அதற்க்கு வாய்ப்பு இருக்கு., தமிழக அரசை எச்சரிக்கும் கமல்ஹாசன்!

அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை, வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரி மழையையே தாங்காமல் தவிக்கும் தமிழ்நாடு, கனமழையைத் தாங்குமா? என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரிடருக்குப் பிறகு, வடகிழக்குப் பருவமழை மக்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த நாட்களும், உணவுக்கும், தண்ணீருக்கும்கூட பரிதவித்த சூழலும் இன்னும் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை. … Read more

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி..!!

காங்கிரஸ் மூத்த தலைவரும், பேச்சாளருமான குமரி அனந்தன், சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிவார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் குழுவினர், குமரி அனந்தனை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணித்து, மருந்து, மாத்திரைகளை கொடுத்து சிகிச்சையளித்து வருகின்றனர். Source link

காஞ்சி மஹா பெரியவர் வரலாறான ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகம் – மியூசிக் அகாடமியில் அக்.14 முதல் 3 நாட்கள் நடைபெறும்

சென்னை: எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் சார்பில் `தெய்வத்துள் தெய்வம்’ நாடகம் அக்டோபர் 14, 15, 16 ஆகிய 3 நாட்களும் சென்னை மியூசிக் அகாடமியில் தினமும் மாலை 6.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இந்த நாடகத்தை எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன். இவர் கடந்த ஆண்டு வெளியான ‘சிவக்குமாரின் சபதம்’ திரைப்படத்தில் அறிமுகமாகி கவனம் ஈர்த்த நடிகரும்கூட. ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தின் சிறப்புகள் குறித்து அவர் கூறியதாவது: திண்டிவனத்தில் ஆன்மிக ஈடுபாட்டுடன் வளரும் … Read more

மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி: தாயுடன் விவசாயி தற்கொலை

ஜோலார்பேட்டை: மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியடைந்த விவசாயி, உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தாயுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஜோலார்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியை சேர்ந்தவர் சிவகாமி(55). இவரது மகன்கள் சந்தோஷ், சுதாகர், முரளி. சிவகாமியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து மகன்கள் சந்தோஷ், சுதாகர் ஆகியோரும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டார்களாம். இதையடுத்து கடைசி மகனான முரளியுடன் சிவகாமி வசித்து வந்தார். மேலும் அவர்களுக்கு சொந்தமான … Read more

மழைக்கால முன்னெச்சரிக்கையாக அடையாறு ஆறு தொடங்கும் ஆதனூர் கிளை கால்வாய் ரூ.20 லட்சத்தில் சீரமைப்பு

தாம்பரம்: வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆறு தொடங்கும் கூடுவாஞ்சேரி ஆதனூர் கிளை கால்வாய் ரூ. 20 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2 வாரங்களில் தொடங்க உள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வடிகால்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நீர்வழிக் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் வழியாக மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்காக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.20 கோடி ஒதுக்கீடு … Read more

தனுஷ்கோடி மணல் திட்டிலிருந்து கடலில் குதித்து தப்பிய அகதி மண்டபம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து படகில் வந்தபோது தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் படகோட்டிகளால் இறக்கி விடப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட 5 பேரை ராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர். இலங்கை கடற்படையினர் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், தங்களுடன் வந்தவர் கடலில் குதித்து விட்டதாகவும் தெரிவித்தனர். கடலில் குதித்த ஹசான்கான்(24) நேற்று மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்து சேர்ந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

ஏசி கம்ப்ரசர் வெடித்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவர் உயிரிழப்பு: பரங்கிமலை போலீஸார் தீவிர விசாரணை

ஆலந்தூர்: சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில், ஏசி பழுது பார்க்கும் பணியிலிருந்தபோது ஏசி வெடித்ததில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை, கிண்டி, அம்பேத்கர் நகரில், ஜாஸ் சினிமாஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 30-ம் தேதி, இந்நிறுவனத்தின், 3-வது தளத்தில் உள்ள ஏசி இயந்திரம் ஒன்று பழுதடைந்தது. இதனை சரி செய்ய, சென்னை, ஜாபர்கான்பேட்டை பாரத் ஏசி சர்வீஸ் சென்டரை சேர்ந்த, 3 ஊழியர்கள் … Read more

பலத்த பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைப்பு: ராக்கெட் ராஜாவை காவலில் விசாரிக்க போலீஸ் முடிவு

நெல்லை: நாங்குநேரி அருகே வாலிபர் கொலை வழக்கில் கைதான ராக்கெட் ராஜா, பலத்த பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமித்துரை, கடந்த ஜூலை 28ம் தேதி நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மும்பையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்த ராக்கெட் … Read more

திமுக தொண்டர்களால் களைகட்டியது அண்ணா அறிவாலயம்: தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தேர்வாகிறார்

சென்னை: திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வாகிறார். அதேபோல, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோரும் தேர்வாகின்றனர். திமுக நிர்வாக ரீதியான 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று, தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப் பட்டுவிட்டனர். நாளை பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி சென்னை … Read more

இளைஞர்களுக்கும் நல வாரியம் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு இளைஞர்கள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: பல்வேறு வாரிங்களை அமைத்தது போல் இளைஞர்களுக்கும் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இளைஞர்களை நேசிக்கும் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று ஓராண்டு காலத்தில் பல்வேறு சாதனைகளை திட்டங்களை இளைஞர் … Read more