பாஜக தலைமை அழைப்பை ஏற்று டெல்லி பயணம் | அமித் ஷாவுடன் பழனிசாமி சந்திப்பு – மக்களவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை

சென்னை: பாஜக தலைமை அழைப்பை ஏற்று டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற தேசியக் கட்சிகள் மற்றும் பல்வேறு மாநிலக் கட்சிகள் தற்போதே மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டன. இதற்கிடையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் முழக்கத்தை பாஜக முன்னெடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையில் திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட … Read more

அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை பற்றி விரிவாக பேசவேண்டும் – மதுரையில் தொல்.திருமாவளவன் பேச்சு

மதுரை: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரை பற்றி விரிவாக பேச வேண்டும், கலந்துரையாடல் செய்ய வேண்டும் என மதுரையில் தொல்.திருமாவளவன் எம்பி பேசினார். மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த ‘இந்தியாவின் சமூக நீதி’ பெருவிழா நேற்று நடந்தது. கோவை சட்டக்கல்லூரி மாணவி சினேகா, மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவர் இளையவளவன் தலைமை வகித்தார். முகமது யூசுப், டார்வின், சோமு அபுல்கசன், விஜய், உஜ்ஜய், நவின், ஜெயராமன், ராகுல்ராஜ், விக்னேஷ் முன்னிலை வகித்தனர். … Read more

தருமபுரி | மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

தருமபுரி: மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கும் முன்பாகவே, திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பலரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 தொகை வந்து சேரத் தொடங்கியுள்ளது. இது, இத்திட்டப் பயனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இத்திட்டப் பயனாளிகளின் … Read more

சிவகாசி அருகே விதிமீறலில் ஈடுபட்ட 8 பட்டாசு கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் காலாவதியான உரிமத்துடன், விதிமீறலில் ஈடுபட்ட 8 பட்டாசு விற்பனை கடைகளுக்கு வருவாய்துறையினர் நேற்று சீல் வைத்தனர். சிவகாசி அருகே வில்வநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் வட்டாட்சியர் மற்றும் பட்டாசு தனி வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது அழகுலட்சுமி கிராக்கர்ஸ், சுப்புராஜ் கிராக்கர்ஸ், சம்யுதா கிராக்கர்ஸ் அபிநிவாஷ் கிராக்கர்ஸ், கண்ணன் கிராக்கர்ஸ், அய்யனார் கிராக்கர்ஸ், விஜயலட்சுமி கிராக்கர்ஸ், சிவசங்கர் கிராக்கர்ஸ் ஆகிய 8 … Read more

மதுரை மாநகராட்சியில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் – பாதிப்பை தடுக்க மண்டலம் வாரியாக சிறப்பு குழுக்கள் அமைப்பு

மதுரை: மதுரை மாநகராட்சியில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த பாதிப்பை தடுக்க நேற்று மேயர் இந்திராணி தலைமையில் அதிகாரிகள் அவசர ஆய்வுக்கூட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு பாதிப்பு அதிரிக்கும் நிலையில், மதுரை மாநகரை பொறுத்தவரை செப்டம்பர் மாதம் இதுவரை 7 நபர்களுக்கு இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய் பரவல் இல்லை என்ற நிலை இருந்தபோதிலும் நோய்ப் பாதிப்பை கட்டுக்குள் வைப்பதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் … Read more

சொகுசு கப்பலில் ‘மிஸ்டர் & மிஸ் தமிழகம்’ போட்டி! எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா..?

கோவாவில் உள்ள ஒரு சொகுசு கப்பலில் மிஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்டர் தமிழ்நாடு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டி எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா…? 

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல்: புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் செப்.17 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: கேரளத்தில் நிபா வைரஸ் பரவலால் புதுச்சேரி பிராந்தியமான மாஹேயில் நாளை (செப். 15) முதல் வரும் செப்.17 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில் கேரள மாநிலம் அருகில் உள்ள புதுவையின் பிராந்தியமான மாஹேயிலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாஹே எல்லைகளில் போலீஸார் உரிய கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். எல்லைவிட்டு … Read more

“புதுச்சேரியில் ரவுடிகள் ராஜ்ஜியம்; மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரிப்பு” – காங்கிரஸ் எம்.பி.

புதுச்சேரி: “புதுச்சேரி முழுக்க மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரித்து ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. ரவுடிகள் பலருக்கும் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்தார். அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் சரியாக செயல்படவில்லை. இதன் காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ உதவி சரியாக கிடைக்கவில்லை. நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவித்தும் அரசு செவி சாய்ப்பதில்லை. ஆயுஷ்மான் பாரத்தில் அடையாள அட்டைக்கூட தரவில்லை. எந்த … Read more

தமிழகத்தில் தலைவிரித்தாடும் டெங்கு..! விழுப்புரத்தில் 12 பேருக்கு நோய் பாதிப்பு..!

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.   

கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க எதிர்க்கும் வழக்கை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அண்ணா பிறந்தநாளை ஒட்டி, கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், உரிய ஆவணங்களை இணைக்கவில்லை எனக் கூறி, விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு ஹிந்து இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜலேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அத்வானியை கொலை செய்யும் திட்டமிட்ட, அல் உம்மா … Read more