பாகிஸ்தான் திவால் ஆகும் – பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும் அங்கு உணவு தானியங்களின் விலை தாறுமாறாக எகிறியது. இதனால் அரசின் சார்பில் மானிய விலையில் உணவு … Read more

31 வயதில் 57 குழந்தைகளுக்கு தந்தை… பாலியல் வாழ்க்கையையே பார்க்கவில்லை என ஆதங்கம்

கலிபோர்னியா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் கைலே கோர்டி (வயது 31). இவருக்கு அதிக அளவில் பெண்கள் செய்தி அனுப்புகின்றனர். அதில், எங்களுக்கு குழந்தை வேண்டும். அதற்கு உதவ வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கும். நம்மூரில் உடல் உறுப்பு நன்கொடை, ரத்த கொடை உள்ளிட்ட கொடையாளர்கள் போன்று கைலே விந்தணு கொடையாளராக உள்ளார். இதனால், தேவைப்பட்ட பெண்களுக்கு வேண்டிய நேரத்தில் இந்த நன்கொடையை அளித்து வருகிறார். இதனை இவர் இலவச சேவையாகவே செய்து வருகிறார். இவரால் … Read more

அமெரிக்கா நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீப்பற்றி வானுயர எழுந்த கரும்புகை..!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் லா சாலே நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடிநீரை சுத்திகரிப்பதற்கான ரசாயனங்களை தயாரிக்கும் அந்த ஆலையில், புதன் கிழமை காலை தீப்பற்றி, வானுயர கரும்புகை எழுந்தது. இதில் ஆலை முழுவதும் எரிந்து சேதமடைந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் … Read more

மாலியில் ராணுவ தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் சாவு: 14 ராணுவ வீரர்களும் உயிரிழப்பு

பமாக்கோ, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் மத்திய பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் முகாமிட்டிருந்தனர். அங்கு அவர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 2 வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவங்களில் 14 ராணுவ வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். தினத்தந்தி Related Tags : Mali military … Read more

சீனாவில் பாதசாரிகள் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு..!

சீனாவின் குவாங்சூவில் பாதசாரிகள் மீது கார் மோதியதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் படுகாயமடைந்தனர். பாதசாரிகள் சாலையை கடக்கும்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியதில், பாதசாரிகள் தூக்கி வீசப்பட்டனர். கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக, சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. Source link

நீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு பரிந்துரை

நியூயார்க், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றானது பல வகைகளாக உருமாறி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில், கடந்த 7-ந்தேதி வரையிலான அறிக்கையின்படி, 27.6 சதவீதம் மக்கள் கொரோனாவின் எக்ஸ்.பி.பி.1.5 என்ற உருமாறிய அதிதீவிர பரவல் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவின் இந்த ஒமைக்ரான் வைரசின் துணை … Read more

"கொரோனா நோயாளிகள் தற்கொலை.." – வெளியான அதிர்ச்சி தகவல்..!

பெய்ஜிங், சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசு மறுக்கிறது. இந்த சூழலில் அந்நாட்டின் கிராமபுறங்களில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழலில் கிராமபுற மருத்துவமனைகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் அவை மூடப்பட்டுள்ளதாகவும், நடுத்தர நகரங்களுக்கு மக்கள் சிகிச்சைக்கு சென்றாலும் அங்கும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம் முதியவர்களை கொரோனா அதிகமாக பாதிக்கும் நிலையில், அவர்கள் சிகிச்சை … Read more

அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த 71 வயதான ஜில் பைடன் மேரிலாந்தில் உள்ள தேசிய ராணுவ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வலது கண் மற்றும் மார்பக பகுதிகளில் இருந்த புற்றுநோய் கட்டிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். ஜில் பைடனுக்கு அறுவை சிகிச்சையை முன்னிட்டு அதிபர் ஜோ பைடன் 8 மணி நேரத்திற்கும் மேல் மருத்துவமனையில் இருந்துள்ளார். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள … Read more

ரஷ்யாவின் தாக்குதலில் கெர்சனில் உள்ள மகப்பேறு மருத்துவமனை சேதம்..!

ரஷ்யா நடத்திய தாக்குதலில், உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக, ஆளுநர் யாரோஸ்லாவ் யானுஷெவிச் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் மருத்துவமனை கட்டடத்தில் சேதம் ஏற்பட்டதாகவும், எனினும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாதிப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனிடையே உக்ரைனின் கிழக்கு நகரமான சோலேடாரில் கடும் சண்டை நடைபெற்று வருவதாகவும், ரஷ்யா தனது சொந்த மக்கள் ஆயிரக்கணக்கானோரை படுகொலைக்கு தள்ளுவதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு துணை அமைச்சர் ஹன்னா மல்யார் குற்றஞ்சாட்டியுள்ளார். Source link