தமிழகத்தில் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி கூறியது உண்மையே: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்

திருப்பூர்: தமிழ்நாட்டில் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய தகவல் உண்மைதான் என்று, திருப்பூரில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் நேற்று தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆவணங்களின் அடிப்படையில் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், 5 ஆயிரம் ஏக்கர் மட்டுமே இதுவரை அரசு கையகப்படுத்தி … Read more

இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இலங்கை கடற்கொள்ளையர்களை இண்டர்போல் எனப்படும் பன்னாட்டு காவல்துறை உதவியுடன் கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரை அருகில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்கள் மீது … Read more

டிடிஎஃப் வாசன் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து! அரசு அதிரடி உத்தரவு

சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிம ம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து: ஆர்டிஓ நடவடிக்கை

காஞ்சிபுரம்: யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் … Read more

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துக: முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கிட உடனடி உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை பாதுகாப்பதிலும், விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அளிப்பதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டிய கடமையும், … Read more

தமிழக அரசிடமிருந்து கோயில்களை மீட்கும் பிரச்சாரம்: மக்களவை தேர்தலில் முக்கியத்துவம் அளிக்க பாஜக திட்டம்

புதுடெல்லி: இந்தியாவிலேயே சொத்துகள் நிறைந்த அதிக கோயில்கள் தென் மாநிலங்களில் உள்ளன. இவற்றில் தமிழக அரசு மட்டுமே கோயில்களையும் அவற்றின் சொத்துகளையும் நேரடியாக நிர்வகிக்கிறது. பிற மாநிலங்களில் அறக்கட்டளை அல்லது கோயில் அமைப்புகளை ஏற்படுத்தி அவற்றின் மூலமாக அரசுகள் நிர்வகிக்கின்றன. அது போல் முஸ்லிம், கிறிஸ்தவ மதச் சொத்துகளை தமிழக அரசு பராமரிக்கிறது. மசூதி, மதரஸா மற்றும் தர்காக்களின் சொத்துகளை வக்ஃபு வாரியங்கள் மூலமாகவே தமிழக அரசு நிர்வகிக்கிறது. வடமாநிலங்களில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், மதுரா … Read more

40 வட்டாட்சியருக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு

சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மை துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள அரசாணை: கடந்த 2020-21, 2021-22, 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கான பணிமாறுதல் மூலம் நியமனம் பெறும் துணை ஆட்சியர்களுக்கான பட்டியல் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு குடிமைப் பணியில் பதவி உயர்வு மூலம் 40 வட்டாட்சியர்களை துணை ஆட்சியர்களாக குறிப்பிட்ட பணியிடங்களில் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்படுகிறது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை, வட்டாட்சியர்கள் (வருவாய் பிரிவு)பா.ஐவண்ணன், சு.பார்த்தசாரதி, ரா.ஆனந்த மகாராஜன், டி.சசிகலா ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட … Read more

ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்பு உடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக சோதனை நடத்தினர். திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் வரும் வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம், அடையாறில் உள்ள அவரது வீடுகள், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை, பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரியில் … Read more

பசும்பொன் தேவர் தங்க கவசத்துக்கு உரிமை கோரி திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு: ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை வங்கி லாக்கரில் உள்ள பசும்பொன் தேவர் சிலை தங்க கவசத்துக்கு உரிமை கோரி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் தங்க கவசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தங்க கவசம் குருபூஜையின் போது … Read more