புதுச்சேரி நிதிச்செயலர் அதிகார துஷ்பிரயோகம்: முதல்வரிடம் புகார் அளிக்க முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி நிதிச்செயலர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதால் இதுகுறித்து முதல்வரிடம் புகார் அளிக்க அமைச்சக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அலுவலக பணியாளர்களை வீட்டுப்பணிக்கு பயன்படுத்துவதுடன், அலுவலக காரை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவது உட்பட நிதிச்செயலர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமைச்சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரை சந்திக்க உள்ளதாககவும் அவர்கள் தெரிவித்தனர். புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ”புதுச்சேரி நிதித்துறைச் செயலர் … Read more

போலீஸ் எனக்கூறி பணம் பறித்த பெங்களூர் கும்பல்..சினிமா பாணியில் விரட்டி பிடித்த நிஜ போலீஸ்!

கோவில்பட்டியில் பாத்திரக்கடை உரிமையாளரை கடத்தி ரூ 5 லட்சம் பறித்த பெங்களூர் கும்பலை சினிமாவை மிஞ்சும் வகையில் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் தங்கம். இவர், இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்க பாலம் அருகே பாத்திரம் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பலொன்று தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேச்சு … Read more

திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி நினைவு தினத்தை தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்களும் பலரும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி குறித்து புகழஞ்சலி பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

Tamil news today live : கிராண்ட் மாஸ்டரானார் தமிழக வீரர் பிரனவ் வெங்கடேஷ்

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும். டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இடுக்கி அணை திறப்பு – எச்சரிக்கை கேரளா தொடர் மழை காரணமாக இன்று இடுக்கி அணை திறப்பு. முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல். கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 4வது டி20 போட்டியில் அபார வெற்றிபெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது இந்தியா. … Read more

சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கையின் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கை தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனாவின் யுவான் வாங் – 5 உளவுக்கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கோணத்தில் இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். சீன உளவுக்கப்பலை இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என … Read more

அறுவை சிகிச்சை மாத்திரைகளை போதை பொருளாக்கிய கும்பல்… மாணவ – மாணவியரும் வீழ்ந்த அபாயம்

ஈரோட்டில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை, இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இருவரை கைது செய்த போலீசார், சுமார் 2800 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ராயப்பம்பாளையம் புதூரில் திலீப்குமார் மற்றும் வினித்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளர்களான இவர்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணை முடிவில், இவர்கள் … Read more

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காதல் ஜோடியை மீட்ட தீயணைப்பு குழு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, நேற்று முன்தினம் நெல்லித்துறை ஊராட்சி, குண்டுக்கல் துறை என்ற இடத்தில் பவானி ஆற்றின் திட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அன்று மதியம் பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அங்கிருந்த மரத்தின் மீது ஏறி காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், மேட்டுப்பாளையம் வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸாருக்கு … Read more

கனல் கண்ணன் பேசியதில் என்ன தவறு உள்ளது? – ஹெச்.ராஜா

மதுரை திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் பாஜக சார்பில் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றும் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அக்கட்சி தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரிசிங்க பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியார் சிலை குறித்து கருத்து தெரிவித்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை … Read more

`என்னையா விரட்ட பார்க்குறீங்க…?’ வனத்துறையினரை அலறவிட்டு காட்டுக்குள் தப்பியோடிய யானை!

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்ட முற்பட்டபோது, யானை வாகனத்தை எதிர்த்து வந்த காட்சிகள் வெளியாகி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்னா யானை ஒன்று ஊருக்குள் சுற்றி தெரிகிறது. சமீப காலமாக அந்த யானை மனிதர்களை கண்டால் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுகிறது. அந்த யானையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் … Read more

விண்ணில் பாய்ந்த SSLV ராக்கெட் – சில மணி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவிகள் சேர்ந்து உருவாக்கிய ஆசாதிசாட்  எனும் கல்விசாா் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணி நேர கவுன்டவுன் முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது. 144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி … Read more