ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர் மீது தாக்குதல்: மூலஸ்தானம் அருகே ரத்தம் சிந்தியதால் பரிகார பூஜை

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர்களுக்கும், கோயில் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை கைகலப்பு ஏற்பட்டதால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள்: 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான தலம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை உடைய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவமான வைகுண்ட ஏகாதசி … Read more

மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் எஸ்பிக்கள் உயர் நீதிமன்ற கிளையில் ஆஜராக உத்தரவு

மதுரை: மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் சசிகலா ராணி, மதுரை கலைச்செல்வி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர், மதுரை அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றோம். எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லேப்டாப்கள் திருடப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் பணி … Read more

ஈரோடு: காதல் திருமணம் செய்த இளம் பெண் இறப்பு – கணவர் குடும்பத்தார் மீது சந்தேகம்?

ஈரோடு அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட IT நிறுவன பெண் ஊழியரின் இறப்பில் தொடர்புடயை கணவனின் குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்யக்கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு வந்த உறவினர்கள், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை சென்று வந்த நபர் வெட்டிப்படுகொலை! நடந்தது என்ன?

Crime News in Tamil: ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரணை செய்யப்பட்ட பாமக நிர்வாகி பிரபாகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யப்பட என்ன காரணம்? 

“இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு” – ஸ்ரீரங்கம் கோயில் சம்பவத்துக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: “ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது, சிலரை மட்டும் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதித்துள்ளனர். நீண்டநேரம் காத்திருந்த பக்தர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், கோயில் வளாகத்துக்குள் ரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும் என பாஜக கூறுவதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்து தர்மத்தின் மீது … Read more

உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? அதிமுக விமர்சனம்!

மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைச்சர் போன்ற பொறுப்புகளை வகித்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையை கூவமாக மாற்றிவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.   

கோடநாடு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தது ஐகோர்ட்

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம். அவரது சாட்சியங்களைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், “கோடநாடு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி தனபால் பேச தடை விதிக்கக் கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். … Read more

கணவனின் செல்போனை பார்த்த மனைவி! பறிபோன வாழ்க்கை! என்ன நடந்தது?

திருமணம் ஆகியும் பல பெண்களுடன் தனது கணவருக்கு தொடர்பு இருப்பதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

“சட்டப்பிரிவு 370 தீர்ப்பு… இந்திய நீதித் துறை வரலாற்றில் கரும்புள்ளி” – சீமான் காட்டம்

சென்னை: “கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகளையும், தன்னாட்சி அதிகாரத்தையும் முற்றாகப் பறித்தது நாட்டை ஆண்டு வரும் பாஜக அரசு. தற்போது அச்செயல்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிக ஏற்பாடு எனக் கூறியுள்ள சந்திரசூட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வின் வாதம் அபத்தமானது. இந்தத் தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றில் பெரும் கரும்புள்ளி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். … Read more

மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகள்! அதிர்ச்சிப் பின்னணி!

தஞ்சாவூரில் மாமியாரை மருமகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்