நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மாற்றுவோம்: ப. சிதம்பரம்

கொல்கத்தா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற இலக்கியத் திருவிழா 2024ல் பங்கேற்று தனது புத்தகம் குறித்து பேசிய ப. சிதம்பரம், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மாற்றுவோம். புதிய பணமோசடி தடுப்புச் சட்டத்தை இயற்றுவோம். தற்போதைய பண மோசடி தடுப்புச் சட்டத்தை நாங்கள் விருப்பத்தோடு அமல்படுத்தவில்லை. இந்த சட்டம் கடந்த 2002ல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த … Read more

டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: இணையம், எஸ்எம்எஸ் சேவைகள் ரத்து

விவசாயிகள் திட்டமிட்டிருக்கும் ‘டெல்லி சலோ’ பேரணியை முன்னிட்டு, பிப்ரவரி 13ம் தேதி வரை பல மாவட்டங்களில் மொபைல் இன்டர்நெட், மொத்தமாக அனுப்பப்படும் எஸ்எம்எஸ் (பல்க் எஸ்எம்எஸ்), டாங்கிள் சேவைகள் ஆகியவை நிறுத்தப்படுவதாக முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான ஹரியானா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

பிஹாரில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: தே.ஜ. கூட்டணிக்கு வாக்களிக்க 4 எம்எல்ஏ.க்களுக்கு மாஞ்சி உத்தரவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், தே.ஜ.கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி இந்துஸ்தானி அவாம்மோர்ச்சா கட்சியின் 4 எம்எல்ஏ.க்களுக்கு முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உத்தரவிட்டுள்ளார். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் மெகா கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் தே.ஜ.கூட்டணியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார். இந்த அரசு சட்டப் பேரவையில் நாளை நம்பிக்கைவாக்கெடுப்பை சந்திக்கிறது. இதை சீர்குலைக்கும் முயற்சியில் மெகா கூட்டணி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. … Read more

வரும் 13-ல் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி: சுவாமி நாராயண் கோயிலை திறந்துவைக்கிறார்

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 13-ம் தேதி செல்லவுள்ளார். அப்போது அங்கு கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் திறந்துவைக்கவுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். மேலும், கூடுதலாக … Read more

மத்திய அரசின் நலத்திட்டங்களால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக பலன்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: மத்திய அரசின் திட்டங்களால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், பழங்குடியினர் அதிகமாக பலன் அடைந்து வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் அரசு சார்பில் வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த குஜராத் திட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத்தில் அண்மையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. குஜராத்தின் அனைத்துப் பகுதிகளும் அதிவேகமாக வளர்ச்சிஅடைந்து வருகின்றன.ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் வீடு … Read more

மரண தண்டனைக் கைதிகள் எண்ணிக்கை 561-ஆக உயர்வு

புதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு நாட்டில் உள்ள மரணதண்டனை கைதி எண்ணிக்கை561-ஆக உயர்ந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தேசிய சட்ட பல்கலைக்கழகம் சார்பில் `இந்தியாவில் மரண தண்டனை: ஆண்டு புள்ளியியல் அறிக்கை’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் உள்ள மரண தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 561-ஆக உயர்ந் துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 120 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய மரணதண்டனை தீர்ப்பை, 2021-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து … Read more

மகாராஷ்டிர அமைச்சர் சாகன் பூஜ்பாலுக்கு கொலை மிரட்டல் – பின்னணி என்ன?

மும்பை: மகாராஷ்டிரா உணவுத் துறை அமைச்சர் சாகன் பூஜ்பாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சாகன் பூஜ்பால் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் பிரிவில் இருக்கிறார். மராத்தா இடஒதுக்கீட்டு விவகாரத்தில் அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், இக்கடிதம் குறித்து அவர், “எனக்கு எத்தனை மிரட்டல் வந்தாலும் நான் என் நம்பிக்கையில் இருந்து பின்வாங்கமாட்டேன்” என்றார். இருப்பினும் சாகன் பூஜ்பால் வசிக்கும் நாசிக் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்துக்கு வந்த … Read more

“சரண் சிங்கை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்” – கார்கே மீது ஜக்தீப் தன்கர் காட்டம்

புதுடெல்லி: பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் சரண் சிங்கை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதித்து விட்டதாக அவரைச் சாடிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “முன்னாள் பிரதமர் சரண் சிங்கை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்” என்று தெரிவித்தார். ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரியை மாநிலங்களவையில் பேச அனுமதித்த அவைத் தலைவரின் முடிவை மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அவைத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அவையில் பேசிய மல்லிகார்ஜுன … Read more

“பஞ்சாப், சண்டிகரில் 14 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி” – கேஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி: பஞ்சாப் மற்றும் சண்டிகரில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆம் ஆத்மியே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருக்கிறார். பஞ்சாப் அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாய விலை பொருள்கள் வீட்டு வாசலில் வழங்கும் திட்டத்தை அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு வருடங்களுக்கு முன்னதாக (சட்டசபை தேர்தலில்) உங்களின் ஆசீர்வாதம் எங்களுக்குக் … Read more

‘கர்நாடகாவில் பாஜகவை போல காங். ஆட்சியிலும் 40% கமிஷன்’ – ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சியின்போது அரசின் திட்ட பணிகளில் 40 சதவீத கமிஷன் வாங்கப்பட்டதைப் போலவே இப்போதைய‌ காங்கிரஸ் ஆட்சியிலும் 40 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என அம்மாநில ஒப்பந்ததாரர் கூட்டமைப்பின் தலைவர் கெம்பண்ணா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் அரசின் திட்ட பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் 40 சதவீதம் கமிஷன் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையே முன்வைத்து காங்கிரஸார் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். இதனால் தேர்தலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு … Read more