குறுவட்டார தடகள போட்டி: ஸ்ரீகலைவாணி பள்ளி சாம்பியன்

தென்காசி திருவேங்கடம்: சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகள போட்டிகள் கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக 2 நாட்கள் நடைபெற்றன. இதில் சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 38 அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆண்கள், பெண்கள் அணிகள் கலந்து கொண்டன, இதில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்கள், பெண்கள் அணி 100 மீட்டர் ஓட்டம், நானூறு மீட்டர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடின. இதில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி … Read more

அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வழக்கமான நடைமுறையில் நடக்கும் – கங்குலி தகவல்

கொல்கத்தா, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த போட்டி முடிந்ததும் ஆண்களுக்கான ஐ.பி.எல். தொடங்கும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு எனது பெயரும் அடிபடுவது குறித்து கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில் எதுவும் எனது கையில் இல்லை. இந்திய அணி ஒன்றிரண்டு ஆட்டங்களில் தோற்பது குறித்து … Read more

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: கரோலினா பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ, பான் பசிபிக் ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது தரவரிசையில் 20-வது இடத்தில் இருப்பவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 3-6, 4-6 என்ற நேர்செட்டில் 46-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையாவுக்கு எதிராக … Read more

2-வது 20 ஓவர் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

நாக்பூர், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி … Read more

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: கூடலூர் மாணவிகள் சாம்பியன்

நீலகிரி கூடலூர் ஊட்டியில் மாவட்ட சதுரங்க கழகம் நடத்திய மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி உதகை ஒய்.எம். சி. ஏ. பள்ளியில் நடைபெற்றது. 9, 11,13, 15, 17 வயதுக்குட்பட்ட மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 9 வயதுக்கான போட்டிகளில் கூடலூர் முதல் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆதினி மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். `11 வயதுக்கான மாணவிகளுக்கான போட்டிகளில் கலந்து கொண்ட டியானி 2-ம் … Read more

பாபர் அசாம், ரிஸ்வான் அதிரடி: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி…!!

கராச்சி, இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கராச்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி பேட்டிங்கைத் … Read more

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா கால் இறுதிக்கு தகுதி

டோக்கியோ, பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிரீசின் தேஸ்பினா பாபாமிக்கேலை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றவருமான ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 3-6, 2-6 என்ற … Read more

208 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; இந்திய கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்

மொகாலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா 208 ரன்கள் குவித்தும் தோற்றதற்கு மோசமான பந்து வீச்சு, பீல்டிங்கே காரணம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இந்திய அணி தோல்வி மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. … Read more

அடுத்த இரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கிறது – ஐ.சி.சி. அறிவிப்பு

துபாய், முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மகுடம் சூடியது. இந்த நிலையில் அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இங்கிலாந்துக்கே ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி 2023-ம் … Read more

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: 3 இந்தியர்கள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை, சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இந்திய தொடருக்கான சென்னை சுற்று சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா (சென்னை) 8-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஹயா அலியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 11-8, 11-9, 7-11, 11-5 என்ற செட் கணக்கில் … Read more