அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: பிரதமர் மோடி

‘தி அசாம் டிரிபியூன்’ என்ற நாளிதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. பாஜக ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் வடகிழக்கில் தீவிரவாதம் தலைதூக்கி இருந்தது. தற்போது வடகிழக்கு முழுவதும் அமைதி நிலவுகிறது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் யாருக்கும் சந்தேகம்எழத் தேவையில்லை. அந்த மாநிலத்தின் நலனில் மத்திய அரசுஅதிக அக்கறை செலுத்துகிறது.அண்மையில் அருணாச்சல பிரதேசத்தில் ரூ.55,000 கோடிமதிப்பிலான … Read more

ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்த்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு @ சத்தீஸ்கர்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டம், அமாபால் கிராமத்தில் நேற்று பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பழங்குடி மக்களை காங்கிரஸ்முற்றிலுமாக புறக்கணித்தது. பாஜகவை பொறுத்தவரை பழங்குடி மக்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு நாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகிக்கிறார். சத்தீஸ்கரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் முதல்வராக பதவி வகிக்கிறார். சத்தீஸ்கரில் ஏழை மக்களுக்காக 18 லட்சம் வீடுகளை … Read more

“மோடி ஆட்சியில் இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன” – உ.பி முதல்வர் யோகி

புதுடெல்லி: “பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக மாறியுள்ளன” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தில் உள்ள ஹிங்கங்காட் நகரில் பாஜக வேட்பாளர் ராம்தாஸ் தடாஸுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக மாறியுள்ளன. இந்திய நாட்டின் மீதான மரியாதை உலகளவில் உயர்ந்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில், தேசிய ஜனநாயகக் … Read more

“மக்கள் நிலத்தை அபகரித்து அதானி போன்றோருக்கு அளித்தது பாஜக” – ராகுல் காந்தி

புதுடெல்லி: பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை மேற்கொள்காட்டி மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். மத்தியப் பிரதேசம் சியோனி மாவட்டத்தில் உள்ள தனோராவில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர், “பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். … Read more

“அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கம்தான்” – விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதில்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருப்பது தொடர்பான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட 30 இடங்களின் பெயரை சீனா மாற்றியது தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து பிரதமர் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, இனியும் இருக்கும். இன்று, வளர்ச்சிப் பணிகள் அருணாச்சல … Read more

மத்திய அரசின் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: மத்திய மற்றும் மாநில அரசுகளில் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய அவர், “இந்த சூழ்நிலையை உணர்வுபூர்வமாக கையாள்வது நமது கூட்டுப் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். இதுகுறித்து நான் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க நாங்கள் எங்களின் சிறந்த வளங்களையும் நிர்வாக இயந்திரங்களையும் அர்ப்பணித்துள்ளோம். … Read more

சமோசாவுக்குள் பீஃப் கலந்து விற்ற 6 பேர் கைது @ குஜராத்

காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதராவில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சமோசாவில் மாட்டிறைச்சி சேர்த்து விற்பனை செய்த காரணத்துக்காக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவல் காவல் துறைக்கு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது சமோசாவில் மாட்டிறைச்சி சேர்த்தது உறுதியாகியுள்ளது. அதனை பரிசோதனைக்காக ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர். ஆய்வு முடிவில் உணவில் மாட்டிறைச்சி சமோசாவில் சேர்த்திருந்தது உறுதியானது. அதையடுத்து சமோசா விற்ற கடையின் உரிமையாளர்கள் இருவர் மற்றும் ஊழியர்கள் நான்கு பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் … Read more

‘என் மனைவி, மகனுக்கு வேண்டாம்… எனக்கே சீட் வேண்டும்’ – பாஜகவிடம் அடம்பிடிக்கும் பிரிஜ் பூஷண்

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீண்டும் உத்தரப் பிரதேசத்தின் கைசர்கன்ச்சில் போட்டியிட அடம்பிடிக்கிறார். இவரது மகள் அல்லது மகனுக்கு அளிக்கப்பட உள்ள வாய்ப்புக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். தேசிய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் சரண் சிங். உ.பி/யின் கைசர்கன்ச் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆனால், இவர் மீது சில மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தனர். இவர் மீதான நடவடிக்கைக்காக பல மாதங்கள் டெல்லியின் … Read more

‘முஸ்லிம் லீக்’ சொல்லுடன் தேர்தல் அறிக்கையை விமர்சித்த மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக் முத்திரைக் கொண்டது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததைக் கண்டித்து, அவர் மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நானும் எனது சகாக்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கேரா, குர்தீப் சப்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மீது … Read more

சந்திரபாபு நாயுடுவின் வினோத வாக்குறுதி – மது பிரியர்கள் குஷி @ ஆந்திர தேர்தல் களம்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் என இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், குறைந்த விலையில் தரமான மது வகை வழங்க உறுதி செய்யப்படும் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அண்மையில் குப்பம் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார். “நான் இங்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி அமைந்த … Read more