ரஷ்ய அதிபர் புடினுடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு

இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இந்தியா-ரஷ்யா இடையேயான கூட்டாண்மையை செயல்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்ற இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.   Source link

அமெரிக்க விசா காத்திருப்பு காலம்: குறைக்க அதிபருக்கு பரிந்துரைகள்| US Visa Waiting Period: Recommendations to President to Reduce

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் :இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோர், ‘விசா’ பெறுவதற்கு காத்திருக்கும் காலம் அதிகமாக இருப்பதை குறைப்பதற்காக, அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை குழுவினர் பல பரிந்துரைகளை அளித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின், அமெரிக்காவுக்கு செல்வதற்காக விசா கேட்டு காத்திருக்கும் காலம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து மாணவர் விசா, வர்த்தக விசா, சுற்றுலா விசா பெறுவதற்கு, 400 நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது. சில … Read more

துருக்கி,சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 20,000 ஆக உயர்வு| Turkey, Syria earthquake: Death toll rises to 19,300

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கி , சிரியாவில் ஏற்பட்ட பூம்பத்தினால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால், அந்த பகுதிகளில் கட்டட குவியல்களாக காட்சியளிக்கின்றன. அதற்குள் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆங்காங்கே இடிபாடுகளில் சிக்கி சடலமாக … Read more

பூகம்பமும் பின்புலமும்: துருக்கியில் பல்லாயிர கட்டிடங்கள் நொறுங்கியது ஏன்?

துருக்கி – சிரியா பூகம்ப பலி 19,000-ஐ கடந்துள்ள நிலையில், துருக்கியில் மட்டும் இதுவரை 16,546 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 3,162 பலியானதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சூழலில், துருக்கியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் விழுந்து நொறுங்க நிலநடுக்கம் மட்டுமே காரணமா என்பதை அலசுவோம். கடந்த திங்கள்கிழமை அன்று துருக்கி நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த பூகம்பத்தால் 10 மாகாணங்களில் சுமார் 6,444 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் நம்பிக்கையை தளர விடாமல் யாரேனும் … Read more

சீன சிசிடிவி கேமராக்களை அகற்ற ஆஸ்திரேலிய அரசு முடிவு..!

சீன நிறுவனங்கள் தயாரித்த சிசிடிவி கேமராக்கள் மூலம் திரட்டப்படும் தகவல்கள் அந்நாட்டு உளவுத்துறைக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதால், ஆஸ்திரேலிய அரசாங்கம், பாதுகாப்புத்துறை தொடர்புடைய அலுவலகங்களில் பொருத்தப்பட்டிள்ள சீன சிசிடிவி கேமராக்களை அகற்ற முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் கடந்தாண்டே சீன சிசிடிவி கேமராக்களை அகற்ற உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவும் அம்முடிவுக்கு வந்துள்ளது. Source link

உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்பினால் உக்ரைன் மக்களே பாதிக்கப்படுவர் – எச்சரிக்கும் ரஷ்யா

உக்ரைனுக்கு பிரிட்டன் அல்லது மேற்கத்திய நாடுகள் போர் விமானங்களை அனுப்பினால் உக்ரைன் மக்களே பாதிக்கப்படுவர் என ரஷ்யா எச்சரித்துள்ளது. நேற்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகள் போர் விமானங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதுகுறித்து பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் என்ன ஆயுதங்களை வழங்கினாலும் ரஷ்யா ராணுவ தாக்குதலை முன்னெடுக்கும் என்றும், போர் விமானங்களை தருவது உக்ரைன் மக்களுக்கு வலியையும் துன்பத்தையும் … Read more

“இடிந்துபோன 6,400 கட்டடங்கள் ஓராண்டிற்குள் கட்டி எழுப்பப்படும்” – தையிப் எர்டோகன்

துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்துபோன ஆறாயிரத்து 400 கட்டடங்களும் ஓராண்டிற்குள் மீண்டும் கட்டி எழுப்பப்படும் என அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். கடும் குளிரில் மக்கள் நடுங்கிவருவதாகவும், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க கேஸியன்டாப் நகரில் நிலநடுக்க பாதிப்புகளை அதிபர் எர்டோகன் ஆய்வு செய்தார். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 63 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்… Source link

எரிவாயு கசிவால், அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடி விபத்து.. 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு..!

ரஷ்யாவின் நொவசிபிர்ஸ்க் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவால் நேர்ந்த பயங்கர வெடி விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் 2 வாயில்கள் இடிந்து தரைமட்டமானதுடன், 30 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. எரிவாயு கசிவு தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. Source link

சிரியாவில், நில நடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு..!

சிரியாவில், நில நடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான். ஜேன்ட்ரிஸ் நகரில், தரைமட்டமான 5 மாடி கட்டிடத்தின் இடிபாடு குவியல்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மோஸ் என்ற அந்த சிறுவனின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்த நிலையில், தாய், தந்தையரைத் தேடி அவன் கதறியழுத காட்சிகள் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. Source link

பாகிஸ்தானில், அடுத்த வாரம் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என தகவல்.. விற்பனையை குறைத்த எண்ணெய் நிறுவனங்கள்!

பாகிஸ்தானில், அடுத்த வாரம் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானதால், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், லாபமீட்டும் நோக்கில் வாடிக்கையாளர்களுக்கு குறைவான அளவில் பெட்ரோல் விற்பனை செய்துவருகின்றனர். பல பெட்ரோல் நிலையங்களில், இருசக்கர வாகனங்களில் 2 லிட்டர் பெட்ரோல் மட்டுமே நிரப்பபடுகின்றன. பெட்ரோல் விலையை உயர்த்தப்போவதில்லை என்றும், அடுத்த 20 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் இருப்பு உள்ளதாக தெரிவித்த பாகிஸ்தான் அரசு, செயற்கை தட்டுப்பாடை ஏற்படுத்தும் எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more