‘பிரதமர் மோடி, அண்ணாமலைக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல்’ – மதுரை காவல் துறையிடம் பாஜகவினர் புகார்

மதுரை: பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை பாஜக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர். மதுரை மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் அமிழ்தன், மாவட்ட நிர்வாகிகள் அய்யப்பராஜ், வெங்கசேடஷ், அருண் தமிழன், ஜெயமுருகன், அர்ச்சனா எச்.ராஜா உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் துணை ஆணையர் மோகன்ராஜை சந்தித்து … Read more

ஒரே நேரத்தில் 10,000 பேர் வர முடியும்: பஞ்சபூர் பஸ் நிலைய வசதிகள் பற்றி கே.என் நேரு பேட்டி

திருச்சியில் ரூ.350 கோடி மதிப்பில் அமைக்கப்படும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் முதல் கட்டமாக ரூ.20.10 கோடி மதிப்பிலான கிராவல் மண் நிரப்பும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் சேவை பயன்பாட்டிற்கான பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கி வைத்தார். பின்னர் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்;  திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.390 … Read more

பொன்னியின் செல்வன் -1 டீசர் நாளை வெளியீடு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பொன்னியின் செல்வன் டீசர் நாளை வெளீடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா சரத்குமார், ஜெயராம் , பிரபு உள்ளிட்ட முக்கிய திரைபிரபலங்கள் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்கலாக உருவாக உள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம்.  இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் கதாப்பாத்திரம் … Read more

வாயிருக்குன்னு இப்படி எல்லாம் பேசுனா எப்படி.? வீடியோவில் சிக்கிய கவுன்சிலர் கணவர்.. குப்பை எடுக்காததால் உருவான தகராறு.!

வேலூரில் தனது வார்ட்டில் முறையாக பணி செய்யவில்லை எனக்கூறி தூய்மை பணியாளர்களை கவுன்சிலரின் கணவர் கடுமையான வார்த்தைகளால் திட்ட, பதிலுக்கு நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம் ? என்று தூய்மைப்பணியாளர்கள் திருப்பிக்கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது வேலூர் மாநகராட்சியின் 44 வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த தவமணி. சில நாட்களாக இவரது வார்டில் தூய்மைப்பணி முறையாக நடைபெறவில்லை என்று பொது மக்கள் கவுன்சிலரின் கணவர் தாமோதரனுக்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புகார் வந்த தெருவுக்கு … Read more

காலரா பரவலை புதுவை அரசு துரிதமாகக் கட்டுப்படுத்தியது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

காரைக்கால்: புதுச்சேரி அரசின் துரிதமான நடவடிக்கையால் காரைக்காலில் காலரா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (ஜூலை 7) காரைக்கால் வந்தார். மாங்கனித் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். பின்னர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரை … Read more

"எனக்கும் நடராஜருக்கும் இடையில் நாரதர்கள் தேவையில்லை" – ஆளுநர் தமிழிசை அறிக்கை

“ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை. ஆளுநர்களின் நடவடிக்கைகள் அரசியல் செய்யப்படுகிறது” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச்சிலை மற்றும் வெளியே வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு இன்று மரியாதை செலுத்தினார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சௌந்தரராஜன். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரட்டைமலை சீனிவாசனுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைப்படுகிறேன். அம்பேத்கரோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிகப்பெரிய புரட்சியை … Read more

ஆதித்ய கரிகாலன் முதல் குந்தவை வரை… எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பொன்னியின் செல்வன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தை குறிப்பிட்டு நடிகை த்ரிஷாவை நடிகர் கார்த்தி கிண்டல் செய்துள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிரம்மாண்ட வரலாற்று புதினங்களில் ஒன்றான் பொன்னியின் செல்வன் கதையை பல கட்ட முயற்சிகளுக்கு பின் இயக்குநர் மணிரத்னம் படமாக்கி வருகிறார். 2 பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் … Read more

நீலகிரி.! இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை.!

நீலகிரியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அத்தியூர்மட்டம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் கார்த்திக்(23). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் உள்ள அனைவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர்.  இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலை முடிந்த பிறகு இரவு வீட்டிற்கு வந்த தந்தை வீட்டின் அறையில் கார்த்திக் தூக்கு போட்டு தொங்கிய … Read more

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு பணிக்கான போட்டித் தேர்வு டிசம்பரில் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதன்படி,இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?, எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் ?, பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் யார் கையெழுத்திடுவது? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (ஜூலை 8) ஒத்திவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more