நித்யானந்தா போல தோற்றம் அளிக்கும் சாமியாருக்கு வந்த ‘சோதனை’

திருப்பூர்: நித்யானந்தா என நினைத்து, அவரது தோற்றத்தில் இருந்தவரின் ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக கூறி பல்லடம் காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா எனபவர் இன்று புகார் அளித்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்துக்கு நேற்று சொகுசு காரில் நித்யானந்தா தோற்றத்தில் சாமியார் ஒருவர் வந்திறங்கினார். அவர் பெயர் பாஸ்கரானந்தா. கோவை செல்வபுரத்தை சேர்ந்த இவர், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிக பணி மேற்கொண்டு வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரணம்பேட்டை அருகே செல்வகுமார் … Read more

பருவ மழையினால் சென்னை கடுமையாக பாதிக்கப்படும்; பகீர் கிளப்பும் ஈபிஎஸ்

சேலம் எடப்பாடி நகராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினர் ரவி தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது; அதிமுகவிற்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு கட்சியில் 100 சதவீதம் இடமில்லை. அதிமுகவை முடக்க வேண்டும் என நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள் என கூறினார். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டத்தை விரைந்து செயல்படுத்த … Read more

திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்டு சிகிச்சை பெற்று மாணவர்களை செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் நேரில் கண்டு நலன் விசாரிப்பு

திருப்பூர்: திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்ததையடுத்து சிகிச்சை பெற்று மாணவர்களை செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் நேரில் கண்டு நலன் விசாரித்தார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; ‘மூன்று மாணவர்கள் உடல் நலக்குறைவால்  உயிரிழந்தனர். நான்கு மாணவர்களுக்கு மட்டும் இன்னும் காய்ச்சல் குறையாத நிலையில் தனியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லமுறையில் சிகிச்சை வழங்கபட்டு குணமடைந்து வருகின்றனர். மீதுமுள்ள சிறுவர்கள் நல்லமுறையில் வீட்டுக்கு செல்லகூடிய அளவில் உள்ளனர்.. உயிரிழந்த மூன்று சிறுவர்களின் … Read more

நமது உரிமைக்காக போராடுவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது – தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி பேச்சு

மதுரை: நமது உரிமைக்காக போராடுவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என மதுரை லேடி டோக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி பேசினார். இக்கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான வழி காட்டு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி பங்கேற்று பேசியதாவது: ஆண்டுதோறும் இக்கல்லூரிக்கு என்னை அழைப்பது மகிழ்ச்சி. ஒருவர் எல்லா செல்வங்களை பெற்றவர்களாக இருக்கலாம். அவரது ஞானத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது முக்கியது. கரோனா நேரத்தில் … Read more

சோழர்கள் இந்துக்களா? தமிழர்களா? தெலுங்கர்களா?… புலிக் கொடி வரலாறு!

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல்பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பிறகு ராஜராஜ சோழனைப்பற்றியும் சோழர்கள் பற்றியும் பல்வேறு சர்ச்சைகள் அரசியல் களத்தில் எழுந்துள்ளன. குறிப்பாக, ராஜராஜ சோழன் இந்து அல்ல எனவும், சோழர்கள் தெலுங்கர்கள் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராஜராஜ சோழன் இந்து அரசன் இல்லை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக … Read more

பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளாளப்பட்டியில் அச்சப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் விஜயதசமியான நேற்று சாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா நடந்தது. முன்னதாக அச்சப்பன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து அச்சப்பன் சுவாமி, பரிவார தெய்வங்களுடன் காட்டுகோயிலில் எழுந்தருளினார். அங்கு கோயில் பூசாரிகள் சேர்வை அடித்து நடனமாடினர். பின்னர் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதன்பின்னர் அங்குள்ள மைதானத்தில் நீண்ட வரிசையில் தலைவிரி கோலமாக … Read more

கரூர் மனித உரிமை ஆர்வலர் படுகொலை விவகாரம் – நேர்மையான விசாரணை நடத்த கோரிக்கை

மதுரை: கரூரில் கல்குவாரிக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமை காப்பாளர் ஜெகநாதன் படுகொலையில் நீதி கிடைக்க திருச்சி ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அச்சுறுத்தல் உள்ள ஜெகநாதன் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மதுரையில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை சொக்கிகுளத்திலுள்ள மக்கள் கண்காணிப்பகத்தில் இன்று மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சுயஆட்சி இந்தியா கட்சியின் … Read more

நானும் அனாதை.. திருப்பூர் சிறுவனின் தாய் குமுறி அழுது… உணவால் பிரிந்த உயிர்கள்…

திருப்பூரை அடுத்து திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் செயல்பட்டு வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த செந்தில்நாதன் (70) என்பவர் இந்த சேவாலயத்தை நிறுவி நடத்தி வருகிறார். இந்த சேவாலயத்தில் தற்போது 15 ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு சிறுவன் சொந்த ஊருக்கு சென்றிருப்பதால் 14 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு உணவு உண்ட குழந்தைகள் 14 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இதனால் மயக்கம் அடைந்தனர். அதில் இரண்டு சிறுவர்கள் சேவாலயத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,778 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 17,778 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 3 நாட்களாக 16 ஆயிரம் கனஅடியாக நீடித்த நிலையில் இன்று காலை நிலவரப் படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. மெயினருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் புதுப்பிக்கப்பட்டதை … Read more

உளுந்தூர்பேட்டை | பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை – சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 3வது நாளாக நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் சக ஊழியர்களை சுங்கச்சாவடி நிர்வாகம் பணி நீக்கம் செய்ய நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சக ஊழியர்களின் வேலைநிறுத்தம் 3-வது நாளாக தொடர்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட திருமாந்துறை ஆகிய பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் செங்குறிச்சி சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. துவக்கத்தில் கட்டணச் சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு மனிதத் திறன் மூலம் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் நாளடைவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக … Read more