காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்? அரசு பள்ளிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் நடைபெறும். அந்த வகையில் நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. இதையடுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி நடைபெறும். காலாண்டு தேர்வுகள் விடுமுறை6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் … Read more

கடலூர் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது பழங்கால உலோக சாமி சிலைகள் கண்டெடுப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே திருநாரையூரில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது பழங்கால உலோக சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 9 சாமி சிலைகளையும் வருவாய் மற்றும் காவல்துறையினர் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி அருகே உள்ளது திருநாரையூர். இக்கிராமத்தில் புகழ் பெற்ற பொல்லா பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த நிலையில் இக்கிராமத்தை சேர்ந்த உத்திராபதி என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டுவதற்கு நேற்று (ஆக.26) சனிக்கிழமை அஸ்திவாரம் … Read more

துண்டுச் சீட்டை ஒப்பிப்பதை முதல்வர் எப்போது நிறுத்துவார்? சிஏஜி அறிக்கையில் எங்கு ஊழல் உள்ளது? ஸ்டாலினை ரவுண்டு கட்டும் அண்ணாமலை!

தமிழக முதல்வர் மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நாகை எம்.பி. செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் உரையாற்றிய அவர், ஊழல் குறித்து பேச மோடிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது? மத்திய அரசு செய்துள்ள ஊழல் சிஏஜி அறிக்கையிலேயே அம்பலமாகியுள்ளது என்றும் கூறினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு … Read more

மதுரையில் ரயில் பெட்டி தீ விபத்துக்கு சமையலர்கள் காரணமா?- போலீஸில் சிக்கிய 5 பேரிடம் தொடர் விசாரணை

சென்னை: மதுரையில் ரயில் பெட்டி தீவிபத்துக்கு காரணமானதாக கூறப்படும் சமையலர் உட்பட 5 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீஸார், ரயில்வே பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர். மதுரை ரயில் நிலையம் அருகே நேற்று நிறுத்தி இருந்த சுற்றுலா ரயில் பேட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. இப்பெட்டியில் பயணித்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்ட் மீது வழக்குப் … Read more

கோவை டூ பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… வெறும் 5 மணி நேரத்தில்… எகிறிய மில்லியன் டாலர் எதிர்பார்ப்பு!

கோவை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையில் தினமும் சராசரியாக 9 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிவேகமாக பயணம் செய்வது ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் (CBE RJT Express). 385 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்து விடுகிறது. மற்ற ரயில்கள் 7 முதல் 8 மணி வரை பயணிக்கின்றன. இந்த வழித்தடத்தில் சிறப்புமிக்க டபுள் டெக்கர் ரயிலும் (CBE SBC Uday Express) இயக்கப்படுகிறது. டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ்இதில் இரண்டு அடுக்குகளாக … Read more

“அதிமுக மாநாட்டை கண்டு நடுங்கி திமுக எழுச்சி மாநாடுக்கு ஏற்பாடு” – செல்லூர் ராஜூ

மதுரை: மதுரையில் கடந்த 20-ம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி பங்கேற்று பேசினார். மாநாட்டுக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் அசைவ விருந்து வழங்கி நன்றி தெரிவித்தார். முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் பேசியது. “அதிமுக மாநாடு வெற்றி பெற முழுக்க முழுக்க காரணம் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தான். … Read more

இந்தியாவிற்கு வருகை தரும் சவுதி இளவரசர்.. அடுத்தக்கட்டத்திற்கு போகும் இந்தியா – சவுதி உறவு!

டெல்லி: சவுதி அரேபியா இளவரசரும், அந்நாட்டு பிரதமருமான முகமது பின் சல்மான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 11-ம் தேதி இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் – ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நல்லுறவு நிலவி வருகிறது. குறிப்பாக, சவுதி அரேபியா உடனான இந்தியாவின் உறவு மிகவும் வலுவானதாக மாறியுள்ளது. இந்தியாவின் 4-வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது. மேலும், லட்சக்கணக்கான இந்தியர் சவுதி … Read more

தேசிய நல்லாசிரியர் விருது | தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் மாலதிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார். … Read more

"நாக்கை அடக்கி பேசணும்".. இல்ல உங்க அப்பா விஷயம் வெளியே வந்துரும்.. உதயநிதியை எச்சரித்த ஜெயக்குமார்

சென்னை: அதிமுக நிர்வாகியின் மனைவி காணாமல் போன விவகாரத்தில் ஜெயக்குமாரை சம்பந்தப்படுத்தி அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதுதொடர்பாக உதயநிதியை ஜெயக்குமார் மிகவும் கடுமையாக எச்சரித்துள்ளார். மதுரையில் அதிமுக மாநில மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்திருந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் மனைவி காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, இதுதொடர்பாக உதயநிதி நேற்று மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “அதிமுக மாநாட்டிற்கு வந்திருந்த நிர்வாகி ஒருவரின் … Read more

ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி | 'அயோத்தி' திரைப்படம் பாணியில் செயலாற்றிய மதுரை அமைச்சர்கள், அதிகாரிகள்

மதுரை: மதுரை ரயில் தீ விபத்தில் பலியானவர்கள் உடல்கள் ஊருக்கு அனுப்பிவைப்பதற்காக அயோத்தி திரைப்படம் பாணியில் மதுரை அமைச்சர்கள், அதிகாரிகள் செயலாற்றினர். சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படத்தில் ராமமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தபோது, கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் அவரது கணவன், மகன், மகள் தவிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் உணர்வை பதிவு செய்து, பெண்ணின் உடல், குடும்பத்தினரை பத்திரமாக விமானத்தில் ஊருக்கு அனுப்பிய மனிதநேயம் பதிவு … Read more