சனாதனம் குறித்து கேவலமான கருத்து…' திமுக மீது சராமாரி குற்றச்சாட்டு

PM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார். 

சிபிஐ காவல் நிறைவு: ஏப்.23 வரை கவிதாவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவின் 3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் அவரை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத் துறை மார்ச் 15-ம் தேதி கைது செய்தது. அவரை முதலில் 7 … Read more

“இந்தியாவில் தொடங்கிவிட்ட ராம ராஜ்ஜியத்தை யாராலும் தடுக்க முடியாது” – ராஜ்நாத் சிங்

கதுவா: “இந்தியாவில் ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது, அதை யாராலும் தடுக்க முடியாது. ராம ராஜ்ஜியம் என்பது மக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து, விழிப்புணர்வைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது” என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள பாசோலியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் ராமராஜ்ஜியம் தொடங்கிவிட்டது. அதை யாராலும் தடுக்க முடியாது. … Read more

இந்தியாவில் நடப்பு ஆண்டு சராசரிக்கு அதிகமாக பருவமழை பெய்யும்: ஐஎம்டி கணிப்பு

புதுடெல்லி: நடப்பு ஆண்டில் இந்தியாவில் சராசரிக்கு அதிகமாக பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒட்டுமொத்த மழைப்பொழிவு 106 சதவீதமாகவும், நீண்ட கால சராசரி 87 செ.மீ என்றளவிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மட்டும் இயல்பைவிட குறைந்த அளவு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை காலத்தின் ஆரம்பப் பகுதியில் எல் நினோ காலநிலை நிகழ்வு வலுவிழக்கும், அதேவேளையில் ஏற்கெனவே பலமிழந்திருந்த லா நினா காலநிலை நிலவரம் … Read more

“சிறையில் கேஜ்ரிவாலை பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள்” – பகவந்த் மான் ஆதங்கம்

புதுடெல்லி: “சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதியை பிடித்தது வைத்திருப்பது போல் அவரை நடத்துகிறார்கள்” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பகவந்த் மான் திஹார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை திங்கள்கிழமை சந்தித்தார். இரு தலைவர்களும் இன்டர்காம் மூலம் பேசியதாக … Read more