அரியலூர் வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி -முதல்வர் அறிவிப்பு

Ariyalur Fire Cracker Accident, CM MK Stalin Talk About Ariyalur Fire Accident, MK Stalin News, பட்டாசு ஆலை தீ விபத்து, அரியலூர் பட்டாசு வெடி விபத்து நிலவரம், அரியலூர் செய்திகள், அரியலூர் விபத்து,

அரியலூர் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அரியலூர் மாவட்டம் விரகாலூரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (அக்.9) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். … Read more

அரியலூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பின்போது தீ விபத்து – 4 பேர் பலி, 5 பேர் படுகாயம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு கடை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு தீபாவளியையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் … Read more

''10.5% இடஒதுக்கீட்டை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற  முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம்'': அன்புமணி

சென்னை: “வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒடுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருவார்களா? என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. எனவேதான், இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரிலேயே, தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து வந்துள்ளோம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: … Read more

அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்

சென்னை: அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கத்தின் மாநிலதலைவர் கதிரேசன், போக்குவரத்துறை அமைச்சருக்கு அனுப்பிஉள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்து கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து, மிக குறைவான ஓய்வூதியத்தை பெற்று வரும் 92 ஆயிரம் ஓய்வூதியர்களின் குடும்பங்களுக்கு, 92 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்த்திவழங்கிட வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். … Read more

ரத்தக் கொதிப்பு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ரத்தக் கொதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி! மருத்துவமனையில் அனுமதி!

Senthil Balaji Admitted in Hospital: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சு வலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: மதுரை, திருச்சி உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 9)முதல் 11-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, … Read more