திருநங்கைகளுக்கு உரிமை தொகை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

திருப்புவனம்: திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் … Read more

சென்னை உட்பட 29 இடங்களில் 14 நிமிடத்தில் சுத்தம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள்

புதுடெல்லி: நாடு முழுவதும் 29 இடங்களில் அடுத்த பயணத்துக்காக வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்பட்டது. ஜப்பானில் ‘7 மினிட்ஸ் மிராக்கள்’ என்ற பெயரில் புல்லட் ரயில்களை சுத்தப்படுத்தும் பணி அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பாட்டில் உள்ளது. அதன்படி, கடைசி ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு,வெறும் 7 நிமிடங்கள் சுத்தப்படுத்தப்படும். அதன்பின், அடுத்த பயணத்துக்கு அந்த ரயில் தயாராகிவிடும். அதே போன்ற ஒரு திட்டத்தை ரயில்வே துறை நாட்டில் … Read more

ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்: முயற்சி வெற்றிபெற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, பனைமர தொழிலாளர் நலவாரியம் சார்பில், தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் ஒரு கோடி பனை மர விதைகள் நடும் திட்டம் நேற்று தொடங்கியது. இந்தமுயற்சி வெற்றியடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பனை மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதையொட்டி, … Read more

காவிரியில் நீர்வரத்து 3,446 கனஅடியாக சரிவு: மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடி

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து, அணை நீர்மட்டம் 36.94 அடியாக சரிந்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை இல்லாதது, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட காரணங்களால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,524 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,446 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக … Read more

''சென்னையில் நாள்தோறும் 500 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை'' – ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் நாள்தோறும் 500 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான ஓட்டுனர் பற்றாக்குறை காரணமாக 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் 29.70 லட்சம் தடவை பேருந்து சேவை பாதிக்கப்பட்டதாக -புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டுமொத்த சேவைகளில் ஆறில் ஒரு பங்கு சேவை, ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்படுவது போக்குவரத்துத் துறைக்கு தலைகுனிவாகும். சென்னை … Read more

தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளம் சிவாஜி கணேசன்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசனின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவர் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” சிவாஜி கணேசனின் 96-ஆவது பிறந்தநாள் இன்று! நடிப்பின் … Read more

அதிமுக பிரிவதால் என்டிஏ கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படாது: அண்ணாமலை

கோவை: “தமிழகத்தில் பாஜகவின் எழுச்சி எனக்கு தெரிகிறது. களத்தில் அதன் விளைவுகளை நான் பார்க்கிறேன். 57 சதவீத தமிழக வாக்காளர்கள் 36 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இவர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்கின்றனர். பாஜகவின் அரசியல் அவர்களைச் சார்ந்தது. அவர்களுடைய நலனைச் சார்ந்தது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக முறிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசியல் … Read more

ஆபரேஷன் விஜய் – 1971 | நாடக உருவாக்க நிகழ்வை துவக்கி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: 1971-ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் போரின் வீரக் கதையை எடுத்துச் சொல்லும் வகையில், ‘ஆபரேஷன் விஜய் – 1971’ நாடக உருவாக்க நிகழ்வு நடைபெற்றது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார். சென்னை வேளச்சேரியில் ‘ஆபரேஷன் விஜய் – 1971’நாடக உருவாக்க நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவங்கி வைத்தார். சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சியாக ‘ஆபரேஷன் விஜய் – 1971’ என்ற … Read more

இந்தியாவில் கல்வி வணிகமயமாகிவிட்டது – முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை

மதுரை: இந்தியாவில் கல்வி பெயரளவில் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கல்வி தனியாரின் கட்டுப்பாட்டில் வணிகமயமாகி வருகிறது என முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனையுடன் தெரிவித்தார். மதுரையில் இன்று மக்கள் கல்விக்கூட்டியக்கம் சார்பில் ஆசிரியர்களின் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ரா.முரளி முன்னிலை வகித்தார். அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் ம.சிவராமன் வரவேற்றார். … Read more

குன்னூர் பேருந்து விபத்து | நிவாரணத்தொகையை நேரில் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கியவர்கள் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலா பேருந்தில் 61 பேர் சுற்றுலா வந்தனர். அவர்கள், உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணியளவில் உதகையில் இருந்து குன்னூர் மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையம் சென்றனர். பேருந்து … Read more