துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

இஸ்தான்புல், துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இந்த நிலையில், இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15, 383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12 ஆயிரத்து 391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2 ஆயிரத்து 992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது. … Read more

தம்பிக்கு கவசமான தமக்கை: சிரிய சிறுமிக்கு உலக சுகாதார நிறுவனத் தலைவர் பாராட்டு

டமஸ்கஸ்: கட்டிட இடிபாடுகளில் 17 மணி நேரம் சிக்கியிருந்தும் தன் தம்பிக்கு பாதுகாப்பாக துணிச்சலுடன் இருந்த சிறுமியை உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் வெகுவாகப் பாராட்டியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்ப பாதிப்பால் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இந்நிலையில் சிரியாவில் மீட்புப் பணிகளின் போது இடிபாடுகளுக்கு இடையே இருந்து ஒரு சிறுமியும் அவரது சகோதரரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமியின் வீடியோ உலகம் முழுவதும் வைரலான நிலையில் அதனைப் பகிர்ந்த உலக … Read more

நிவாரணப் பொருட்களுடன் இதுவரை 6 விமானங்களை துருக்கிக்கும், சிரியாவுக்கும் அனுப்பியது இந்தியா..!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ‘ஆபரேசன் தோஸ்த்’ என்ற பெயரில் சி17 குளோப்மாஸ்டர் விமானங்களில் மருந்து, உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இடிபாடுகளில் உள்ளவர்களை மீட்க இரண்டு மோப்ப நாய்களும் 51 தேசியப் பேரிடர் படை வீரர்களும் துருக்கிக்குப் புறப்பட்டுச் சென்றனர். துருக்கி மற்றும் சிரியாவுக்கு இந்தியா இதுவரை 6 விமானங்களைஅனுப்பி வைத்துள்ளது. துருக்கிக்கு 108 டன்கள் நிவாரணப் பொருட்களும் சிரியாவுக்கு 6 டன்கள் நிவாரணப் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.92 கோடியாக உயர்வு

ஜெனீவா, சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த நிலையில்,உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,775,389 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

நோய்களை கண்டறிய மோப்பம் பிடிக்கும் ரோபோ – இஸ்ரேல் அறிமுகம் செய்கிறது

டெல்அவிவ்: உலகிலேயே முதல்முறையாக உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோப்பம் பிடிக்கும் அல்லது நுகரும் ரோபோக்களை இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். வெட்டுக்கிளிகள் தங்கள் தலை மீதுள்ள 2 உணர்கொம்புகள் மூலம் பொருளை மோப்பம் பிடிக்கின்றன. உணர்கொம்புகளை போன்ற உணர்கருவியை இஸ்ரேலின் டெல் அவிவ் பல்லைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர். இந்த உணர்கருவியை ரோபோவில் பொருத்தி அதற்கு மோப்பம் பிடிக்கும் திறனை கொடுத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் கட்டமைப்புகளுடன் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. நோய்களை கண்டறியவும் பாதுகாப்பு … Read more

துருக்கியில் மாயமான பெங்களூருவைச் சேர்ந்தவரைத் தேடும் பணி தீவிரம்..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மாயமான பெங்களூருவைச் சேர்ந்தவரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சகத்தின் மேற்குப் பகுதி செயலாளர் சஞ்சய் வர்மா, இந்தியர்கள் குறித்த தகவல்களைப் பெற அதானா நகரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் 10 இந்தியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தொலைதூர பகுதிகளில் சிக்கியிருந்தாலும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதானாவுக்கு வந்த பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார். Source link

சீன பலூன் விவகாரம்: வான்வெளி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்கா வான் பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை வெள்ளை நிறத்திலான மர்ம பலூன் பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் இதை சீனா மறுத்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவின் பேரில் மர்ம பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்கா போர் விமானத்தில் இருந்து ஏவுகணை மூலம் அந்த பலூன் சுடப்பட்டது. இதில் அந்த பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினர் அதனை தேடி … Read more

துருக்கி – சிரியா பூகம்ப உயிரிழப்பு 15,000-ஐ தாண்டியது: கடும் குளிரில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க போராட்டம்

சன்லிர்ஃபா: துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000 தாண்டியுள்ளது. இதனால் துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள 10 மாகாணங்களில் 3 மாத காலத்துக்கு அவசர நிலையை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்த வர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப் பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 20,000-மாக அதிகரிக்கலாம். 2 கோடியே 30 லட்சம் பேர்பாதிக்கப்படலாம். உலக நாடுகள் துருக்கிக்கு … Read more

தாய்லாந்தில் 42 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 19 மாத பெண் குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

தாய்லாந்தில், 42 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 19 மாத பெண் குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. மியான்மர் எல்லை அருகே உள்ள தக் மாகாணத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை, அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை … Read more

உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி

வாஷிங்டன், உலகளாவிய மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனம் வால்ட் டிஸ்னி. பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா பல்வேறு நாடுகளில் உள்ளது. வால்ட் டிஸ்னியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, கொரோனா காலத்தில் 2020.-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், 5.5 அமெரிக்க டாலர்கள் செலவை மிச்சப்படுத்த 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. 7 ஆயிரம் … Read more