தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்

Fathima Beevi Passes Away: தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், கேரள மாநிலத்தை சேர்ந்தவருமான பாத்திமா பீவி வயது மூப்பு காரணமாக இன்று (நவ. 23) காலமானார். 

”கூறு போட்டு விற்கப்படும் பெரியார் பல்கலைக்கழகம்: வேடிக்கை பார்க்கப் போகிறதா தமிழக அரசு?” – ராமதாஸ் கேள்வி

சேலம்: “சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர், அவரது கூட்டாளிகள் சிலருடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக தனி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். தமிழக அரசு இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழக அரசையும், உயர்கல்வித்துறையையும் எள் முனையளவுக்குக் கூட மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழக … Read more

செந்தில் பாலாஜிக்கு டிச.4 வரை நீதிமன்ற காவல்: 11-வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 11-வது முறையாக டிச.4 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ல் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் … Read more

நீரிழிவு நோயின் தலைமையிடமாக இந்தியா உருவாகும் ஆபத்து: எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் எச்சரிக்கை

சென்னை: நீரிழிவு நோய் வேகமாக அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளில் நோயின் தலைமையிடமாக இந்தியா விளங்கும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி தெரிவித்தார். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் “உலகளவில் மனித நலனைப் பேணுகின்ற வகையில், நீரிழிவு நோயை தடுப்பதற்கான பல்வேறு சிகிச்சை முறைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தலைமையில் நடந்த … Read more

கனமழை | 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் 26-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

அந்தமானில் நவ.26-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் வரும் 26-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் 26-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more