மேட்டூர் அனல் மின் நிலையப் பணிகள் தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பல்வேறு பணிகளுக்காக கோரப்பட்ட டெண்டரை எதிர்த்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மேட்டூர் நகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் தங்கப்பன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ” மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் மேற்கொள்ளப்படும் 36 வகையான பணிகளுக்கு தனித்தனியாக நான்கு மாதங்களுக்கு டெண்டர்கள் வழங்கும் … Read more

திடுக்கிட வைத்த நீட் தேர்வு முடிவு; உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை!

நம் நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நீட் என்ற நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனிதா என்கிற மாணவி தொடங்கி பல மாணவர்கள் தங்களது உயிரையே மாய்த்துக்கொண்டனர். எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி சட்டப்பேரவையில் … Read more

துரோகம்.. திமுகவின் பினாமி.. பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓபிஎஸ் -ஈபிஸ் விமர்சனம்

சென்னை: தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எடப்பாடி கே.பழனிச்சாமி வருகை தந்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசினார். அப்பொழுது அவர், பன்னீர் செல்வம் மன்னிப்பு கேட்டாலும் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் எனக் கேள்வி எழுப்பிய அவர், பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓ.பி.எஸ் எனக் கடுமையாக தாக்கி எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.  செய்தியாளர்களிடம் அவர் பேசியது பின்வருமாறு: நன்றிக் கூறிய எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுக்குழுவில் … Read more

தமிழகத்தில் ஒரே ஆண்டில் மட்டும் 300 கோயில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

ஈரோடு: தமிழகத்தில் ஒரே ஆண்டில் 300 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறினார். ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட கோயில் திருப்பணி பல ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க கடந்தாண்டு ஜூலையில் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திருப்பணிகள் … Read more

ஒரே அறைக்குள் இரு கழிப்பிடங்கள்! நூதன விளக்கம் அளித்த கோவை மாநகராட்சி!

கோவையில் ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்களை கட்டியது சர்ச்சையான நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நூதன விளக்கத்தை அளித்துள்ளது. கோவை மாநகராட்சியின் 66 ஆவது வார்டு அம்மன்குளம் பகுதியில் ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்கள் கட்டப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் விளக்கமளித்துள்ள கோவை மாநகராட்சியின் பொறுப்பு ஆணையாளர் ஷர்மிளா, சிறுவர்கள் பயன்படுத்துவதற்காகவே அவ்வாறு கழிப்பிடம் அமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதில் சர்ச்சை எழுந்த கழிப்பறை 1995 ஆம் ஆண்டு … Read more

திருட வந்த வீட்டில் ஏதும் கிடைக்காததால் வீட்டிற்கு தீ வைத்து மிளகாய் பொடியை தூவி சென்ற கொள்ளையர்கள்

திருட வந்த வீட்டில் விலை உயர்ந்த நகை மற்றும் பணம் கிடைக்காததால், ஆத்திரமடைந்த திருடர்கள் வீட்டுக்கு தீ வைத்து விட்டு, மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் ராம்நகர் 4 ஆம் வீதியில் வசித்து வரும் குழந்தை திரோஸ் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு கிராமத்தில் உள்ள தனது உறவினர் திருமணத்திற்காக சென்றுள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டிலிருந்து புகை வெளிவந்ததை கண்ட அருகில் வசிப்பவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீ … Read more

‘பயன்படுத்த முடியாத ஆயுதங்கள், வெடிமருந்துகள் – புதுச்சேரி சிறையில் 14 ஆண்டுகளாக அப்புறப்படுத்தாத அவலம்’

புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் பயன்படுத்த முடியாத ஆயுதங்கள், வெடிமருந்துகள் 14 ஆண்டுகளாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. தற்போதைய தேவையான ஆயுதங்களின் பட்டியலை டிஜிபிக்கு அனுப்பும் பணியும் நடக்கவில்லை. ஆயுத பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தணிக்கைத் துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. புதுவையில் வர்த்தகத்தின் முக்கியப் பகுதியாக விளங்கும் நேரு வீதியில்தான் புதுவை மத்திய சிறை, கடந்த 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமைந்தது. வர்த்தகப் பகுதிக்கு நடுவே அமைந்த சிறைச்சாலையால் இப்பகுதி நெருக்கடியானது. அதனால், நகரிலிருந்து ஒதுக்குப்புறமான கிழக்கு கடற்கரை … Read more

மா.செ.,க்கள் நியமனம்… திமுக தலைமை மீது சீனியர்கள் கோபம்… காரணம் இதுதான்!

பவர்ஃபுல் அதிகாரம்: ஒரு ஆட்சியில் அமைச்சர் பதவி எப்படி அதிகாரம் மிக்கதோ… அந்த அளவுக்கு திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர் பதவி மிகவும் வர்ஃபுல்லானதாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் கட்சியின் வட்ட, கிளை செயலாளர் முதல் மாவட்ட துணைச் செயலாளர் நியமனம் வரை இவர் கைக்காட்டுபவர்தான் இந்த பொறுப்புகளுக்கு வர முடியும். மா.செ,க்களின் ஆசி பெற்றவர்களுக்கோ அல்லது மா.செக்களுக்கோதான் பெரும்பாலான நேரங்களில் தேர்தலில் போட்டியிட எம்பி., எம்எல்ஏ சீட் எளிதில் கிடைக்கிறது. கட்சித் … Read more

காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ ராகுல் 2வது நாளாக பாதயாத்திரை: அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார்

நாகர்கோவில்: அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி தொண்டர்கள் புடைசூழ ராகுல்காந்தி 2வது நாளாக தனது பாத யாத்திரையை தொடங்கினார். அப்போது பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள், 3500 கி.மீ. தூரம் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி நேற்று மாலை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தேச ஒற்றுமையை வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் அவலங்களை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாகவும் இந்த பயணம் நடைபெறுகிறது. இந்த நடைபயணத்தை … Read more

மீண்டும் விசாரணை பிடிக்குள் வருகிறார் செந்தில் பாலாஜி… உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 – 2015 வரையிலான காலக்கட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், … Read more