சிறுத்தை இறந்த விவகாரத்தில் ஒருவர் கைது; ஓபிஎஸ் மகன் மீது குற்றச்சாட்டு

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் வரட்டாறு வனப்பகுதி அருகே தோட்டத்து வேலியில் கடந்த 27-ம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கியது. வனத்துறையினர் காப்பாற்ற முயன்றபோது உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இதில் தப்பிச் சென்ற சிறுத்தை, மறுநாள் அருகில் உள்ள இன்னொரு வேலியில் சிக்கி இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சிறுத்தை இறந்து கிடந்த நிலத்தில் பூதிப்புரத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன்(35) என்பவர் வேலி அமைத்து ஆடு வளர்த்துள்ளார். ஏற்கெனவே 2 … Read more

பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண இடுக்கியை யூனியன்; பிரதேசமாக்க தேனி மாவட்ட கிராமசபை தீர்மானம்

போடி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை யூனியன் பிரதேசமாக மாற்றக்கோரி போடியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி மாவட்டம், போடி ஊராட்சி ஒன்றிய 15 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த கிராம சபை கூட்டங்கள் போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, ஞானத்திருப்பதி ஆகியோர் கலந்துகொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் படி, இடுக்கி மாவட்டம் ஏற்கனவே … Read more

நடிகர் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில், அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் விழாஅரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அடையாறு தேஷ்முக் சாலையில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் நடந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவரை, சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் … Read more

பந்தலூர் அருகே காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி தவித்த சிறுத்தை: வனத்துறையினர் மீட்டனர்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி  அத்திச்சால் பகுதியில் தனியார் காப்பி தோட்டத்தில் சிறுத்தை ஒன்று, சுருக்குகம்பி வலையில் சிக்கி தவிப்பதாக வனத்துறைக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனடியாக வனத்துறையினர் சென்று  தொலைவில் நின்று பார்த்தனர். அப்போது சிறுத்தை ஒன்று சுருக்குகம்பியில் சிக்கி ஆக்ரோஷத்துடன் இருந்தது. பாதுகாப்பு கருதி அருகே செல்லாமல் வனத்துறையினர் முதுமலை வன உயிரின கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வந்து சிறுத்தைக்கு … Read more

முக்கிய நிர்வாகிகளின் ராஜினாமா அறிவிப்பால் காஞ்சி மாவட்ட மதிமுக கலைப்பு

காஞ்சிபுரம் மாவட்ட மதிமுகவின் நிர்வாக அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக மாவட்டச் செயலாளராக வளையாபதி, காஞ்சிபுரம் நகரச் செயலராக மகேஷ் உள்ளிட்டோர் செயல்பட்டு வருகின்றனர். கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரை வைகோ வயதானவர்கள் ஒதுங்கி இளைஞர்களுக்கு வழிகாட்டினால் நன்றாக இருக்கும் எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் வளையாபதி, தான் கட்சியில் 28 ஆண்டுகளாக இருப்பதாகவும் தனக்கு வயதாகிவிட்டது என்றும் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் … Read more

புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சீருடையில் பங்கேற்பு

புதுச்சேரி: புதுவையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் சீருடையில் பங்கேற்றனர். புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை செல்வகணபதி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநில பாஜக தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கரன் ஆகியோர் … Read more

பாதுகாப்பு கணக்கு துறை தின கொண்டாட்டம் – சிறப்பாக பணிபுரிந்தோருக்கு விருது

சென்னை: சென்னையில் பாதுகாப்பு கணக்குகள் துறை தின விழா அத்துறை சார்பில், கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. பாதுகாப்பு கணக்குகள் துறை கடந்த 1951 அக். 1-ம் தேதி நிறுவப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் அக். 1-ம் தேதி இந்தியா முழுவதும் அனைத்து அலுவலகங்களிலும் பாதுகாப்பு கணக்குகள் துறை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள பாதுகாப்பு கணக்குகள் துறை அலுவலகம் சார்பில், பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் … Read more

ஓபிஎஸ்சுக்கு இ.பொ.செ பதவி தருவதாக கூறினோம் அதிமுக பிளவுபட திட்டம் தீட்டியவர் வைத்திலிங்கம்: மாஜி அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல்: அதிமுக ஒன்றாக இருக்கக் கூடாது என திட்டம் தீட்டியவர் வைத்திலிங்கம் என நாமக்கல்லில் மாஜி அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ பேசினார். நாமக்கல்லில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்எல்ஏ பேசியதாவது: அதிமுகவை அதிமுகவினரால் மட்டும் தான் வீழ்த்த முடியும். அதுதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்துள்ளது. அதிமுக பிளவுபடவும், ஒன்றாக இருக்கக்கூடாது எனவும் திட்டம் தீட்டியவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் … Read more

கல்வித் துறையின் புதிய அலுவலகங்கள் திறப்பு: கடத்தூரில் அதிமுக, திமுகவினர் வாக்குவாதம்

பள்ளிக் கல்வித் துறையில் அண்மையில் நிர்வாக ரீதியான சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதையொட்டி, தருமபுரியில் கல்வித்துறை நிர்வாகத்துக்கான புதிய அலுவலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கக் கல்விக்கான மாவட்ட கல்வி அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினர் வெங்கடேஷ்வரன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மான்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேபோல, தருமபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப் … Read more

மாணவர் அரங்கம் ஆசிரியர்களே மாணவர்களுக்கு முதல் பெற்றோர்: சுய ஒழுக்கத்தில் சிறப்பாக செயல்படும் தொடக்கப்பள்ளி

நன்னடத்தை, ஒழுக்கம், சுகாதரம், நேர்மை என ஆரம்ப பள்ளி நாட்களிலேயே மாணவர்களுக்கு சுய ஒழுக்கத்தினை கற்று கொடுக்கும் பள்ளியாக செயல்படுகிறது இந்த தொடக்கப்பள்ளி. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1 முதல் 5ம் வகுப்பு வரை செயல்படும் இந்த தொடக்கப்பள்ளியில், தமிழ் வழி கல்வியில் 27 மாணவ – மாணவிகளும், ஆங்கில வழி கல்வியில் 85 மாணவ – மாணவிகளும் என … Read more