உதகையில் கடும் உறைபனி

உதகை: நீலகிரி மாவட்டத்தில் வெகு தாமதமாக உறைபனி பொழிவு தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். இந்த மாதங்களில் வெப்பநிலை அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தை தொட்டு, சில நாட்களில் மைனசுக்கும் கீழ் இறங்கும். உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறி பயிர்கள் கருகிவிடும். இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கியது. இதன்காரணமாக பனிப்பொழிவும் வெகு தாமதமாகத் … Read more

ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை – பரிசீலிப்பதாக அமைச்சர் உதயநிதி தகவல்

மதுரை: ஐபிஎல் போட்டிகளைப் போல ஜல்லிக்கட்டுப் போட்டிகளையும் லீக் முறையில் ஆண்டு முழுவதும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும், ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசுகையில், ‘‘நான் அடிக்கடி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க வந்துள்ளேன். ஜல்லிக்கட்டுப் போட்டி தடை செய்யப்பட்டபோது நடந்த மிகப் … Read more

நடிகர் சூரி காளைக்கு முன்னுரிமை முதல் போட்டி தாமதம் வரை – அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ‘சம்பவங்கள்’

மதுரை: நடிகர் சூரியின் காளை தாமதமாக வந்த போதிலும் அதற்கு முன்னுரிமை கொடுக்க அதிகாரிகள் போராடினர். மேலும் அதிகாரிகளின் மெத்தனத்தால் ஜல்லிக்கட்டு போட்டி தாமதமாக முடிந்தது. அந்த வகையில் புதன்கிழமை நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த கவனம் ஈர்த்த சம்பவங்களைப் பார்ப்போம். > அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் காளைகள், பிடிப்பட்டாலும், பிடிபடாவிட்டாலும் கடைசியில் காளைகள் சேகரிக்கும் இடத்தில் ஓடிப்போய் நிற்கும். அங்கு காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளை பிடித்து அழைத்துசெல்ல வேண்டும். அதில் … Read more

இளவட்டக் கல் தூக்கிய இளைஞர் நிலை தடுமாறியதில் கல் தவறி விழுந்து உயிரிழப்பு @ திருநாவலூர்

திருநாவலூர்: திருநாவலூர் அருகே இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் பங்கேற்றவர், கல்லை தூக்கும் போது நிலை தடுமாறிய காரணத்தால் அவர் மீதே கல் விழுந்து உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த சேந்தநாடு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் முன்பு காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக இளவட்டக் கல் தூக்கும் போட்டியும் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் திருமணமாகதவர்கள் மட்டுமே பங்கேற்பர் என்பதால் அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் … Read more

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கேலரியை ‘ஆக்கிரமித்த’ உள்ளூர் விஐபிகள் @ அலங்காநல்லூர்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் அமர்ந்து பார்க்கும் கேலரியில் இந்த ஆண்டு உள்ளூர் அரசியல்வாதிகள், அவர்கள் குடும்பத்தினர் ஆக்கிரமித்து கொண்டதால் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 2 மணி நேரமாக வெயிலில் தவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை நாளில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள், ஆய்வாளர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை நாளில் மதுரைக்கு திட்டமிட்டு மதுரை வந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவார்கள். சுற்றுலாத்துறை … Read more

ஜன.24-ல் அலங்காநல்லூர் கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருகிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாகமாக கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல்.ஜல்லிக்கட்டு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை … Read more

18 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு, காயம் 83 பேர்… – அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்

மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார். இந்தப் போட்டியில் 83 பேர் காயமடைந்த நிலையில், 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தமிழர்களின் வீரத்தை உலகறிய செய்யும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய … Read more

எம்ஜிஆருக்கு பதிலாக அரவிந்த்சாமி – அதிமுக பேனர் சலசலப்புக்குப் பின்னால்..!

திருப்பத்தூர்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூர் அருகே வைக்கப்பட்ட பேனரில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு பதிலாக அவரது கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை அதிமுகவினர் வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா இன்று (ஜன.17) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மிட்டாளம் … Read more

ஜல்லிக்கட்டு பாரம்பரியம் | நிர்மலா சீதாராமன் திரித்து கூறுவதாக சு.வெங்கடேசன் காட்டம்

சென்னை: “ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாச்சாரம். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி திசை திருப்பும் வேலையை செய்கிறார்” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தைத் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையே ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி … Read more

“உயிரிழப்பு இன்றி ஜல்லிக்கட்டு நடத்துவதே குறிக்கோள்” – அலங்காநல்லூரில் அமைச்சர் உதயநிதி தகவல்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை உயிரிழப்பின்றி நடத்துவதே குறிக்கோள் என தமிழக விளையாட்டு துறை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவைத் தொடங்கிவைத்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுமார் 5 மணி நேரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு பாதுகாப்புடன் சிறப்பாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. நிறைய பரிசுகள் அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு … Read more