“டைனோசரைப் போல் இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் அழியும்” – ராஜ்நாத் சிங்

கார்வால்: டைனோசரைப் போல் இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அழிந்து விடும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட்டின் கார்வால் அருகே உள்ள கவுச்சர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “காங்கிரஸில் இருந்து தலைவர்கள் வெளியேறுவது தொடர்கிறது. ஒருவர் பின் ஒருவராக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் கட்சியானது டைனோசர் போல அழிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இன்னும் சில … Read more

பெங்களூரு | ராமேஸ்வரம் கஃபே-வில் குண்டுவைத்த நபர் உள்பட இருவர் கொல்கத்தாவில் கைது

பெங்களூரு: ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்த நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே இன்று (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட அப்துல் மதீன் அகமது தாஹா(வயது … Read more

எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன.. கவிதாவை காவலில் எடுக்க சிபிஐ கோரிக்கை

BRS MLC Kavita: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு விசாரணையில், பிஆர்எஸ் எம்எல்சி கவிதாவை 5 நாள் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

“டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி” – அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

புதுடெல்லி: “டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. கேஜ்ரிவால் அரசை சீர்குலைக்க அரசியல் சதி நடக்கிறது” என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிஷி, “கேஜ்ரிவால் போலி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதி நடந்து வருகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் என்னிடம் கூறுகின்றன. எனவே தான் எந்த ஆதாரமும் இல்லாமல் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் நடந்த சில சம்பவங்களை … Read more

‘கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை’ – டி.கே.சிவகுமார்

கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றப் போவதாக பாஜக பொய் பிரச்சாரம் செய்துவருகிறது. ஆர்எஸ்எஸ், பாஜக மேலிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி அவர்களுக்கு 250 இடங்கள் கூட கிடைக்காது என தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகம் ஆகியவற்றை பாஜக த‌ங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதனை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நாட்டில் … Read more

வெப்ப அலை எச்சரிக்கை: உரிய முன்னேற்பாடுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி நேற்றிரவு (வியாழன்) இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார். நேற்றிரவு நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஏப்ரல் முதல் ஜூன் வரை நிலவக்கூடிய வெப்பநிலை பற்றி பிரதமருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக மேற்கு மற்றும் மத்திய … Read more

ஒட்டுமொத்த இந்தியர்களும் எனது குடும்பம்: உத்தராகண்ட் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ஒட்டுமொத்த இந்தியர்களும் எனது குடும்பம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தராகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: உத்தராண்டின் 4 முக்கிய புனித தலங்களும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தின் அனைத்து கோயில்களின் அடிப்படை வசதிகளும் … Read more

காஷ்மீர் என்கவுன்ட்டரில் தீவிரவாதி உயிரிழப்பு

ஸ்ரீநகர்:தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், ராஜ்போரா பகுதியில் உள்ள ப்ரெஸ்ஸிபோரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இவர் ஸ்ரீநகரை சேர்ந்த தானிஷ் ஷேக் எனவும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ‘தி ரெசிஸ்டன்ட் ஃப்ரன்ட்’ பிரிவைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டார். சம்பவ … Read more

நவராத்திரி நாளில் வறுத்த மீன் சாப்பிடலாமா? – விமர்சனத்துக்கு உள்ளான தேஜஸ்வி யாதவ்

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்ஜேடி) தலைவரும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பிரச்சாரத்துக்காக, ஹெலிகாப்டரில் பறந்து கொண் டிருக்கும்போது வறுத்த மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் ராம நவமியையொட்டி கொண்டாடப்படும் நவராத்திரி நாளில் மீன் சாப்பிடும் தேஜஸ்வி யாதவை, பாஜக மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிஹாரில் கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் … Read more

நாட்டில் பலவீனமான அரசுகள் இருந்தபோதெல்லாம் பயங்கரவாதம் பரவியது: பிரதமர் மோடி பேச்சு

ரிஷிகேஷ்: நாட்டில் பலவீனமான, நிலையற்ற அரசுகள் இருந்தபோதெல்லாம், எதிரிகள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட்டின் ரிஷிகேஷ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள். ஆனால், எப்போதெல்லாம் பலவீனமான அரசுகள் இருந்தனவோ அப்போதெல்லாம் அதனை நமது நாட்டின் எதிரிகள் தங்களுக்கு சாதகமாகப் … Read more