கீழடி அருகே அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் நெல்மணிகள்

திருப்புவனம்: கொந்தகையில் நடைபெறும் தொல்லியல் துறை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள், முதன்முறையாக நெல்மணிகள் கிடைத்துள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் ஒரு தாழியை திறந்து ஆய்வு செய்தபோது 74 சூதுபவள மணிகள் புதைவிட தள ஆய்வில் முதன்முதலாக கிடைத்தது என தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் … Read more

யாரோ எழுதி கொடுத்ததை படித்து விட்டு சென்றுள்ளார் இ.பி.எஸ் ; தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி காட்டம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஈபிஎஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். யாரோ எழுதி கொடுத்ததை படித்து விட்டு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி” என்று காட்டமாக விமர்சித்துள்ளார். தி.மு.க அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி இன்று (செப்டம்பர் 16) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொய் … Read more

காலை உணவுத் திட்டத்திற்கு தனி உணவுக் கூடம் அமைத்தது ஏன்? – அமைச்சர் விளக்கம்

சென்னை: காலை உணவுத் திட்டத்தில் நேரம் தவறக்கூடாது என்று தான் தனி உணவுக் கூடம் அமைக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினர். இனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது … Read more

குவைத்தில் சுட்டு கொல்லப்பட்ட வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்: அமைச்சர்கள் அஞ்சலி

திருச்சி: குவைத்தில் சுட்டு கொல்லப்பட்ட வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன்(40). தனியார் ஏஜென்சி மூலம் குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை உள்ளதாக கூறி கடந்த 3ம் தேதி முத்துகுமரன் குவைத் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கடந்த 9ம் தேதி முத்துகுமரன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒட்டகங்களை மேய்க்க கூறியதாகவும், அதற்கு முத்துகுமரன் மறுப்பு தெரிவித்ததால், … Read more

புதிய மணல் குவாரிகள் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் புதிய மணல் குவாரிகள் திறப்பை அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 15 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் எந்த இடத்திலும் விதிப்படி … Read more

அதிமுக ஆட்சியில் கண்மாயில் மைதானம் கட்டியதாக வழக்கு மக்கள் வரிப்பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்கமுடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே இருஞ்சிறையைச் சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்சுழி அருகேயுள்ள டி.வேலன்குடியில் ஆலங்குளம் கண்மாய் உள்ளது. கடந்த 2019 – 20ல் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாய் பகுதியில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கத்தை அகற்றஉத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண … Read more

நால்வகைத் தூண்களும் விமர்சனத்திற்கு உட்பட்டுத்தானே ஆகவேண்டும்: சீமான் கருத்து

சென்னை: “நால்வகைத் தூண்களான சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவையும் விமர்சனத்திற்கு உட்பட்டுத்தானே ஆக வேண்டும். அவற்றை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகக் கட்டமைப்பது எந்த வகையில் நியாயம்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நீதித் துறை குறித்து விமர்சித்ததற்காக, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்துகளில் பலவற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை … Read more

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான அடுத்த ஐந்து தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் (16.09.2022 மற்றும் 17.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18.09.2022 மற்றும் 19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை … Read more

சென்னை- ரேணிகுண்டா இடையே அதிவேக சோதனை ஓட்டம் இன்ஜின் கோளாறால் தடங்கல்

அரக்கோணம்: சென்னை சென்ட்ரல்- ரேணிகுண்டா இடையே ரயில்களை பயணிகள் ரயில்களை அதிகபட்சமாக 130 முதல் 145 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கும் வகையில் தண்டவாளங்கள் தகுதி பெற்று உள்ளதா? என்பதை அறிய, நேற்று சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 10.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, மதியம் 12.15 மணி அளவில் ரேணிகுண்டா சென்றடைந்தது. பின்னர் அந்த ரயில், ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1மணி … Read more

புதுச்சேரி, காரைக்காலில் பரவும் காய்ச்சல்: 1 முதல் 8ம் வகுப்பு வரை நாளை முதல் விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதால் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நாளை முதல் வரும் 25ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளிலும் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் … Read more