நாமக்கல் – திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு <!– நாமக்கல் – திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு –>

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.பட்டணம் பேரூராட்சியின் 6-வது வார்டில் தி.மு.க. பெண் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதிமுக பெண் வேட்பாளர் மணியரசியும், திமுக வேட்பாளர் பத்மா ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மணியரசி நேற்று திடீரென மனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து திமுக வேட்பாளர் பத்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதேபோல் ஒன்றாவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வசந்தி நடேசன் என்பவரும், வேட்புமனுவை திரும்பப் பெற்றதால், … Read more

எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் … Read more

விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

Villupuram MP Ravikumar tests positive to corona: விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்றைய பாதிப்பு 6,120 ஆக இருந்த நிலையில் 5,104 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாரும், விழுப்புரம் … Read more

தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய-மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும்.. சசிகலா வேண்டுகோள்.!

தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் அழிந்திடாமல் பாதுகாக்கவும், லட்சக்கணக்கான தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிடவும், மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வி கே சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் ஏற்கனவே தொடர் மழை, மூலப்பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களால் மிகவும் நலிவடைந்து வருவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி உற்பத்திக்கு எந்தவித … Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மின்சாரக் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் <!– சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மின்சாரக் கம்பத்த… –>

தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மின்சார கம்பத்தில் கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்தனர். பெரியகுளம் அடுத்த வடுகப்பட்டியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு ஒருவன் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.இதனையறிந்த அப்பகுதி மக்கள் அவனை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மக்களிடமிருந்து அவனை மீட்டனர். விசாரணையில் அவன் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பது தெரியவந்தது. பொது மக்கள் தாக்கியதில் அவனுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்குப் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; பிரச்சாரம் சூடு பிடிக்கிறது: பறக்கும்படை கண்காணிப்பு தீவிரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படையினர், நடத்தை விதிமீறல்கள் நடக்கிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளன. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந் தெடுப்பதற்காக … Read more

SSC CHSL 2022; மத்திய அரசு வேலை; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

SSC CHSL recruitment 2022 apply soon: மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  07.03.2022க்குள் விண்ணப்பித்துக் … Read more

தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்.. நேரலையில் ஒளிபரப்பு.. நிறைவேற்றப்பட போகும் மசோதா.!!

நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.  தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி நிலையில், இது குறித்து விவாதிக்க கடந்த ஐந்தாம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  அந்த கூட்டத்தில் மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு … Read more

தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றம் – முதலமைச்சர் <!– தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிற… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக இரண்டாவது நாளாக காணொலி மூலம் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அதில் உரையாற்றிய அவர், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் நழுவ விட்ட வெற்றியை உள்ளாட்சி தேர்தலில் மீட்க வேண்டும் என்றும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்று … Read more