நகைக் கடன் புதிய விதிகளுக்கு எதிராக மே 30-ல் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள நகைக் கடன் நிபந்தனைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி திமுக விவசாய அணி சார்பில், வரும் மே 30-ம் தேதி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் விவசாய அணியின் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே மத்திய பாஜக அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதவான கொள்கைகளையே அமல்படுத்தி, விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை … Read more

“இந்த ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எதுவும் கிடைக்காததால்…” – இபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: “எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆட்சியை பற்றி குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. அதனால், திரும்ப திரும்ப அரைத்த மாவை அரைப்பது போல் இப்படி குறை கூறுகிறார். அதற்கு நான் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 27) கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 22.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மூத்த … Read more

கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு!

குமுளி: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையில் ஒரே நாளில் 3 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கி விட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக தமிழக – கேரள எல்லையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 23-ம் தேதி … Read more

தமிழக கரும்பு விவசாயிகள் சென்னையில் தொடர் முழக்க போராட்டம்

சென்னை: கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சென்னையில் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு 9.5 பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிக்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் எத்தனால், மின்சாரம் உள்ளிட்ட உப பொருட்கள் மூலம் உற்பத்தி ஆலைக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்க மத்திய … Read more

தமிழ்நாட்டில் நடப்பது அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி.. தவெக தலைவர் விஜய்!

Vijay Attack DMK: சென்னை வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகியை போலீசார் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது கண்டிக்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் தொடரும் மழை: கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 28) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை … Read more

கடந்த 24 மணி நேரத்தில் பொளந்த கனமழை! நீலகிரி மாவட்டத்தில் நிலவரம் என்ன?

Heavy Rains Latest News: கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய இந்த மூன்று மாவட்டங்களில் தான் கனமழை பதிவாகி இருந்திருக்கிறது. இன்றைய தினமும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் மழை பெய்யும். 

நெல் கொள்முதலில் ரூ.811 கோடி மோசடி: சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி

சென்னை: தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் விவசாயிகளிடம் ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான விலையை இரு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளுக்கு வழங்காமல் … Read more

வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு! இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது!

வங்க கடலில் இன்று (மே 27) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் காட்டங்குளத்தூர் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று (மே 27) காலை 10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.28 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், … Read more