முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான புகார்: லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான புகாரின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், ‘முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் காமராஜ். இவர் … Read more

எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “திருத்தணியும் தென்குமரியும் இன்று தமிழ்நாட்டின் பகுதிகளாக இரு திசைகளில் திகழ்கிறதென்றால் அது எளிதில் நடந்துவிடவில்லை. எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற, தமிழ் நலம் மிக்க போராட்டத்தால்தான் நமக்குரிய பல பகுதிகளை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் பெறமுடிந்தது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவம்பர் 1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! திருத்தணியும் தென்குமரியும் இன்று தமிழ்நாட்டின் பகுதிகளாக இரு திசைகளில் திகழ்கிறதென்றால் அது … Read more

இந்தியா எங்களுக்கும் கல்வி சேவை வழங்க வேண்டும்-வெளிநாட்டு பிரதமர் வேண்டுகோள்!

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வந்து கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

மதுரை: சங்கரய்யாவுக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான பரிந்துரையை நிராகரித்த தமிழக ஆளுநருக்கு எதிராக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை (நவ.2) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ.குமார், பதிவாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இப்பட்டமளிப்பு விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகி … Read more

மகன் விபத்தில் சிக்கிய இடத்தில் மாந்திரீக பூஜை! ஒசூரில் விநோதம்

சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் ஆத்மா வீட்டுக்கு வரவேண்டி விபத்து நடந்த இடத்தில் குடும்பத்தினர் பூஜை செய்துள்ளனர். தந்தை மற்றும் குடும்பத்தினர்  

‘விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு’ – தமிழக அரசு சார்பில் சிறப்பு மலர் வெளியீடு

சென்னை: “விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு மலர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்தச் சிறப்பு மலர்களை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.1) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu’s … Read more

’தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கம்’ வடக்கர்கள் வருகைக்கு எச்சரிக்கும் திருமா

வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது வேலை வாய்ப்புக்காக என கருதக் கூடாது, அது இந்தி ஆதிக்கத்தை தக்க வைப்பதற்கான செயல் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.  

ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், காவல் துறை டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய தசமி மற்றும் முக்கியத் தலைவர்களின் பிறந்த தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு அக்.22 மற்றும் அக்.29 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் வடமாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து … Read more

“மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆராய ஆணையம் அமைப்பீர்” – முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் யோசனை

சென்னை: “மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாநில உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் இன்றைய சூழலில், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்கு ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு … Read more