‘ஜெய் ஸ்ரீராம்’ வார்த்தையை மதம் சார்ந்ததாக அல்லாமல் வெற்றி உணர்வாகப் பார்க்கிறேன்: தமிழிசை

புதுச்சேரி: “ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை வெற்றி உணர்வாக பார்க்கிறேன். அதில், மதம் இருந்ததாக பார்க்கவில்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரரை நோக்கி எழுப்பபப்பட்ட ஜெய்ஸ்ரீராம் கோஷம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர், “நம் நாட்டின் முயற்சியில் விண்கலம் மேலே எழும்போது ‘வந்தே மாதரம்’ என கோஷம் எழுப்பியதாக … Read more

இலங்கை கடற்படை கைது செய்த 27 மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அக்.14-ம் தேதி 4 படகுகளில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள், மற்றும் வேறுஒரு … Read more

நீதிமன்றம் உத்தரவிட்டால் 'லியோ' அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். “நடிகர் விஜயைப் பார்த்து ஆளும் திமுக அரசு பயப்படுகின்றது. அதனாலேயே அவரது லியோ படத்துகு அதிகப்படியான கட்டுப்பாடுகளை திமுக அரசு விதித்துள்ளது” என முன்னாள் அமைச்சரும் அதிமுக முக்கியப் பிரமுகருமான கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். திரைத்துறையை திமுக அரசு முடக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, “திரையுலகம் … Read more

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 5 ஆயிரம் புதிய பயனாளிகள் சேர்ப்பு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் ரூ.1000 ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் மாதத்தில் புதிதாக 5 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 27-ம்தேதி மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டத்தின்கீழ், 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா … Read more

‘தனிப்பட்ட கருத்து’ – சனாதனம் குறித்து பேசிய வழக்கில் அமைச்சர் உதயநிதி பதில் மனு

சென்னை: சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், திமுகஎம்.பி ஆ.ராசாவும் பேசியிருந்தனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும்என பேசிவிட்டு எந்த தகுதியின் அடிப்படையில் மூவரும் மக்கள் பிரதிநிதிகளாக பதவியில் நீடிக்கின்றனர் என்பதை விளக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் … Read more

இனி ரேஷன் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

தேர்தல் அறிக்கையை தெரிவித்தது போன்று குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 15 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.  

கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 17-ம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-ம் … Read more

ராக்கெட் திட்டங்களுக்கு உதவும் முதல்வருக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சென்னை: தலைமைச் செயலகத்தில் நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்தார். சந்திப்பின்போது, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் கூறியதாவது: முதல்வரை சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சி. சந்திரயான் -3 திட்ட விஞ்ஞானிகளை அவர் அழைத்து கவுரவப்படுத்தியதற்கு இஸ்ரோ சார்பில் நன்றி தெரிவித்தேன். அவருக்கு நான் சந்திரயான்-3 மாதிரி வடிவத்தை பரிசாக வழங்கினேன். தமிழகத்தில் நாங்கள் செயல்படுத்திவரும் விண்வெளி திட்டங்களுக்கு அவர் அளித்துவரும் ஆதரவுக்கு … Read more

காவிரி போராட்டங்களில்  வரம்பு மீறல் இருக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

மதுரை: காவிரி போராட்டங்களில் வரம்புகளை மீறி செயல்படக் கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாகண்ணு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை திறக்க கர்நாடகா அரசு மற்றும் மத்திய … Read more