செய்தியாளர் கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த பாஜக எல்.முருகன்!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல்.முருகன்.  

காவிரி விவகாரம்: அரசு சட்ட வல்லுநர்கள் குழுவை அமைக்க டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர்: காவிரி விவகாரத்தை முன்னெடுக்க கர்நாடக அரசு அம்மாநிலத்தைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் குழுவை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தமிழக அரசும் காவிரி படுகையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை அமைத்து வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கர்நாடகாவில் போதிய மழை இல்லை, குடிநீருக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற காரணங்களை முன்வைத்து, இந்தாண்டு தமிழகத்துக்குரிய தண்ணீரை காவிரியில் திறக்காமல் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. … Read more

ஈஷா இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம் – சாமானியர்களுக்கும் சாத்தியம்’ என்ற மர விவசாய் கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (அக்.15) நடைபெற்றது. 

கனமழை காரணமாக திண்டுக்கல், கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல்: கனமழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை உத்தரவைப் பிறப்பித்தனர். இதேபோல் சிவகங்கையில் பரவலாக பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் முடிவை தலைமை ஆசிரியரே எடுக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேனியில் மழை தொடர்வதால் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும், … Read more

சட்டப்பேரவையில் அறிவித்தபடி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 92-வது பிறந்தநாளான நேற்று தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ‘இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள், மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைக்கப்படும்’ என்று, … Read more

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் (அக்.16, 17) மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள்,நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், … Read more

அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று (அக்.15) செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் … Read more

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிப்பா? – தமிழக காவல் துறை மறுப்பு

சென்னை: தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இந்த சூழலில் அது தொடர்பாக தமிழக காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வேலுார் மத்திய சிறையில் சிறைவாசிகளின் மத உரிமைகள் மறுக்கப்படுவதாக அண்மையில் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் விஷமத்தனமான குற்றச்சாட்டு ஆகும். … Read more