கயத்தாறு, கழுகுமலையில் மழையால் பயிர்கள் சேதம்

கோவில்பட்டி: கழுகுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 22-ம் தேதி இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கே.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் வேருடன் சாய்ந்து சேதமடைந்தன. சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டனர். இதுபோல கயத்தாறு ஊராட்சிக்கு உட்பட்ட உசிலங்குளம் கண்மாயின் மேல் பகுதி உடைந்ததையடுத்து, அதன் அருகே உள்ள நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர், உளுந்து பயிர் சேதமடைந்துள்ளது. … Read more

போலி சான்றிதழ்கள் மூலம் லோன் பெற்ற பெண் கைக்குழந்தையுடன் கைது

ஆன்லைன் செயலி மூலமாக போலியான சான்றிதழ்கள் தயாரித்து லோன் பெற்ற பெண் 8 மாத கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்   

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை: தொடர் மழையால் வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள தால், மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டத்துக்கு ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று மதுரை வைகை ஆற்றை வந்தடைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு வைகை … Read more

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதில் தாமதம்

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை(நவ. 26) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருந்தது. தற்போது 27-ம் தேதி உருவாகக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. அது 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி 7,000 மெகாவாட் ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின் உற்பத்தி செய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்கள் சூரியசக்தி மின்நிலையங்களை ஆர்வத்துடன் அமைத்து வருகின்றன. மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி துறை, கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவப்பட்டுள்ள சூரியசக்தி, காற்றாலை, சிறிய நீர்மின் நிலையம், தாவரக்கழிவு, சர்க்கரை ஆலை ஆகியவற்றை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அதிக திறனில் அமைக்கப்பட்ட … Read more

அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி உதவித் தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஒருகால பூஜை திட்ட கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்கு மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியம் ரூ.6 கோடியில் இருந்து ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுசீந்திரம், … Read more

கொள்ளிடம் ஆற்றில் உப்புநீர் உட்புகாதவாறு தடுப்பணை கட்டப்படுமா? – 25+ கரையோர கிராமங்களில் குடிநீர் பாதிப்பு

கடலூர்: கடலூர் – மயிலாடுதுறை மாவட்ட எல்லைப் பகுதியான கொள்ளிடம் ஆற்றில், உப்புநீர் உட்புகாதவாறு தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதைச் செய்தால் 25-க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்களின் குடிநீர் பாதிப்பை சரி செய்ய இயலும். பாசன நீரும் சீராகி பழையபடி வளமான விளைச்சல் இருக்கும். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இடது கரையில் ஜெயங்கொண்டப்பட்டினம், பெராம்பட்டு, மேலகுண்டலபாடி, கீழகுண்டலபாடி, வல்லம்படுகை, வல்லத்துறை, தீத்துக்குடி, … Read more

மணல் விற்பனை குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு 10 ஆட்சியருக்கு சம்மன் – அமலாக்க துறைக்கு எதிராக அரசு வழக்கு

சென்னை: சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவ.27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் … Read more

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரியில் பயன்பாட்டுக்கு வராத சோலார் மின் உற்பத்தி: காட்சிப் பொருளான சோலார் தகடுகள்

விருதுநகர்: விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கி 2 ஆண்டுகளாகியும் இதுவரை சோலார் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படாமல் சோலார் தகடுகள் காட்சிப் பொருளாகவே காணப்படுகின்றன. லட்சக்கணக்கான ரூபாய் மின் கட்டணம் செலுத்துவதால், கல்லூரி நிர்வாகத்துக்கு கூடுதல் செலவினமும் ஏற்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 2020 மார்ச் 1-ம் தேதி நடைபெற்றது. மத்திய அரசு 60 சதவீத பங்குத் தொகையாக … Read more