யோகா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

புதுடெல்லி: யோகா, சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்துபஞ்சாயத்துக்கு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத் துள்ளார். சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பஞ்சாயத்துக்கு தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ‘நமக்கு மற்றும் சமுதாயத் துக்காக யோகா’ என்ற கருத்துருவின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் நமக்கு வழங்கிய மிகப்பெரிய … Read more

ஆட்கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமீன்: கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரு: தங்கள் வீட்டின் முன்னாள் பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது கர்நாடக நீதிமன்றம். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பவானி ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றச்சாட்டு உள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, தாயார் பவானி உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பவானி ரேவண்ணா தலைமறைவானார். மேலும் ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு … Read more

“நீட் பிரச்சினையில் பிரதமர் மோடி வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறார்” – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி வழக்கம்போல் மவுனம் சாதிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆண்டு நடத்தப்பட்ட இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததை எதிர்த்தும், முறைகேடுகள் நடந்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நீட் நுழைவுத் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது. அதுபோன்ற அலட்சியம் இருப்பதாக தெரியவந்தால் அதனை உடனடியாக சரி … Read more

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்: 7 கேள்விகளுடன் காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நேற்று இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அசாமின் சில்சார் இடையே இயக்கப்படும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது பின்னாள் வந்த சரக்கு ரயில் மோதியதில் இந்த விபத்து … Read more

“பிரியங்கா எம்.பி ஆன பிறகு நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” – ராபர்ட் வதேரா

புதுடெல்லி: “பிரியங்கா காந்தி எம்.பி ஆன பிறகு நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” என அவரது கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ராபர்ட் வதேரா, “பிரியங்கா வயநாட்டில் போட்டியிடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கும் அவர் கடுமையாக உழைப்பார். வயநாட்டு மக்கள் அவரை வெற்றிபெறச் செய்வார்கள் என்று நம்புகிறேன். நான் தீவிர அரசியலில் நுழைவது குறித்து என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம், பிரியங்கா எம்பி ஆன பிறகு நான் … Read more

உ.பி.யில் 10 தொகுதிகளில் பேரவை இடைத்தேர்தல்: அகிலேஷ் – ராகுல் கூட்டணி மீண்டும் இணையுமா?

புதுடெல்லி: எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் மக்களவைக்கு தேர்வானதால் உத்தரப் பிரதேசத்தின் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதிலும், அகிலேஷ் யாதவ் – ராகுல் காந்தி ஜோடி ஒன்றிணையுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளால் அனைவரது பார்வையும் உத்தரப்பிரதேசம் மீது திரும்பியுள்ளன. மக்களவைக்கு தேர்வான 10 எம்பிக்களால் அவர்கள் எம்எல்ஏவாக இருந்த சட்டப்பேரவை தொகுதிகள் காலியாகிவிட்டன. இதில் சிஷாமாவ் தொகுதி எம்எல்ஏவான இர்பான் சோலங்கி, ஒரு வழக்கில் ஏழு வருட தண்டணை பெற்றதால் அந்த … Read more

ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது: என்சிஇஆர்டி தலைவர்

புதுடெல்லி: ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) தலைவர் டி.பி. சக்லானி தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவன செய்தி ஆசிரியர்கள் மத்தியில் உரையாடிய டி.பி. சக்லானி, “பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாதபோதிலும், ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை திணிக்கும் … Read more

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார் @ வாராணசி

வாரணாசி: விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தின் 17-வது தவணையை வாராணசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். வாராணசி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, தேர்தல் வெற்றிக்குப் பின் முதல்முறையாக இன்று வாராணசிக்கு வருகை தந்தார். அவரை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில், பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணையை … Read more

ரூ.500 கோடியில் ரகசிய மாளிகை: முன்னாள் முதல்வர் ஜெகன் மீதான குற்றச்சாட்டும் பின்னணியும்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முந்தைய ஜெகன் அரசால் கட்டப்பட்ட ரகசிய மாளிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிதாக பதவியேற்றுள்ள தெலுங்கு தேசம் அரசு குற்றம் சாட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில் கடலை பார்த்தவாறு கட்டப்பட்ட இந்த ரகசிய மாளிகை ஜெகனின் முகாம் அலுவலமாக மாற்றுவதற்காக தயாராகி வந்துள்ளது என தெலுங்கு தேசம் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாளிகையில் நிறுவப்பட்டுள்ள பாத் டப்பின் விலை மட்டும் ரூ.26 லட்சம் என்று தெலுங்கு தேசம் தரப்பில் சொல்லப்படுகிறது. அந்த அலுவலகமும், இடமும் … Read more

மூளை ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி-க்கு ரூ.41 கோடி நன்கொடை அளித்த முன்னாள் மாணவர்

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவரான பிரேம் வத்சாவை நிறுவனராகக் கொண்ட ஃபேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற கனடா நாட்டு நிதிநிறுவனம், சென்னை ஐஐடி -ன் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41 கோடி) ஆராய்ச்சி மானியமாக வழங்க உள்ளது. 1971-ல் சென்னை ஐஐடி-ன் ரசாயனப் பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற பிரேம் வத்சாவுக்கு 1999-ம் … Read more