மதுரை விமான நிலைய விரிவாக்கம் | தமிழக அரசு போதுமான நிலம் ஒப்படைக்கவில்லையா? – தாமதத்தின் பின்னணி

மதுரை: மதுரை விமானநிலையம் விரிவாக்க திட்டப் பணிகளுக்காக இன்னும் 89.76 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒப்படைக்கப்படவில்லை என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியதைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தொழில்துறையினர், பொதுமக்கள் குழம்பி போய் உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையமாக செயல்படுகிறது. மதுரை விமான நிலையம், துபாய், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே விமானவை சேவை கொண்டுள்ளதால் … Read more

பொறியியல் கவுன்சலிங்; ஒவ்வொரு ரவுண்ட்க்கான கட் ஆஃப் எப்படி இருக்கும்?

Engineering counselling cut off range for all rounds: பொறியியல் கலந்தாய்வில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ரவுண்ட்டுக்கும் எந்த அளவிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் அழைக்கப்பட்டன என்பதையும், இந்த ஆண்டு கட் ஆஃப் அளவு எப்படி இருக்கும் என்பதையும் இப்போது பார்ப்போம். தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறை நடைபெற்று வருகிறது. இதற்கு பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெறும். இதையும் … Read more

புதுச்சேரி நிதிச்செயலர் அதிகார துஷ்பிரயோகம்: முதல்வரிடம் புகார் அளிக்க முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி நிதிச்செயலர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதால் இதுகுறித்து முதல்வரிடம் புகார் அளிக்க அமைச்சக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அலுவலக பணியாளர்களை வீட்டுப்பணிக்கு பயன்படுத்துவதுடன், அலுவலக காரை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவது உட்பட நிதிச்செயலர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமைச்சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரை சந்திக்க உள்ளதாககவும் அவர்கள் தெரிவித்தனர். புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ”புதுச்சேரி நிதித்துறைச் செயலர் … Read more

போலீஸ் எனக்கூறி பணம் பறித்த பெங்களூர் கும்பல்..சினிமா பாணியில் விரட்டி பிடித்த நிஜ போலீஸ்!

கோவில்பட்டியில் பாத்திரக்கடை உரிமையாளரை கடத்தி ரூ 5 லட்சம் பறித்த பெங்களூர் கும்பலை சினிமாவை மிஞ்சும் வகையில் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் தங்கம். இவர், இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்க பாலம் அருகே பாத்திரம் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பலொன்று தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேச்சு … Read more

திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி நினைவு தினத்தை தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்களும் பலரும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி குறித்து புகழஞ்சலி பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

Tamil news today live : கிராண்ட் மாஸ்டரானார் தமிழக வீரர் பிரனவ் வெங்கடேஷ்

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும். டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இடுக்கி அணை திறப்பு – எச்சரிக்கை கேரளா தொடர் மழை காரணமாக இன்று இடுக்கி அணை திறப்பு. முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல். கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 4வது டி20 போட்டியில் அபார வெற்றிபெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது இந்தியா. … Read more

சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கையின் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கை தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனாவின் யுவான் வாங் – 5 உளவுக்கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கோணத்தில் இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். சீன உளவுக்கப்பலை இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என … Read more

அறுவை சிகிச்சை மாத்திரைகளை போதை பொருளாக்கிய கும்பல்… மாணவ – மாணவியரும் வீழ்ந்த அபாயம்

ஈரோட்டில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை, இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இருவரை கைது செய்த போலீசார், சுமார் 2800 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ராயப்பம்பாளையம் புதூரில் திலீப்குமார் மற்றும் வினித்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளர்களான இவர்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணை முடிவில், இவர்கள் … Read more

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காதல் ஜோடியை மீட்ட தீயணைப்பு குழு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, நேற்று முன்தினம் நெல்லித்துறை ஊராட்சி, குண்டுக்கல் துறை என்ற இடத்தில் பவானி ஆற்றின் திட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அன்று மதியம் பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அங்கிருந்த மரத்தின் மீது ஏறி காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், மேட்டுப்பாளையம் வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸாருக்கு … Read more

கனல் கண்ணன் பேசியதில் என்ன தவறு உள்ளது? – ஹெச்.ராஜா

மதுரை திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் பாஜக சார்பில் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றும் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அக்கட்சி தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரிசிங்க பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியார் சிலை குறித்து கருத்து தெரிவித்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை … Read more