புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளதா? – முதல்வர் ரங்கசாமி பதில்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக உள்ளதா என்ற கேள்விக்கு, அக்கூட்டணியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி பதிலளித்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியுள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உள்ளது. ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எம்எல்ஏக்கள் இல்லாததால் அதிமுக ஆட்சியில் பங்கெடுக்கவில்லை. அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தேசிய ஜனநாயக … Read more

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான இருவரிடம் என்ஐஏ விசாரணை

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இருவரை, காவலில் எடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு இன்று (செப்.27) அழைத்து வந்து விசாரித்தனர். கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது … Read more

கூடங்குளம் அணுஉலை அருகே கடலில் சிக்கிய நீராவி ஜெனரேட்டர்கள் 19 நாட்களுக்குப் பின் மீட்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுஉலைக்கு இழுவை கப்பலில் கொண்டுவரப்பட்டபோது பாறையில் மோதியதால் சிக்கிய அந்த கப்பலில் இருந்த 2 நீராவி உற்பத்தி ஜெனரேட்டர்களும் 19 நாட்களுக்குப்பின் நேற்று மாலையில் பத்திரமாக மீட்கப்பட்டது. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் 5 மற்றும் 6-வது அணுஉலைகளில் அமைப்பதற்காக 2 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷ்யாவிலிருந்து மும்பை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. தூத்துக்குடியில் இருந்து இழுவை கப்பலில் ஏற்றப்பட்டு கூடங்குளம் அணுஉலைக்கு கடல் மார்க்கமாக வழியாக … Read more

அடிப்படை வசதிகள் செய்து தராத மேட்டூர் நகராட்சி தலைவரைக் கண்டித்து திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி

மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத நகராட்சித் தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகராட்சி தலைவி (திமுக) சந்திரா தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தின்போது, மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட சீத்தாமலை தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்து உள்ள மோட்டர்களை சரிசெய்யவும், புதிய மோட்டர்களை … Read more

அரசு அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை: அரசு அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம், தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் உரிமைகளுக்கான மாநில கிளை சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, கல்வித்துறைகளில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும். காவல்துறை உதவி எண் 100 மற்றும் 108 … Read more

உதயநிதி இன்னும் 21 நாளில் சிறை செல்வார் – ஹெச். ராஜா சொல்வது என்ன?

H Raja Slams DMK: உதயநிதி பேசுவதற்கெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், இன்னும் 21 நாட்களிலேயே சிறை செல்லுவார் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் 5 புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

சென்னை: அதிமுகவில் காலியாக இருந்த 5 மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் காலியாக இருந்த பதவிகளுக்கு புதிதாக நிர்வாகிகளை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வெளியேறிய நிலையில், அதிமுகவில் கன்னியாகுமரி, தேனி, பெரம்பலூர், தஞ்சை உள்பட சில மாவட்டச் செயலாளர் பதவிகள் … Read more

“12 ஆண்டுகளாக பகுதி நேர சிறப்பாசிரியர்களாகவே தொடரச் செய்வதா?” – அன்புமணி கண்டனம்

சென்னை: “12 ஆண்டுகளாக பகுதி நேர சிறப்பாசிரியர்களாகவே தொடரச் செய்வதா? உடனடியாக அவர்களுக்கு பணிநிலைப்பு வழங்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிடடுள்ள அறிக்கையில், ”தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தங்களுக்கு பணிநிலைப்பு அல்லது பணிப் பாதுகாப்புடன் கூடிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் … Read more

செல்போன் வெடித்து பெண் பலி… சார்ஜ் போட்டு பேசாதீங்க மக்களே!

Tamilnadu Latest: சார்ஜ் செய்யும்போது மொபைலில் பேசியதால் அது வெடித்ததாகவும், அதில் ஏற்பட்ட தீயில் சிக்கி கும்பகோணத்தில் ஒரு பெண் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் சோதனை

கரூர்: திட்ட அலுவலர் மூக்கையாவுடன் தொடர்புடைய காணியாளம்பட்டி ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்ட நகரமைப்பு மற்றும் ஊரக திட்ட இயக்குநரக அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மூக்கையா. இவர் தற்போது பணிமாறுதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். மூக்கையாவுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மூக்கையாவுடன் தொடர்பில் உள்ள கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி … Read more