கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரகலாத் ஜோஷி நம்பிக்கை..!

டெல்லி: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக  மீண்டும் ஆட்சியமைக்கும் என நாடாளுமன்ற  விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த சில தினங்களுக்கு முன் முதற்கட்டமாக 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அறிவித்தது. அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் … Read more

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.4.31 கோடி அபராதம் – ரிசர்வ் வங்கி நடவடிக்கை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ. 4.31 கோடி அபராதம் விதித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் டாலர்களையும், யூரோக்களையும், தினார்களையும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வழிபடுகின்றனர். உண்டியலில் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் விவரங்களை தேவஸ்தானம் அறியமுடிவதில்லை. ஆனால், இப்படி உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளை பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்களது அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கிறது. இதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் … Read more

ஜாக்பாட்! இனி அரிசி இலவசம்..அதுவும் இவ்வளவு கிலோவா? அசத்தும் அரசு

இலவச ரேஷன் செய்தி புதுப்பிப்பு: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நீங்களும் தற்போது ரேஷனையும் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இனி நீங்கள் 150 கிலோ அரிசியை இலவசமாக பெறுவீர்கள். இந்த மிகப்பெரிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. தற்போது 2023 ஆம் ஆண்டிலும் மத்திய அரசின் இலவச ரேஷன் வசதியின் பலனை பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இதனிடையே அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அரசின் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஏழைகள் … Read more

மத்திய பிரதேசத்தில் 4 குட்டிகளை ஈன்ற நமிபியா சிவிங்கி புலி..!

நமிபியாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளில் ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன சிவிங்கி புலிகளை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டத்துடன், கடந்த ஆண்டு நமிபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம் குனோ உயிரியல் பூங்காவில் விடப்பட்டன. Source link

வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை

டெல்லி: வந்தே பாரத் ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை என ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் பயணிகளுக்கு பயணத்தை எளிதாக்குகிறது. ஒன்றிய அரசு பல இடங்களில் இந்த வந்தே பாரத் இயக்கத்தை தொடங்கியுள்ளது. சமீப காலமாக வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், வந்தே பாரத் ரயில்கள் மீது கல்லெறிந்தால் 5 … Read more

தமிழகத்தில் மண் ஆரோக்கியத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? – மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்கியத் திட்டமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது என மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்தர் சிங் தோமர் விளக்கமாகப் பதில் அளித்துள்ளார். இது குறித்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியான செந்தில்குமார் இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்வியில், ”இந்தியாவின் மிக முக்கியமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது? இது, செயல்படுத்தப்படுகிறது என்றால் … Read more

கர்நாடகா தேர்தல்: உபி மாடலை கையிலெடுக்கும் பாஜக.. ராமர் கோயில் கைகொடுக்குமா.?

கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், மாநிலத்தில் புதிதாக அமைய உள்ள ராமர் கோயிலின் மாதிரி வீடியோவை பாஜக அமைச்சர் வெளியிட்டார். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் சூடு பிடித்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதேபோல் ஏப்ரல் 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் லிஸ்ட் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான … Read more

7th Pay Commission: அகவிலைப்படிக்கு பிறகு அடிப்படை ஊதியத்தில் அதிகரிப்பு… விரைவில் வருகிறது மாஸ் செய்தி!!

7வது ஊதியக்கமிஷன்: வரும் நிதி ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு ஆண்டாக இருக்கும். தொடர்ச்சியாக அவர்களுக்கு கிடைத்த நல்ல செய்திகளுக்குப் பிறகு, தற்போது அடிப்படை சம்பளத்தில் திருத்தம் செய்வது தொடர்பான விவாதம் தொடங்கியுள்ளது. வரும் ஆண்டில் ஊதியக்கமிஷனை ரத்து செய்து புதிய பார்முலாவை அரசு அமல்படுத்த உள்ளது. இதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அரசு மாற்றக்கூடும். அதன் மாற்றத்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய ஏற்றம் ஏற்படலாம். ஃபிட்மெண்ட் ஃபாக்டரை மாற்றியமைக்க வேண்டும் என்ற மத்திய … Read more

ஏப்ரல் 1ம் தேதி முதல் UPI வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் – Paytm விளக்கம்

2,000 ரூபாய்க்கு அதிகமான UPI வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1 முதல் 0.5 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதம் வரை இன்டர்சேன்ஜ் கட்டணம் வசூலிக்கும்படி தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.  இதுதொடர்பாக தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் அண்மையில்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ப்ரீபெய்ட் பேமெண்ட் கட்டணங்கள் , UPI மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என்றும், எரிபொருளுக்கு  0.5 சதவீதமும்,  தொலைத் தொடர்பு துறை, தபால் அலுவலகம், கல்வி, விவசாயம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு  0.7 சதவீதமும், சூப்பர் … Read more

மனைவி தொடுத்த குடும்ப வன்முறை வழக்கில் கிரிக்கெட் வீரரின் கைது வாரண்ட் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

கொல்கத்தா: மனைவி தொடுத்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான கைது வாரண்ட் தடையை நீக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.  இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி – அவரது மனைவியான மாடல் அழகி ஹசின் ஜஹான் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு இருந்தது. முகமது ஷமிக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக ஹசின் ஜஹான் குற்றம்சாட்டினர். இவ்விவகாரம் தொடர்பாக 2018ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி, ஜாதவ்பூர் காவல் … Read more