Uttar Pradesh Lok Sabha Election Result 2024: மீண்டும் யோகியா இல்லை அகிலேஷ் அதிர்ச்சி கொடுப்பாரா?

Uttar Pradesh Election Result 2024: இந்தியாவின் மிக முக்கியமான, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தின் நிலவரம் பற்றி இந்த பதிவில் காணலாம். உத்தர பிரதேசம் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான ஒரு மாநிலமாக இருந்துள்ளது.

வயநாட்டில் ராகுல் வாக்கு சதவீதம் சரியும்: கேரள கருத்து கணிப்பில் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் விஎம்ஆர்-மனோரமா நியூஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் யுடிஎப் 16 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 2 இடங்களிலும் வெற்றி பெறும், எஞ்சிய 2 இடங்களில் இரு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆலத்தூர், கண்ணூர் ஆகிய … Read more

சரியான நேரத்தில் கைது செய்யாததே மல்லையா, நீரவ் மோடி தப்பியோட காரணம்: மும்பை சிறப்பு நீதிமன்றம் கருத்து

மும்பை: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வியோமேஷ் ஷா என்பவர் வெளிநாடு செல்வதற்கான முன் அனுமதி பெறுவதற்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் மே 29-ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை இயக்குநரகம் (இ.டி.) வியோமேஷ் ஷாவின் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் மெகுல் சோக்சி போன்றோரின் … Read more

64.20 கோடி வாக்காளர்களுடன் மக்களவைத் தேர்தல் உலக சாதனை: தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல், 64.20 கோடி வாக்காளர்களுடன் உலக சாதனை படைத்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்திய தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் … Read more

“தமிழக வளர்ச்சிக்காக உழைத்தவர்!” – கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் பலரும் அவருடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கருணாநிதியின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பொது வாழ்வில் … Read more

“டெல்லியிலேயே இருக்க வேண்டும்” – இண்டியா கூட்டணியினருக்கு காங்கிரஸ் அழைப்பு

புதுடெல்லி: நாளை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லியிலேயே தங்கி இருக்குமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ள நிலையில், இண்டியா கூட்டணி இதனை எதிர்த்துள்ளது, மேலும் தங்கள் கூட்டணி 295 இடங்களில் வெற்றி … Read more

“யாருக்கும் அஞ்சாதீர்கள்” – அரசு அதிகாரிகளுக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: நாளை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: எதிர்கட்சி தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். யாருக்கும் அஞ்சாதீர்கள். அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான எந்தவொரு வழிமுறைக்கும் தலைவணங்க வேண்டாம். வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் பயப்படாதீர்கள். தகுதியின் அடிப்படையில் … Read more

ஜெயராம் ரமேஷின் கோரிக்கை நிராகரிப்பு: அமித் ஷா விவகாரத்தில் உடனே பதிலளிக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: 150 மாவட்ட ஆட்சியர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தெரிவித்த கருத்து தொடர்பான தகவல்களை இன்று மாலை 7 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று ஜெயராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடந்த 1-ம் தேதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பதவி பறிபோக உள்ள உள்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறார். இதுவரை 150 பேரிடம் பேசியுள்ளார். இது அப்பட்டமான மற்றும் … Read more

‘‘தொங்கு நாடாளுமன்றம் உருவானால்…” – குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம்

புதுடெல்லி: தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும், அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 7 பேர் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் … Read more

டெல்லி அருகே தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் தீ விபத்து: பயணிகளுக்கு பாதிப்பு இல்லை

டெல்லி: துக்ளகாபாத் – ஓக்லா இடையே ஓடும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளில் இன்று மாலை தீப்பிடித்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, “தீ விபத்தில் … Read more