சர்வதேச அணுசக்தி முகமையில் சீன தீர்மானத்தை முறியடித்த இந்தியா – மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: சர்வதேச அணுசக்தி முகமையில் சீனாவின் வரைவு தீர்மானத்தை இந்தியா முறியடித்தது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் கூட்டணியை அமைத்துள்ளன. ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில் சீன கடற்படை ஏராளமான ஆளில்லா நீர்மூழ்கிகளை உலவ விட்டிருக்கிறது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் இந்திய, பசிபிக் பிராந்திய கடல் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்கா, இங்கிலாந்து, … Read more

கமலா ஹாரிசிடம் இருந்த அணு ஆயுதங்களுக்கான அதிகாரம்| Dinamalar

வாஷிங்டன் அமெரிக்காவின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம், இந்தியாவை பூர்வீகமாக உடைய துணை அதிபர் கமலா ஹாரிசிடம், 85 நிமிடங்கள் இருந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள், அதைப் பயன்படுத்த உத்தரவிடக் கூடிய அதிகாரம், நாட்டின் அதிபரிடம் இருக்கும். ‘நியூக்ளியர் புட்பால்’ என்று அழைக்கப்படும், கால்பந்து அளவிலான இந்த சாதனம், அமெரிக்க அதிபருடன் எப்போதும் இருக்கும். அவருடன் இருக்கும் உயர் ராணுவ அதிகாரி இதை எப்போதும் சுமந்து … Read more

2023 மே மாதம் சார்லஸ் முடிசூட்டு விழா ?| Dinamalar

ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் செப்டம்பர் 9-ம் தேதி காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இதையடுத்து எலிசபெத் மகனான சார்லஸ், மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் சார்லஸ் முடிசூட்டு விழா எப்போது என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், வரும் 2023-ம் ஆண்டு மே 6-ம் தேதி முடிசூட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளதாக அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் … Read more

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு இந்தியா எதிர்ப்பு| Dinamalar

நியூயார்க் : ரஷ்யா – உக்ரைன் போர் பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. சமீபத்தில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா இணைத்துக்கொண்டது. இந்த இணைப்பை கண்டிக்கும் தீர்மானத்தின் மீது ஐ.நா., சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. இதற்கு ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என ரஷ்யா கோரியது. ஆனால் வெளிப்படையாக நடக்க வேண்டும் என இந்தியா உட்பட 107 நாடுகள் ஓட்டளித்தன. இதையடுத்து ரஷ்யாவின் ரகசிய ஓட்டெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாக 13 நாடுகள் … Read more

இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல்!

இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சியை இந்தியாவின் தேசிய பாதுகாப்புப் படை நடத்துகிறது. இதில் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. 2-ம் கட்டமாக கடந்த 8-ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி நாளை மறுநாள் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி … Read more

சீக்கிய குடும்பம் கொலைகுற்றவாளி மீது வழக்கு பதிவு| Dinamalar

சான்பிரான்சிஸ்கோ:அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றவர் மீது, நான்கு கொலை வழக்குகள் தனித்தனியாக தொடரப்பட்டுள்ளன. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்புரைச் சேர்ந்த ஒரு சீக்கிய குடும்பம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெர்செட் பகுதியில் வசித்து வந்தனர். சமீபத்தில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தி செல்லப்பட்டனர். ஜஸ்தீப் சிங், 36, அவருடைய மனைவி ஜஸ்லீன் கவுர், 27, எட்டு மாதக் குழந்தை ஆரூஹி தெரி மற்றும் … Read more

இன்று உலக மூட்டுவலி தினம்| Dinamalar

மூட்டுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக். 12 உலக மூட்டுவலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியது. இருப்பினும் முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலி ‘மூட்டுவலி’ (ஆர்த்ரிடிஸ்) எனப்படுகிறது. இதற்கு உடல்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல், கிருமித்தொற்று, காச நோய், யூரிக் அமிலம் மூட்டுகளில் படிவது போன்றவை பொதுவான காரணங்கள். முதியோர் மட்டுமல்லாமல் இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. முதுமையில் மூட்டுவலி : வயதாகஆக, குருத்தெலும்பு … Read more

பிரிவினைவாத தலைவர் மரணம்| Dinamalar

புதுடில்லி, காஷ்மீர் பிரிவினைவாத தலைவரும், மறைந்த முன்னாள் ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கீலானியின் மருமகனுமான அல்தாப் அஹமது ஷா, சிறுநீரக புற்றுநோயால் நேற்று உயிரிழந்தார். அல்தாப் அஹமது ஷா, ௬௬, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை இவரை விசாரித்தது. பின், 2017ல், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. புதுடில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்க, புதுடில்லி உயர் நீதிமன்றம் … Read more

நியூசிலாந்து கடற்கரையில்500 திமிங்கலங்கள் உயிரிழப்பு| Dinamalar

வெலிங்டன், நியூசிலாந்தின் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 500 ‘பைலட்’ திமிங்கலங்கள் உயிரிழந்தன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில், பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. நியூசிலாந்து நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள சாத்தம் தீவில் கடந்த 7ம் தேதி 250 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. மூன்று நாட்களுக்கு பின் அருகே உள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இவை கரை ஒதுங்குவதற்கான சரியான காரணம் … Read more

சீனாவில் கொரோனா அதிகரிப்பு ஊரடங்கால் பொதுமக்கள் அவதி| Dinamalar

பீஜிங்:சீனாவின் பல்வேறு மாகாணங்களில், தற்போது கொரோனா பரவல் மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் ஊடரங்கு மற்றும் பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நம் அண்டை நாடான சீனாவின் ஷான்சி மாகாணத்தில் பென்யாங்க் நகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், அங்கு நேற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஹோஹாட் நகரில் கடந்த ௧௨ நாட்களில் ௨,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதிக்கு வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜின்ஜியாங் மாகாணம், ஷாங்காய் மற்றும் நாட்டின் தலைநகரான … Read more