“கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்” – பிரதமரை மேற்கோள் காட்டி வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவை: “மதச்சார்பின்மையை காக்க இந்து கோயில்களில் இருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (அக்.4) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தெலங்கானா மாநிலம் நிஜாமாபாதில் நேற்று (அக்.3) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘தமிழ்நாட்டில் இந்து கோயில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயில்களின் சொத்துகள் கூட்டுச் சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தமிழ்நாடு தன் … Read more

கூட்டணி, தேர்தல் குறித்து பேசக் கூடாது என தெரிவிக்கப்பட்டதாக செல்லூர் ராஜூ தகவல்

மதுரை: “அதிமுக கூட்டணி குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேச வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதில்களை எங்களுடைய பொதுச் செயலாளர் தெரிவிப்பார்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.1296 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் … Read more

“உரிமைத் தொகை கிடைக்காமல் பெண்கள் பலரும் பாதிப்பு” – முன்னாள் அமைச்சர் காமராஜ்

தஞ்சாவூர்: “விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும்” என முன்னாள் அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக கட்சியின் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட, மாநகர செயலாளர் மற்றும் ஜெ.பேரவை மாநில இணை செயலாளர் ஆகியோரது அறிமுகக் கூட்டமும், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்பு கழக செயலாளரும், திருவாரூர் மாவட்டச் செயலாளருமான காமராஜ் … Read more

கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை – 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் 19 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு கூறியுள்ளது. பாளையங்கோட்டை அருகே ஆரோக்கியநாதபுரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி நடைபெற இருந்த புதிய தமிழகம் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது காரில் சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை- தூத்துக்குடி நெடுஞ்சாலையிலுள்ள திருநெல்வேலி மாவட்ட … Read more

குப்பை அள்ளுவதிலும் மாநகராட்சி – அரசு மருத்துவமனை மோதல்: தூர்நாற்றம் வீசுவதால் மதுரை மக்கள் பாதிப்பு

மதுரை: ‘குப்பை’களை அள்ளுவதிலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை – மாநகராட்சி இடையே நீடிக்கும் மோதலால் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கமடைந்து, மருத்துவமனை வளாகத்தில் தூர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகள், மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மதுரை அரசு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை, மருத்துவமனையின் தனியார் ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து பிரேதபரிசோதனை கட்டிடம் அருகே உள்ள மருத்துவமனை குப்பை தொட்டிகளில் போடுகின்றனர். நோயாளிகளுக்கு பயன்படுத்தி தூக்கி வீசப்படும் ‘பயோ மெடிக்கல்’ (Bio Medical) … Read more

மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மயிலாடுதுறை அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு கடையில் நிகழ்ந்த விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று (அக்.4) மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், … Read more

ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஊதியத்தை உயர்த்தி அறிவித்தது தமிழ்நாடு அரசு

TN Teachers Salary Hike: நீண்ட நாள்களாக சென்னையில் போராடி வந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவித்தார்.

“சட்டம் – ஒழுங்கு சீரழிவு… திமுக அரசின் தோல்வி” – நெல்லை இளம்பெண் படுகொலைக்கு சீமான் கண்டனம்

சென்னை: “தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. காவல்துறையைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தற்போதைய சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கான முழுபொறுப்பையும் ஏற்று, அதனைச் சீர்செய்வதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த … Read more

பட்டா வழங்கக் கோரி திருநாகேஸ்வரம் கோயில் இடங்களில் வசிக்கும் 2,000 குடும்பத்தினர் திரண்டதால் பரபரப்பு

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரத்தில் கோயில் இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்காததால் அரசு ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவன், பெருமாள் கோயில்களின் 4 வீதிகள், மணல் மேட்டுத் தெரு, தோப்புத் தெரு, நேதாஜி திடல் ஆகிய பகுதிகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் சுமார் 3 தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர் வரிகள் செலுத்தி, மின் இணைப்புகள், ரேசன் அட்டை, ஆதார் … Read more

அண்ணாமலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பளீச்!

Edappadi Palanisamy In Tamil Nadu: தமிழக பாஜகவின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.