பாம் புயலால் அலறும் அமெரிக்கா – 18 பேர் பலி… 7 லட்சம் பேர் தவிப்பு!

Bomb Cyclone : அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாம் புயல் தற்போது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டிய இந்த காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும்.  எனவே, அங்கு மக்களின் இயல்பு வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் பனிக்காலத்திற்கு என்று தயாராகிக்கொள்வார்கள். ஆனால், இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர்களால் நிம்மதியாக கொண்டாட இயலாதப்படி பாம் புயல் ஒன்று உருவெடுத்துள்ளது.  ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து கிளம்பியுள்ள புயலுக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

'இனி கொரோனா பாதிப்புகளை வெளியிட போவதில்லை' – சீனா அதிரடி!

இன்று முதல் கொரோனா தினசரி பாதிப்புகளை வெளியிடப் போவதில்லை என, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அதிரடியாக தெரிவித்து உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து யாராலும் மறுக்க முடியாது. இந்த வைரஸ் தொற்றுக்கு … Read more

அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான பனிப்புயலால் களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

அமெரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு வீசி வரும் குளிர்கால பனிப்புயலால், பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்துள்ளன. நியூயார்க்கில் கடும் பனிப்புயல் காரணமாக, பஃபலோ(Buffalo) நகரில் வீடுகளும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனியால் சூழப்பட்டன. சாலைகளில் பல அடி உயரத்திற்கு குவிந்துள்ள பனியால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். கடும்பனி காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. வாகனங்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்தை எதிர்கொள்வதால், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Source … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் – இந்தியா சிறப்பாக செயல்பட்டதற்கு உலக நாடுகள் பாராட்டு

ஐ.நா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக் காலத்தில், இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்தன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது தனது பதவிக்காலத்தை இந்த மாதத்துடன் நிறைவு செய்தது. இந்த 2 ஆண்டு காலத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா இரண்டு முறை மாதாந்திர தலைமை பொறுப்பையும் ஏற்றது. சுழற்சி முறையில் வரும் இந்த பொறுப்பை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலும், … Read more

இந்திய ஓட்டுநருக்கு துபாய் லாட்டரி சீட்டில் ரூ.33 கோடி பரிசு..!

துபாயில் பணியாற்றி வரும் இந்திய ஓட்டுநருக்கு அந்நாட்டின் லாட்டரி சீட்டு குலுக்கலில் 33 கோடி ரூபாய் பரிசாக கிடைத்து. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலிருந்து பணிக்குச் சென்ற அஜய்ஓகுலா, அங்குள்ள நகைக்கடையில் மாதம் 3 ஆயிரத்து 200 திர்ஹம் சம்பளத்தில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது 15 மில்லியன் திர்ஹம் பரிசாக கிடைத்துள்ளது. இதனை தன்னால் நம்ப முடியவில்லையென தெரிவித்த அஜய்ஓகுலா, பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்களும் இதனை நம்பவில்லையென கூறியதோடு, ஊருக்கு திரும்பி அறக்கட்டளை … Read more

என்ஜிஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை: தலிபான் அரசு அதிர்ச்சி உத்தரவு..!!

காபூல், ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்தனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இந்த தடைக்கு எதிராக மாணவ, மாணவிகள் மற்றும் … Read more

ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றார் சிதிவேனி ரபுகா

ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் கடந்த 2006-ம் ராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஃபிராங்க் பைனிமராமாவின் 16 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 ரபுகாவிற்கு ஆதரவாகவும், 27 பேர் முன்னாள் பிரதமர் ஃபுராங்க் பைனிமராமவிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கட்சியின் தலைவரான ரபுகா, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். Source link

பாக்.,கில் தற்கொலை படை தாக்குதல் பயங்கரவாதிகள் உட்பட மூவர் பலி | Three killed including terrorists in suicide squad attack in Pak

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில், இரண்டு பயங்கரவாதிகள், ஒரு போலீஸ்காரர் பலியாகினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், முக்கிய ராணுவத் தளம் அமைந்துள்ள ராவல்பிண்டி அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில், நேற்று முன்தினம் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, காரில் வந்த பெண் உட்பட இரு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், அவர்களும், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் – … Read more