ஆளுநர் ஏன் கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் வைத்திருக்கிறார்? பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு கோப்புகளின் மீது ஆளுநர் ஏன் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார் என பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரிய வழக்கு: சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரிய வழக்கில், வரும் டிச.12ம் தேதிக்குள் சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் நடந்த … Read more

’திருட்டு போலீஸ்’ தட்டி தூக்கிய நிஜ போலீஸ் – சிறையில் கம்பி எண்ணுகிறார்..!

போலீஸ் சீருடையில்  பொதுமக்களிடம் பணத்தை பறித்த நபரை கைது செய்த காவல்துறை அவரிடமிருந்து காவல் சீருடை, போலி அடையாள அட்டை, இருசக்கர வாகனம் மற்றும் 6,000 பணம் பறிமுதல் செய்தனர்.   

விருதுநகர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை: குடியிருப்புகளை நீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமம்

விருதுநகர்: விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், வரத்துக் கால்வாய்கள், ஓடைகள், காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வடமலைக் குறிச்சி கண்மாய் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் காட்டாற்று ஓடையில் பெருக்கெடுத்தது. இதனால், விருதுநகர் போலீஸ் பாலம் பகுதியை மழை நீர் சூழ்ந்தது. தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. அய்யனார் நகர், கலைஞர் … Read more

ஆத்தூர், தம்மம்பட்டி பகுதியில் கனமழை – வசிஷ்ட நதியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

சேலம் / ஈரோடு: ஆத்தூர், தம்மம்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பேருந்து நிலையம், அம்மாப்பேட்டை, ஜங்ஷன், கொண்டலாம் பட்டி உள்பட பல பகுதிகளில் … Read more

கோவை கனமழை – 30 ஆண்டுகளுக்கு பிறகு சின்னவேடம்பட்டி ஏரிக்கு அதிக நீர்வரத்து

கோவை: கோவையில் பெய்த கனமழையால், 30 ஆண்டுகளுக்கு பிறகு சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை வடக்கு பகுதியில் உள்ள பிரதான நீர் ஆதாரமான சின்ன வேடம்பட்டி ஏரி, சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியானது நீரின்றி பல ஆண்டுகளாக வறண்டு கிடந்தது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசின் நமக்கு நாமே திட்டம் மூலம் சுமார் ரூ.60 லட்சம் செலவில் ஏரி மற்றும் ராஜ வாய்க்கால் புனரமைப்பு பணிகள் தொடங்கின. மொத்த … Read more

காலியாக உள்ள முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்ப கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் காலியாக உள்ள 128முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்க கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், மருத்துவ காலி இடங்களை நிரப்ப காலஅவகாசம் கோரி எழுதிய கடிதத்துக்கு சாதகமான பதிலை அளித்தீர்கள். அதனால், மாநிலத்தில் காலியாக உள்ள விலைமதிப்பற்ற எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், எம்டி– எம்எஸ், டிஎன்பி, மற்றும் எம்டிஎஸ்,இடங்களுக்கான சேர்க்கை … Read more

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக் கடல்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும்,கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாகதமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (நவ. 10) … Read more