விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை? வெளியான முக்கிய அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விடுமுறை தினமாக இருந்தால், அதற்கு முந்தைய நாளில் வரவு வைக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததால் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு

திருச்சி: போதிய ஆசிரியர், தரமான கல்வி இல்லாததால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா காலணி, புத்தகப்பை, சைக்கிள், லேப்டாப் போன்ற திட்டங்களை காழ்ப்புணர்ச்சி … Read more

டேட்டா என்ட்ரி தெரிந்தால் போதும்! தமிழக அரசில் மாதம் ரூ.40,000 சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசு நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என பலதரப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்களை பெற்று வருகிறது. எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சாலை வசதிக்கு மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே? – அண்ணாமலை கேள்வி

சென்னை: தமிழகத்​தின் சாலை வசதிக்​காக மத்​திய அரசு விடு​வித்த ரூ.2,043 கோடி எங்கே போனது என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கேள்வி எழுப்​பி​யுள்​ளார். கோவை மாவட்​டம் வால்​பாறை அருகே உடுமன் பாறை பகு​தி​யில் சாலை வசதி இல்​லாத​தால் உடல்​நலம் பாதிக்​கப்​பட்ட முதி​ய​வரை மலை​வாழ் மக்​கள் தொட்​டில் கட்டி மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லும் வீடியோ இணை​யத்​தில் வைரலானது. இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்டு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கருத்து பதி​விட்​டுள்​ளார். … Read more

தமிழகம் முழுவதும் ரூ.174 கோடியில் 19 புதிய ஐடிஐக்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசின் செய்தி, உயர்கல்வி, தொழிலாளர் நலன் ஆகியதுறைகள் சார்பில் ரூ.230 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ), படப்பிடிப்புத் தளம், கல்விசார் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். குரூப் 1-ல் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.5.10 கோடியில் சீரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய … Read more

மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெற வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் உள்ள முதல்வரின் உதவி மையத்தை ஆய்வு செய்த ஸ்டாலின், மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கோட்டூர்புரத்தில் முதல்வரின் உதவி மையம் ‘1100’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு தினமும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், தீர்வு காணப்பட்ட மனுக்களின் … Read more

நாய் இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்: விலங்குகள் நல வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்​நாடு விலங்​கு​கள் நல வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் இயங்கி வரும் அனைத்து நாய் இனப்​பெருக்​கம் மற்​றும் விற்​பனை நிலை​யங்​களும் மத்​திய சுற்​றுச்​சூழல் வனம் மற்​றும் பரு​வநிலை மாற்​றம் அமைச்​சகத்​தின் அறிவிக்​கை, பிராணி​கள் வதை தடுப்பு சட்​டப்​படி (நாய் இனப்​பெருக்​கம் மற்​றும் விற்​பனை விதி​கள்), தமிழ்​நாடு பிராணி​கள் நல வாரி​யத்​திடம் பதிவுசெய்து கொள்​ளப்பட வேண்​டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு செப். 12-ம் தேதி தினசரி நாளிதழில் பொது அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது. இது​வரை பதிவு … Read more

தவெக தலைவர் விஜய் மீது காவல் நிலையத்தில் புகார்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவினர் தாக்குதல் எதிரொலி: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு வழக்கு!

மதுரை: திருச்சி அதிமுக கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி … Read more

பதக்கத்தை கொடுத்த அண்ணாமலை… நோஸ்கட் கொடுத்த TRB ராஜாவின் மகன் – பரபர சம்பவம்

Annamalai TRB Raja Son: துப்பாக்கிச்சூடு போட்டியில் வென்றவர்களுக்கு அண்ணாமலை பதக்கம் வழங்கியபோது, அவரிடம் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜா மகன் பதக்கத்தை கழுத்தில் பெற மறுத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.