தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு பயிற்சி – ‘முதல்வரின் புத்தாய்வு திட்டம்’ தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: ‘தமிழ்நாடு முதல்வரின் புத்தாய்வு திட்ட’த்தை தமிழக அரசு, அறிமுகப்படுத்தியுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றல், திறமையை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தில் 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 30 நாள் வகுப்பறை பயிற்சி திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம், இதர செலவினங்களுக்காக ரூ.10 … Read more

நடத்துனரிடம் எனக்கு ‘ஓசி’ டிக்கெட் வேண்டாம் என கூறி மல்லுக்கட்டிய மூதாட்டி!! வைரல் வீடியோ..!!

எனக்கு ‘ஓசி’ டிக்கெட் வேண்டாம் என கூறி கோவையில் மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் மல்லுக்கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அதில், “உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு … Read more

‘இந்து தமிழ் திசை’ வழங்கும் கொலு கொண்டாட்டம் – கொலு படங்களை அக்.2-க்குள் அனுப்பலாம்

சென்னை: அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் – காஞ்சிபுரம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் கொலு கொண்டாட்டத்தில் சிறந்த படங்களை அக்.2-க்குள் அனுப்புவோருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நம் வீடுகளில் கொலு கொண்டாட்டங்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்த ஆண் டும் வீடுகளில் வைக்கவுள்ள கொலு கண்காட்சியைப் படமாக எடுத்து அனுப்ப வேண்டும். சிறப்பான படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. உங்கள் வீடுகளில் வைத்தகொலு படங்களை அனுப்பும்போது உங்கள் பெயர், … Read more

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு; பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

விழுப்புரம்: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், நிபந்தனை ஜமீனில் வெளியே வந்த  பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி  விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அவர்களிடம் போலீசார் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, 5 … Read more

சென்னையில் சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள் – 2% அபராத தளர்வு சலுகை யாருக்கு? 

சென்னை: சென்னையில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2 சதவீத தனி வட்டி விதிக்கும் நடைமுறையில் ஒருமுறை மட்டும் தளர்வு அளித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து சென்னையில் குடிநீர் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னையில் புதிய சொத்து வரியை … Read more

பாலியல் புகார் தெரிவித்த ஊட்டி அரசு கல்லூரி உதவி பேராசிரியை இட மாற்றம்: வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

ஊட்டி:  ஊட்டி அரசு கலை கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றுபவர் பிரவீணாதேவி. நேற்று முன்தினம் இவரை  திருப்பூர் மாவட்டம் காங்கயம் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு வந்துள்ளது. இது தொடர்பாக பிரவீணாதேவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘கடந்த பிப்ரவரி மாதம் உதவி பேராசிரியர் தர்மலிங்கம் எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர், எஸ்பி, கல்லூரி கல்வி இயக்குநரகம், மண்டல இயக்குநர், கல்லூரி கல்வி … Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தடை விதித்தது பாசிச நடவடிக்கை: வானதி சீனிவாசன் ஆவேசம்

கோவை: உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான திமுக அரசின் நடவடிக்கை கடும் … Read more

சானிட்டரி நாப்கின் விவகாரம்: தமிழ்நாடு அதிலும் முன்னோடிதான்!

“ஆணுறைகளையும் கூட அரசே தர வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள் போல?” இது சாமானியர் ஒருவர் பேசியது கிடையாது. ஐஏஎஸ் படித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் பெண் இயக்குநர் ஒருவர் கூறியது. அதுவும், பள்ளி மாணவி ஒருவர் குறைந்த விலை நாப்கின்கள் பற்றிய கேள்விக்குதன் அவர் இப்படி பதிலளித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ‘அதிகாரம் பெற்ற மகள்கள்; வளமான பீகார்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும், ஐஏஎஸ் … Read more

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலையில் மனைவி, மாமனாருக்கு ஆயுள் தண்டனை: மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் போலீஸ் சரகத்துக்குட்பட்ட அப்புராஜபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைமதி (30). இவரும், சதீஷ்குமார் (30) என்பவரும் காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கலைமதி தந்தை நாகராஜன் (60) வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் … Read more

சீன அதிபர் வருகையின்போது சென்னையில் போராட்டம் நடத்திய திபெத்திய மாணவர்களுக்கு எதிரான வழக்கு ரத்து

சென்னை: சீன அதிபர், ஜி ஜின் பிங் சென்னை வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திபெத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். சென்னையில் படித்து கொண்டிருந்த திபெத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து … Read more