முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ், விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னாவிருது வழங்கப்படுகிறது. மறைந்த பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு கடந்த ஜனவரி 23-ம் தேதியும், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு கடந்த3-ம் தேதியும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, … Read more

அளப்பரிய சேவைக்காக ‘பாரத ரத்னா’ பெறும் தலைவர்கள்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை பற்றிய விவரம்: விவசாயிகள் தலைவர்: கடந்த 1902-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டம், நூர்பூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் சவுத்ரி சரண் சிங் பிறந்தார். சட்டம் பயின்ற அவர் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று பலமுறை சிறைசென்றார். சுதந்திர போராட்ட காலம் முதல் காங்கிரஸில் இருந்த சரண் சிங் … Read more

சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பது குறித்த அறிவிப்பில், “முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டுக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புக்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. … Read more

சரண் சிங்குக்கு பாரத ரத்னா | பாஜக கூட்டணியை ‘உறுதி’ செய்த ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது பேரனும் ஆர்எல்டி தலைவருமான ஜெயந்த் சவுத்ரி, பாஜக உடன் கூட்டணி சேர உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். பாஜகவின் கூட்டணி அழைப்பு குறித்த கேள்விக்கு அவர், “என்னால் எவ்வாறு மறுக்க முடியும்?” என்று கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முந்தைய அரசுகள் செய்யாததை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி உள்ளார். இது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. எளிய … Read more

சந்திரபாபு, ஜெகன்மோகன் அடுத்தடுத்து டெல்லி விசிட் – பாஜகவைக் குறிவைத்து பயணமா?

சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது ஆந்திர தேர்தல் களம். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், அடுத்தநாளே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருக்கிறார். இரு மாநில கட்சிகள், பாஜகவுடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டுகின்றன. இதன் பின்னணி என்ன? மக்களவைத் தேர்தலுக்கு ஆந்திர தேர்தல் களம் தயாராகி வருகிறது. கடந்த தேர்தலை பாஜக தனித்து சந்தித்தது. ஓர் இடத்தில் … Read more

மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் சட்டங்கள்: மக்களவையில் கே.நவாஸ்கனி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவையில் நீர், மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திருத்த மசோதா 2024 மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி உரையாற்றினார். அப்போது அவர், மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாகவே மத்திய அரசின் சட்டங்கள் உள்ளதாக குற்றம் சுமத்தினார். இது குறித்து ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யான கே.நவாஸ்கனி பேசியதாவது: பாஜக அரசு மக்களுக்கு எதிரான அரசு சுற்றுச்சூழலுக்கு எதிரான அரசு, இயற்கைக்கு எதிரான அரசு. இதற்கொரு சான்றாக இந்த திருத்த … Read more

நாட்டைக் கடந்த காலத்துக்குள் புதைக்கிறது மத்திய அரசு: சு.வெங்கடேசன் எம்.பி @ மக்களவை

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலான வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது அவர், நிகழ்காலத்துக்கு அஞ்சி நாட்டைக் கடந்த காலத்துக்குள் புதைக்கப்படுவதாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தினார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்று மக்களவையில் பேசியதாவது: சில உயிர்கள் ஒளிக்கு அஞ்சி இருளிலே வாழும், சில மனிதர்கள் நிகழ்காலத்துக்கு அஞ்சி கடந்த காலத்திலே வாழ்வார்கள். அதேபோலத்தான் சில கட்சிகளும்… தேர்தல் வந்துவிட்டால் நாங்கள் … Read more

நீர்வள மசோதா, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது – மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் காட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா- 2024, மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி கதிர் ஆனந்த் இம்மசோதா இந்திய அரசியலைப்பு சட்டத்துக்கு எதிரானதாக இருப்பதாக கூறினார். இது குறித்து மக்களவையில் வெள்ளிக்கிழமை வேலூர் மக்களவை தொகுதி எம்பியான கதிர் ஆனந்த் பேசியதாதவது: இந்த மசோதா பல விதிமீறல்களை குற்றமற்றதாக மாற்றுகிறது. அதற்கு பதிலாக அபராதங்களை விதிக்கிறது. இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ள ஒரு கொடூரமான சட்டமாகும். மத்திய … Read more

Gyanvapi: மதுரா & வாரணாசி மசூதிகளுக்கு உரிமை கொண்டாட வேண்டாம்! கோரிக்கையால் வந்த வினை!

Islamic Cleric Detained: மகாபாரத்தில் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை கிருஷ்ணர் கேட்டார். ஆனால், தற்போது இந்து சமுதாயம் மூன்று இடங்களை மட்டுமே கோருகிறது!  

பொருளாதாரம் குறித்து மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை: காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி: ‘பொருளாதாரம் குறித்த மோடி அரசின் வெள்ளை அறிக்கை, ஒரு வெள்ளை பொய் அறிக்கை’ என்று சாடியிருக்கும் காங்கிரஸ் கட்சி, ‘வேலையில்லாத் திண்டாட்டம், பணமதிப்பிழத்தல், எல்லைப் பதற்றம், மணிப்பூர் பிரச்சினை போன்றவை குறித்தும் இதுபோன்ற ஆவணத்தை வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்த நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த காங்கிஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “அது வெள்ளை அறிக்கை இல்லை, வெள்ளை பொய் அறிக்கை. எங்கள் … Read more