தமிழர்களின் கடல்சார் தொன்மையை வெளிகொணர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு

சென்னை: கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவருக்கு வயது 60. திருச்சி உறையூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் சிவ பாலசுப்ரமணியன். பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்ததால் ஒரிசா பாலு என அழைக்கப்பட்டார். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவர்தான். மேலும், … Read more

மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் சார்பில் சென்னையில் நாளை இலவச மருத்துவ, சட்ட ஆலோசனை முகாம்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள எம்.எஸ்.என்.ஏ.டி.ஐ வளாகத்தில், நாளை (அக்.7) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ மற்றும் சட்ட ஆலோசனை முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக சேவை மனப்பான்மையுடன் தொழிற் பயிற்சி மற்றும் … Read more

‘லியோ’ ட்ரெய்லர் காட்சியில் திரையரங்கை சேதப்படுத்திய ரசிகர்கள்: போலீஸ் மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: லியோ’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டின்போது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டது, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கு ரசிகர்களை காவல் துறை தவறாக கையாண்டதே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பேரணி நடத்த அனுமதிக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு … Read more

புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயிலின் 54,000 சதுர அடி நிலத்தை மீட்கக் கோரி இண்டியா கூட்டணி பேரணி

புதுச்சேரி: புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் நிலத்தை கையகப்படுத்தி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணியை துரிதமாக்கக் கோரி இண்டியா கூட்டணியினர் பேரணியாக சென்று தலைமைச் செயலரிடம் மனு தந்தனர். புதுச்சேரி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரெயின்போ நகரில் உள்ள 54 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஒரு கும்பல் போலிப் பத்திரம் தயாரித்து மோசடி செய்தது. கோயில் நில அபகரிப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 3 அரசு அதிகாரிகள் உட்பட 17 … Read more

செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் புதிய உற்பத்தி திட்டம் மற்றும் விரிவாக்கத்தில் 1150 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் தகவல்

சென்னை: “செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது.சுமார் 3400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கான அனைத்து உதவிகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில், பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் கோபைன் (Saint-Gobain) நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக இயக்குநர்கள் குழுவினரை தமிழக … Read more

ஜெகத்ரட்சகன் வீட்டில் ரகசிய அறை இருக்கிறதா? தீவிராக தேடும் வருமானவரித்துறை

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 90 இடங்களில் வருமானவரித்துறை இரண்டாவது நாளாக தீவிர சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக ரகசிய அறை இருக்கிறதா? என வருவமானவரித்துறை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   

வீட்டு வரி, சொத்து வரி காலதாமதமாக செலுத்துவோருக்கு அபராதம்: இபிஎஸ் கண்டனம்

சென்னை: “வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், காலதாமதமாக வரி செலுத்துவோருக்கு 1 சதவீதம் அபராதத் தொகையையும் வசூலிக்கத் துடிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக’, தமிழக மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி, அவர்கள் படும் துயரங்களை எண்ணிப் பார்க்காமல் மனம்போன போக்கில் … Read more

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்: பயிர்க்கடன், நகைக்கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு

அரூர்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தால் பயிர்க்கடன், நகைக்கடன், உரம் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கடந்த 3-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் சங்க செயலாளர்கள், உதவி செயலாளர்கள், எழுத்தர்கள், உரம் விற்பனையாளர்கள் என அனைத்து பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தப் … Read more

திருச்சி: காக்கிச் சட்டை காமுகர்களால் சிறுமிக்கு பாலியல் தொல்லை – 4 போலீசார் அதிரடி கைது

திருச்சியில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக 17 வயது சிறுமியை காவல்துறையை சேர்ந்த 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.