சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் காய்ச்சல் தொற்று: தேவைப்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த சீன அரசு திட்டம்

சீனாவில் அதிகரித்து வரும் காய்ச்சல் தொற்றினைத் தொடர்ந்து சில பகுதிகளில் ஊரடங்கை அறிவிக்க நகர நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர சியான் நகரரில் தேவைப்படும்போது ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஷாங்சி நகர நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், காய்ச்சல் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.   Source link

ஈரான், சவூதி அரேபியா இடையே மீண்டும் அரசாங்க உறவு… சீனாவின் முயற்சியால் இருதரப்பினரும் சமாதானமாக ஒப்புதல்

சீனாவின் சமரச முயற்சியை அடுத்து ஏழு ஆண்டுகளாக சிதைந்துக் கிடந்த அரசாங்க உறவுகளை மீண்டும் புதுப்பிக்க சவூதி அரேபியாவும் ஈரானும் ஒப்புதல் அளித்துள்ளன. பேச்சுவார்த்தைகள் மூலமாக  ஈரானுடன் அலுவல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இருதரப்பினரும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், மத்தியக் கிழக்குப் பகுதியில் இந்த முயற்சி பதற்றத்தைத் தணிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களுக்குள் தூதரகங்களைத் திறக்கவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. Source link

செக் குடியரசு நாட்டில் உள்ள மிருகக் காட்சி சாலையில் பிறந்துள்ள கருப்பு காண்டாமிருக குட்டி..!

செக் குடியரசு நாட்டில் உள்ள மிருகக் காட்சி சாலையில் கருப்பு காண்டாமிருக குட்டி பிறந்துள்ளது. ஒரு வருடத்திற்குள் இந்த மிருகக் காட்சி சாலையில் பிறந்த 3வது காண்டாமிருக குட்டி இதுவாகும். கடந்த வருடம் உலகம் முழுவதும் 6 காண்டாமிருக குட்டிகள் பிறந்த நிலையில் 3 குட்டிகள் இந்த பூங்காவில் மட்டும் பிறந்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். 36கிலோகிராம் எடையில் பிறந்த இந்த ஆண் காண்டாமிருக குட்டிக்கு Magashi என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  Source link

வடக்கு ஜெர்மனியின் ஹம்பர்க்கில் ஜெகோவா சாட்சிகள் சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு

ஹம்பர்க்: ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஹம்பர்க். இந்த நகரில் ஜெகோவா சாட்சிகள் சர்ச் (ஜெகோவா விட்னஸஸ் சர்ச்) உள்ளது. ஜெகோவா பிரிவினர் கிறிஸ்தவத்தில் இருந்து வேறுபட்டு புத்துலக நம்பிக்கையுடைய மதப் பிரிவினராக இவர்கள் கருதப்படுகின்றனர். இந்தப் பிரிவின் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகர் வார்விக் பகுதியில் உள்ளது. உலகம் முழுக்க இப்பிரிவில் 87 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஜெர்மனியில் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. … Read more

உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையில் 70,000 ரஷ்ய வீரர்கள் பலி?

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா இதுவரை 70 ஆயிரம் வீரர்களை இழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து The Centre for Strategic and International Studies என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா இழந்த வீரர்களின் எண்ணிக்கை, ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகள் நடத்திய போரை விட 35 விழுக்காடு அதிகம் என்று தெரிவித்துள்ளது. தற்போதைய போரில் உக்ரைனியர்களை விட 5 மடங்கு ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக … Read more

கடலில் 171 லட்சம் கோடி பிளாஸ்டிக் கழிவு| 171 lakh crore of plastic waste in the sea

நியூயார்க்:உலக அளவில் உள்ள பெருங்கடல்களில், 171 லட்சம் கோடி, ‘பிளாஸ்டிக்’ கழிவுகள் மிதந்து கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுதும் உள்ள கடல்களில் குவிந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவு குறித்து, சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அட்லான்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில், 1979 – 2019 வரை சேகரிக்கப்பட்ட ஆய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் விபரம்: உலக பெருங்கடல்களில் குவிந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் … Read more

சீன அதிபராக ஜி ஜின்பிங் 3-வது முறையாக பதவியேற்பு

பெய்ஜிங்: சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டு நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் சீன அதிபராக தொடர்ந்து 3-வது முறையாக ஜின்பிங் நேற்று பதவியேற்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோவுக்கு … Read more

பூமியை தாக்க வரும் விண்கல் நாசா ஆய்வு மையம் கணிப்பு| NASA Observatory predicts meteorite to hit Earth

வாஷிங்டன்:வரும் 2046ல் பூமியை விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ கணித்துள்ளது. சூரிய குடும்பம் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் சிறுகோள் அல்லது விண்கல் என அழைக்கப்படுகின்றன. சூரிய குடும்பத்துக்கு வெளியே பல விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை, அவற்றை பாதிக்கும் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றன. பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து விடும். அரிதாக சில பூமியை தாக்கும் … Read more

அமெரிக்க துாதர் கார்செட்டிக்கு செனட் குழு ஆதரவு| Senate Committee Endorses US President Garcetti

வாஷிங்டன்:இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டி, 52, என்பவரை நியமிக்க, அமெரிக்க செனட் குழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டியை, 2021ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார். பல்வேறு காரணங்களால் அவரது பெயர் நிராகரிக்கப்பட்டு வந்த சூழலில், மீண்டும் எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த பரிந்துரைக்கு, அரசு அதிகாரங்களில் வெளியுறவு கொள்கை தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் செனட் குழு ஒப்புதல் அவசியம் என்பதால், இதற்கான ஓட்டுப் … Read more

கோவில்கள் மீது தொடர் தாக்குதல் ஆஸி., பிரதமர் அல்பானிசிடம் நரேந்திர மோடி வருத்தம்| Narendra Modi regrets continuous attacks on temples in Aussie, Prime Minister Albanese

புதுடில்லி, ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவது வருத்தம் அளிப்பதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிசிடம், பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். இதையடுத்து, ”இந்திய சமூகத்தினரின் பாதுகாப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என, ஆஸி பிரதமர் உறுதி அளித்தார். ஒப்பந்தம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு, புதுடில்லியில் நேற்று முன்தினம் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more